<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781</id><updated>2012-02-26T17:48:11.885+03:00</updated><category term='இஸ்லாமிய நெறிகள்'/><category term='கிராமத்து மின்னல்'/><category term='moolathanam'/><category term='சமையல் குறிப்புகள்'/><category term='பள்ளி நினைவுகள்'/><category term='மண்வாசனை'/><category term='சமையல்'/><category term='முதலீடு'/><title type='text'>தா.ஜபருல்லாஹ்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>28</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-7359401716260904413</id><published>2011-09-10T19:43:00.004+03:00</published><updated>2011-09-10T20:06:21.147+03:00</updated><title type='text'>குவைத் நினைவுகள்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-PvUF5bieubA/TmuV6dXhIyI/AAAAAAAAAGE/LYBvn0SqMsA/s1600/blog%2Bkwt.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5650774989014639394" border="0" alt="" src="http://4.bp.blogspot.com/-PvUF5bieubA/TmuV6dXhIyI/AAAAAAAAAGE/LYBvn0SqMsA/s320/blog%2Bkwt.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;முதல் அயல் நாட்டு பணிவாய்ப்பு.ஏப்ரல் 2001 முதல் ஏப்ரல் ௨00௭ வரை.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;வாய்ப்பு சிலசமயம் தேர்ந்தெடுக்கப்படுவது,பெருவாரியாக அமைவது.பல கசப்பான அனுபவங்களையும், பொருளாதார ரீதியாக ,மற்றும் மனித உணர்வுகளைப்புரிந்துகொள்ள , வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கான நிறைய ரகசியங்களை எடுத்துச்செல்லும் காலச்சுவடுகளுடன் எங்கள் வாழ்க்கைக்கான புரிதல்களின் அறிமுகமாக ஒரு புதிய உயிரை இந்த உலகுக்கு பரஸ்பரம் அறிமுகப்படுத்தும் வாய்ப்பு பெற்ற இனிய தருணங்கள். இறைவனுக்கு நன்றி.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-7359401716260904413?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/7359401716260904413/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2011/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/7359401716260904413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/7359401716260904413'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2011/09/blog-post.html' title='குவைத் நினைவுகள்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-PvUF5bieubA/TmuV6dXhIyI/AAAAAAAAAGE/LYBvn0SqMsA/s72-c/blog%2Bkwt.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-4572908637967158443</id><published>2010-09-09T23:41:00.000+03:00</published><updated>2010-09-10T00:10:28.596+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மண்வாசனை'/><title type='text'>அனாமிகாக்கள்..!</title><content type='html'>தற்செயலாக பொதிகை அலைவரிசையில் ஒரு ஆவணப்படம் பார்த்தேன்.தொட்டில் குழந்தை திட்டம் பற்றியது. ஒரு தம்பதி தங்கள் குழந்தையை 'சேர்க்க' காப்பாளரிடம் இசைவு உறுதிப்படுத்தும் காட்சிகள்.&lt;br /&gt;கணவர் கல் நெஞ்சோடு உறுதியாகப்பேச, தாய் உள்ளமோ தவிக்க... நெஞ்சைப்பிசையும் சம்பவம் அது.&lt;br /&gt;இந்தக்குழந்தை வளர்ந்து ஆளானதும் சந்திக்கபோகும் பிரச்சினைகள் ஏராளம்.&lt;br /&gt;எனது நண்பர் ஒருவர் சமூக ஆர்வலர், சில பிரபலங்கள் ஆதரவுடன் ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்றை சென்னையில் பராமரிக்கும் பொறுப்பிலிருந்தார்.நானும் ஓரிருமுறை அந்த பிள்ளைகளை சந்தித்து வந்திருக்கிறேன்.பொருளுதவி செய்ய நிறைய நல்லுள்ளங்கள் இசைந்திருக்கின்றனர்.இதையெல்லாம் விட தங்கள் மீதும் அன்பு செலுத்த ஆள் இருக்கின்றனர் என்கிற உயிர்த்துடிப்பு அந்தக்கண்களில் இருப்பதை ,அவர்களை நேரில் சந்திக்கும்போது உணர்ந்தேன்.&lt;br /&gt;&lt;span&gt;காலப்போக்கில் நண்பர் அப்பொறுப்பிலிருந்து கனத்த மனதோடு விலகிவிட்டார் என அறிந்தேன்.விசாரித்தபோது பெண் பிள்ளைகள் வளர்ந்து பருவ வயதை அடையும் தருணங்களில் அவர்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை, அவர்களைக்கட்டுப்படுத்தி வைப்பதில் உள்ள சிரமங்களை விவரித்தார்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;தொட்டில் குழந்தை திட்டம் துவக்கிய அரசியல் தலைவர்கள், தற்சமயம் அத்திட்டம் குறித்தெல்லாம் யோசிக்க நேரமோ,வாய்ப்போ இல்லை.இந்தக்குழந்தைகளின் எதிர்காலம் இறையருளால் சரியாக அமையவேண்டும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;ஜெயகாந்தனின் 'நிக்கி' என்ற சிறுகதை நினைவில் வந்தது.(கதையில் வரும் கதாபாத்திரத்தோடு ஒப்பிடவில்லை, கதையின் கரு மட்டும் எண்ணிப்பாருங்கள்.)&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-4572908637967158443?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/4572908637967158443/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/4572908637967158443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/4572908637967158443'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/09/blog-post.html' title='அனாமிகாக்கள்..!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-9087525007846872593</id><published>2010-08-28T13:20:00.000+03:00</published><updated>2010-08-29T17:16:53.967+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மண்வாசனை'/><title type='text'>It's a breaking news...!</title><content type='html'>தமிழ் வார இதழ்களில் முதன்மை வரிசையிலுள்ள நிறுவனம் வெளியிடும் வாரமிருமுறை வெளியாகும் இதழ், 'கிரைம்' என்ற தலைப்பின் கீழ் வழமையாக சுவாரஸ்யமான செய்திகளை பதிவு செய்கிறது.&lt;br /&gt;கொஞ்சம் சிந்தித்துபார்த்தால்நாம் காட்டும் 'அறிந்துகொள்ளும் ஆர்வத்தை'( curiosity)எவ்வளவு மட்ட ரகமாக உத்தேசித்து,ஊடகத்துறை வியாபாரம் செய்கிறது என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.பெரும்பாலும் பாலியல் சம்பந்தப்பட்ட வன்முறைகள், மட்டரகமான மூன்றாம் தர சிந்தனைகளைத்தூண்டும் வகையில் செய்தித்தொகுப்புகள் அதிகம் இடம் பெறுகின்றன.. (உதாரணம் : திருச்சியில் சில குடும்பப்பெண்கள் விபசாரத்திற்கு இசைவது, தரகர் உரையாடல் வடிவில்) .இதற்கு உள்ளூர் சமுக சேவகர் ஒருவரை சாட்சிக்கு வைத்துக்கொள்வது அநியாயம்.&lt;br /&gt;இந்த நிறுவனம் இணைய சந்தாதாரர்களை அதிகம் கொண்டது.&lt;br /&gt;"It's a breaking news" என்ற இந்திப்படம் பார்த்தபோது இந்த நிதர்சனம் உரைத்தது. வாசகனுக்கு விழிப்புணர்வு கூடுதலாக தேவை.இல்லையேல் நம்மையறியாமல் இந்த இந்த மாதிரி வக்கிர ரசனைக்கு அடிமையாகும் அபாயம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;span style="font-size:0;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-9087525007846872593?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/9087525007846872593/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/08/its-breaking-news.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/9087525007846872593'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/9087525007846872593'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/08/its-breaking-news.html' title='It&apos;s a breaking news...!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-5777704870043136605</id><published>2010-03-01T10:16:00.000+02:00</published><updated>2010-03-01T10:42:48.200+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலீடு'/><title type='text'>கேள்வி-பதில்</title><content type='html'>&lt;p class="style10"&gt;ஒரு கம்பெனியின் லாபம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது. ஆனால் போனஸ் பங்குகள் அளித்ததால் இ.பி.எஸ். குறைந்திருக்கிறது. லாபம் அதிகரித்ததை வைத்து அந்த கம்பெனியின் பங்குகளை வாங்கலாமா? அல்லது இ.பி.எஸ். குறைந்ததால் அதை வாங்காமல் விட்டுவிடலாமா? &lt;p align="right"&gt;- &lt;strong&gt;ரகோத்தமன்,&lt;/strong&gt; சென்னை.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="style9"&gt;&lt;img hspace="9" vspace="9" align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p56a.jpg" width="111" height="150" /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;எம்.சேகர்,&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;strong&gt; டைரக்டர், தோஹா புரோக்கரேஜ் அண்ட் ஃபைனான்ஸியல் சர்வீசஸ்.&lt;/strong&gt;&lt;/em&gt; &lt;/p&gt;&lt;p&gt;''ஒரு நிறுவனம் லாபத்தில் இயங்குவதால்தான் அதன் முதலீட் டாளர்களுக்கு ஊக்கத்தொகையாக போனஸ் பங்குகளை வழங்குகிறது. போனஸ் பங்குகளைக் கொடுப்பதால் அதன் பங்கு மூலதனம் அதிகரிக்கவே செய்யும். அப்போது இ.பி.எஸ். குறையவே செய்யும். இ.பி.எஸ். குறைந்துவிட்டது என்பதை மட்டும் வைத்து ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்குவதோ, விற்பதோ கூடாது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சி, வருமானம், நிறுவனத்துக்கு வரும் ஆர்டர்களை வைத்து பங்கை வாங்கவோ, விற்கவோ செய்யலாம்.&lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p class="style8"&gt;ஒருவரின் ஆண்டு வருமானத்துக்கு பத்து மடங்குக்கு ஈடாக ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுக்கவேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் அஞ்சல் துறையில் உள்ள போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் மூலம் ஒருவர் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரை மட்டுமே ஆயுள் காப்பீடு எடுக்கமுடியும். போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் பிற இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்- இவற்றில் எது சிறந்தது ?&lt;/p&gt;&lt;p align="right"&gt;- &lt;strong&gt;எஸ்.சுந்தரலிங்கம்,&lt;/strong&gt; ஈரோடு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="style9"&gt;&lt;img hspace="9" vspace="9" align="left" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p56B.jpg" width="111" height="150" /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஹரிஹரன், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;strong&gt;நெஸ்டோ குரூப் ஆஃப் கம்பெனிஸ்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;''அஞ்சல் துறை, போஸ்டல் லைஃப் இன்ஷூரன்ஸை ஆரம்பித்தது கிராமப்புற மக்களும் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டும் என்பதற்காகத்தான். அதனால் அதில் குறைவான தொகைக்கு மட்டுமே ஆயுள் காப்பீடு எடுக்கமுடியும். பிற இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் பல வகையான பாலிசிகள், ஃபண்ட் ஆப்ஷன்கள் உள்ளன. எனவே உங்களுக்கு எது சிறந்தது என்று ஆராய்ந்து தேவைக்குத் தகுந்தாற்போல் பாலிசி எடுத்துக்கொள்ளலாம். உங்கள் தேவை மூன்று லட்சத்துக்குள் எனில் அஞ்சல் துறையே போதுமானது. அதற்கு மேலும் வேண்டுமென்றால் மற்றவற்றை நாடவும். மேலும் வருமானத்தைப் போல் பத்து மடங்கு அளவு பாலிசி எடுக்கும்போது டேர்ம் பாலிசிதான் சிறந்தது. &lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p class="style10"&gt;எனது திருமணத்தின்போது என் அம்மா எனக்கு சீதனமாக கொடுத்த பரம்பரை நகை உள்ளது. அதனை விற்க நேர்ந்தால் மூலதன ஆதாய வரி கட்டவேண்டுமா? &lt;/p&gt;&lt;p align="right"&gt;- &lt;strong&gt;அனிதா,&lt;/strong&gt; மார்த்தாண்டம்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="style9"&gt;&lt;img hspace="9" vspace="9" align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p57a.jpg" width="111" height="150" /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஜி.ஆர்.ஹரி, &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;strong&gt;ஆடிட்டர், மனோகர் சவுத்ரி அண்ட் அசோசியேட்ஸ்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;''பரம்பரை நகை நீண்டகால உடைமையா, குறுகியகால உடைமையா என்று பார்க்கவேண்டும். நீங்கள் அந்த நகையை 36 மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் அது நீண்டகால உடைமை. எனவே அதற்கு நீண்டகால மூலதன ஆதாய வரியாக இன்டெக்ஸேஷனுக்குப் பிறகு 20 சதவிகிதம் கட்டவேண்டும். 36 மாதங்களுக்கு குறைவாக நீங்கள் அதை வைத்திருந்தால் குறுகியகால மூலதன ஆதாய வரியாக உங்களது அடிப்படை வருமானவரி வரம்புப்படி வரி கட்டவேண்டும். அப்படியில்லையென்றால் மத்திய அரசு இரண்டு திட்டங்களை வைத்துள்ளது. நேஷனல் ஹய்வேஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா, ரூரல் எலெக்டிரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் இந்த இரண்டு திட்டங்களில் ஏதாவது ஒன்றில் நகையை விற்ற பணத்தை டெபாஸிட் செய்து மூன்று வருடங்களுக்கு எடுக்காமல் இருக்கவேண்டும். போட்ட பணத்துக்கு வட்டியும் தரப்படுகிறது. இவ்வாறு செய்யும்பட்சத்தில் நகையை விற்றதற்கு வரி கட்ட வேண்டியது இருக்காது'' &lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p class="style8"&gt;மத்திய அரசு ஊழியராகிய நான், எனது மாமியார் பெயரில் உள்ள சொத்தை அடமானம் வைத்து ஒரு தனியார் வங்கியில் ரூ.5 லட்சம் வீட்டுக்கடன் இருவர் பெயரிலும் வாங்கினேன். அந்தக் கடனை வேறு ஒரு வங்கிக்கு என் பெயரில் டேக் ஓவர் செய்ய நினைக்கிறேன். இது சாத்தியமா? மாற்றமுடியுமா? &lt;/p&gt;&lt;p align="right"&gt;- &lt;strong&gt;பழனிசாமி, &lt;/strong&gt;பாலக்காடு.&lt;/p&gt;&lt;p&gt;''ரத்த சொந்தங்களுக்கு இடையே உள்ளவர்கள் ஒன்றுசேர்ந்து கடன் வாங்கியிருந்தால் மட்டுமே அப்படி கடனை டேக் ஓவர் செய்யமுடியும். உதாரணத்துக்கு உங்களது மாமியாரும் உங்கள் மனைவியும் சேர்ந்து கடன் வாங்கியிருந்தால் உங்களது மனைவி பெயருக்கு அந்தக் கடனை டேக் ஓவர் செய்யமுடியும். ஏனென்றால் அவர்கள் இருவரும் ரத்தசொந்தங்கள். எனவே உங்கள் பெயரில் இருக்கும் வீட்டுக்கடனை வேறு ஒரு வங்கிக்கு டேக் ஓவர் செய்யமுடியாது. &lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p class="style10"&gt;வீட்டுவசதி வாரிய வீட்டின் பத்திரத்தை வைத்து தனிநபர் கடன் வாங்கலாமா?&lt;/p&gt;&lt;p align="right"&gt;-&lt;strong&gt; ஆர்.ஈஸ்வரி,&lt;/strong&gt; கோயம்புத்தூர்.&lt;/p&gt;&lt;p&gt;''வீட்டுவசதி வாரிய வீட்டின் பத்திரத்தை வைத்து வீட்டு அடமானக் கடன் மட்டுமே வாங்கமுடியும். இதற்கு குறைந்தபட்சமாக பிடித்தம்போக 12 ஆயிரம் ரூபாயாவது நீங்கள் சம்பளம் வாங்குபவராக இருக்கவேண்டும். கடனாக வாங்கும் பணத்தை ஐந்து ஆண்டுகளுக்குள் திரும்பக் கட்டவேண்டும். வீட்டுவசதி வாரிய வீட்டின் பத்திரத்தை வைத்து தனிநபர் கடன் வாங்க முடியாது. பொதுவாக தனிநபர் கடனுக்கு சொத்து அடமானம் கேட்பதில்லை. வருமானச் சான்றிதழ் கேட்பார்கள். வட்டியும் அதிகம்.&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;table class="big_bluecolor_english_text" border="0" cellspacing="0" cellpadding="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td colspan="2"&gt;&lt;span class="orange_color_heading"&gt;&lt;p class="style8" align="center"&gt;&lt;img hspace="9" vspace="9" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p44.gif" width="400" height="175" /&gt;&lt;br /&gt;&lt;img vspace="9" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p44a.jpg" width="300" height="198" /&gt; &lt;/p&gt;&lt;table border="0" cellspacing="0" cellpadding="0" width="250" align="right"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div align="center"&gt;&lt;div&gt;&lt;script type="text/javascript"&gt;&lt;!-- google_ad_client = "pub-2591855995238005"; /* 250x250, created 2/21/10 */ google_ad_slot = "0771795197"; google_ad_width = 250; google_ad_height = 250; google_language = 'en'; //--&gt;&lt;/script&gt;&lt;br /&gt;&lt;script type="text/javascript" src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;&lt;/script&gt;&lt;br /&gt;&lt;script&gt;google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);&lt;/script&gt;&lt;ins style="BORDER-BOTTOM: medium none; POSITION: relative; BORDER-LEFT: medium none; PADDING-BOTTOM: 0px; MARGIN: 0px; PADDING-LEFT: 0px; WIDTH: 250px; PADDING-RIGHT: 0px; DISPLAY: inline-table; HEIGHT: 250px; VISIBILITY: visible; BORDER-TOP: medium none; BORDER-RIGHT: medium none; PADDING-TOP: 0px"&gt;&lt;ins style="BORDER-BOTTOM: medium none; POSITION: relative; BORDER-LEFT: medium none; PADDING-BOTTOM: 0px; MARGIN: 0px; PADDING-LEFT: 0px; WIDTH: 250px; PADDING-RIGHT: 0px; DISPLAY: block; HEIGHT: 250px; VISIBILITY: visible; BORDER-TOP: medium none; BORDER-RIGHT: medium none; PADDING-TOP: 0px"&gt;&lt;/ins&gt;&lt;/ins&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p class="style8"&gt;நான் ஜவுளித் துறையில் இருக்கிறேன். புதிதாக இன்னொரு யூனிட் ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். புது யூனிட்டில் பெண்களுக்கு மட்டுமே வேலை கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதால், அரசாங்கத்திடம் ஏதாவது அனுமதி வாங்க வேண்டுமா? எந்தெந்த விஷயத்தில் நான் கவனமாக இருக்கவேண்டும்? &lt;p align="right"&gt;&lt;strong&gt;சசி, &lt;/strong&gt;கரூர்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="style9"&gt;&lt;img hspace="9" vspace="9" align="left" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p44b.jpg" width="111" height="150" /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;தனபால், &lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;strong&gt;வழக்கறிஞர்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;&lt;p&gt;''தொழிலாளர் சட்டத்தில் ஆண், பெண் என்று எந்த பேதமும் இல்லை. உங்கள் யூனிட்டில் முழுவதுமாக ஆண்கள் இருக்கலாம் அல்லது பெண்களும் இருக்கலாம். மற்ற இடங்களில் பெண்களுக்கு என்னென்ன சலுகைகளும் பாதுகாப்பும் வழங்கப்படுகின்றதோ, அதை முழுமையாக வழங்கினால் போதும். என்றாலும் சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. பெண்களுக்கு இரவுப் பணி கொடுக்கலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தாலும், நீங்கள் வேலைக்கு எடுக்கும் பெண்கள் அதற்குத் தயாராக இருப்பார்களா என்று முன்பே தெரிந்துகொள்வது நல்லது. வேலைக்கு எடுத்தபிறகு, அது அவர்களுக்கு சௌகரியப்படவில்லை என்று ராஜினாமா செய்தால் உங்கள் யூனிட் உற்பத்தி பாதிப்படையும். எனவே கவனம் தேவை!&lt;/p&gt;&lt;p&gt;தவிர, ஆண்களால் மட்டுமே செய்ய முடிகின்ற வேலையை பெண்களுக்குக் கொடுக்கமுடியாது. அதேபோல கடுமையான வேலையைச் செய்யும்படி பெண்களைக் கட்டாயப்படுத்தவும் கூடாது. 14 முதல் 18 வயது வரையிலுள்ள ஆண்கள் செய்யக்கூடாது என்று வரையறுக்கப்பட்ட எந்த வேலையையும் பெண்களுக்குக் கொடுக்கக் கூடாது. &lt;/p&gt;&lt;p&gt;பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் அவர்களின் குழந்தைகளையும் அழைத்துவர வாய்ப்புண்டு. எனவே குழந்தைகள் காப்பகம் (creech) இருக்கவேண்டும். பெண்களுக்கு பிரசவகால விடுமுறைகள் கொடுத்தாகவேண்டும். யூனிட்டின் உற்பத்தி பாதிக்காமல் இந்த வசதிகளை எல்லாம் செய்து கொடுக்கமுடியும் என்றால் பெண்கள் மட்டுமே வேலை செய்யும் யூனிட்டை நீங்கள் தாராளமாக நடத்தலாம்.''&lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p class="style8"&gt;&lt;img hspace="9" vspace="9" align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p45.jpg" width="200" height="300" /&gt;நான் மளிகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறேன். ஓரளவுக்கு பெரிய கடைதான். இப்போது இருக்கும் இடம் போதாது. கடையை இன்னும் பெரிதாக்கவேண்டும் என்று நான் யோசிக்கும் வேளையில், கடையை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லிவிட்டார் இடத்தின் உரிமையாளர். பக்கத்தில் இடம் தேடியபோது நல்ல, பெரிய இடமாக கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்தான் கிடைத்தது. அங்கு கடையைக் கொண்டு போனால் இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களை இழந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது. என்னிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்க நான் என்ன செய்யவேண்டும்?&lt;/p&gt;&lt;p align="right"&gt;&lt;strong&gt;செந்தில்,&lt;/strong&gt; திருச்செங்கோடு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span class="style9"&gt;&lt;img hspace="9" vspace="9" align="left" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p45a.jpg" width="130" height="175" /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;ஆர்.வி.ராஜன்.&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;strong&gt; ரூரல் மார்க்கெட்டிங் அசோசியேஷன் ஆஃப் இந்தியா.&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p&gt;''நீங்கள் வாடிக்கையாளர்களோடு எப்படிப்பட்ட உறவை வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உங்களோடு இருப்பார்கள். வாடிக்கையாளர்கள் ஒரு போன் செய்தால் போதும்; அவர்களின் வீட்டுக்கே அத்தனை பொருள்களையும் அனுப்பிவிடும் கச்சிதமான கடைக்காரர் நீங்கள் என்றால் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள். தரமான பொருட்களை சிரித்த முகத்தோடு கொடுக்கும் கடைக்காரர்கள் எனில் இரண்டு சந்து தள்ளி கடை வைத்தாலும் தேடி வரத்தான் செய்வார்கள். &lt;/p&gt;&lt;p&gt;என்றாலும்கூட, தகவல்தொடர்பு (communication) சம்பந்தமான சில விஷயங்களை நீங்கள் செய்யத்தான் வேண்டும். நீங்கள் எந்த இடத்துக்கு உங்கள் கடையை மாற்றி இருக்கிறீர்கள் என்பதை வாடிக்கையாளர்களிடம் சொல்லாமல் யாரும் உங்களைத் தேடி வரமாட்டார்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்றப் போகிறீர்கள் என்கிற முடிவை எடுத்தவுடன் அது பற்றி உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது அவசியம். தவிர, கடையை காலி செய்தபிறகும் இந்தக் கடை இப்போது இந்த விலாசத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது என்பதை ஒரு பலகையில் எழுதி வைப்பது அவசியம்.&lt;/p&gt;&lt;p&gt;கடை மாற்றம் குறித்து நீங்கள் இழக்க விரும்பாத ஒவ்வொரு வாடிக்கையாளரின் வீட்டுக்கும் கடிதம் எழுதியோ, போன் மூலமாகவோ சொல்வது நல்லது. நேரில் பார்க்கும்போது அதை நயமாக எடுத்துச் சொல்லலாம். புதிய இடத்தில் கடையை மாற்றியபிறகு விளம்பரத்துக்காகக் கொஞ்சம் செலவழிப்பது அவசியம். எனக்குத் தெரிந்து நிறைய கடைகள் இடத்தை மாற்றியபிறகும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்ததால்தான் வாடிக்கையாளர்களை இழக்காமல் இருக்கிறார்கள். &lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் சில வாடிக்கையாளர்களை இழப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அவர்களுக்குப் பதிலாக புதிய வாடிக்கையாளர்கள் சிலர் கிடைக்கலாம். கவலை வேண்டாம்&lt;/p&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td rowspan="2" colspan="3" align="middle"&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan="2"&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;img vspace="9" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p46.gif" width="400" height="154" /&gt;&lt;br /&gt;&lt;img vspace="5" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p46a.jpg" width="400" height="258" /&gt; &lt;/p&gt;&lt;table border="0" cellspacing="0" cellpadding="0" width="250" align="left"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;script type="text/javascript" src="http://pagead2.googlesyndication.com/pagead/show_ads.js"&gt;&lt;/script&gt;&lt;br /&gt;&lt;script&gt;google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);&lt;/script&gt;&lt;ins style="BORDER-BOTTOM: medium none; POSITION: relative; BORDER-LEFT: medium none; PADDING-BOTTOM: 0px; MARGIN: 0px; PADDING-LEFT: 0px; WIDTH: 250px; PADDING-RIGHT: 0px; DISPLAY: inline-table; HEIGHT: 250px; VISIBILITY: visible; BORDER-TOP: medium none; BORDER-RIGHT: medium none; PADDING-TOP: 0px"&gt;&lt;ins style="BORDER-BOTTOM: medium none; POSITION: relative; BORDER-LEFT: medium none; PADDING-BOTTOM: 0px; MARGIN: 0px; PADDING-LEFT: 0px; WIDTH: 250px; PADDING-RIGHT: 0px; DISPLAY: block; HEIGHT: 250px; VISIBILITY: visible; BORDER-TOP: medium none; BORDER-RIGHT: medium none; PADDING-TOP: 0px"&gt;&lt;/ins&gt;&lt;/ins&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;p&gt;&lt;span class="style9"&gt;&lt;strong&gt;ச&lt;/strong&gt;&lt;/span&gt;மீபகாலத்தில் எந்தப் பொருளின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு சர்வே எடுத்தால், அந்தப் பட்டியலில் உள்ள முதல் பத்து பொருட்களில் ஒன்றாக நிச்சயம் தெர்மாகோல் இருக்கும். வீட்டுக்குத் தேவைப்படும் கண்ணாடிப் பொருட்களா? இல்லை, டிவி.யா? அல்லது ரெப்ரிஜிரேட்டர், வாஷிங்மெஷின் மாதிரியான எலெக்ட்ரானிக் அயிட்டமா? அத்தனை பொருட்களையும் பாதுகாப்பான முறையில் பேக்கிங் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக இருப்பது தெர்மாகோல். கட்டடங்களுக்கு 'ஃபால்ஸ் சீலிங்' அமைக்கவும் இந்த தெர்மாகோலைத்தான் பயன்படுத்துகிறார்கள். பால் வெண்மையாய் இருக்கும் இந்த தெர்மாகோலைத் தயாரிப்பது மிகவும் சுலபம். &lt;p class="style10"&gt;முதலீடு &lt;/p&gt;&lt;p&gt;குறைந்தபட்சம் 15 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை.&lt;/p&gt;&lt;p class="style11"&gt;ஆள்பலம்&lt;/p&gt;&lt;p&gt;15 பேர்.&lt;/p&gt;&lt;p class="style10"&gt;மூலப் பொருட்கள் &lt;/p&gt;&lt;p&gt;பெட்ரோலியப் பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங். &lt;/p&gt;&lt;p class="style11"&gt;இயந்திரங்கள்&lt;/p&gt;&lt;p&gt;பாய்லர், ப்ரீ ஃபாமர், ஸ்டீமர், கம்ப்ரசர், கட்டிங் மெஷின் போன்ற இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. பாய்லர் ஒன்றின் விலை சுமார் ரூ.4 லட்சம், ப்ரீ ஃபாமர் 2 லட்சம் ரூபாய், கம்ப்ரசர் 1.5 லட்சம் ரூபாய், கட்டிங் மெஷின் 70 முதல் 80 ஆயிரம் ரூபாய். &lt;/p&gt;&lt;p class="style10"&gt;இயந்திரங்கள் கிடைக்கும் இடம் &lt;/p&gt;&lt;p&gt;இந்தியாவில் மும்பையில் இத்தொழிலுக்கான எல்லா வகை இயந்திரங்களும் கிடைக்கின்றன. &lt;/p&gt;&lt;p class="style11"&gt;செய்யும் முறை&lt;/p&gt;&lt;p&gt;&lt;img hspace="9" vspace="9" align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/mar/15032010/p47.jpg" width="320" height="240" /&gt;மூலப்பொருளான எக்ஸ்பான்டபிள் பாலிஷ் ஸ்டிரெயினிங்கின் விலை ஒரு கிலோ 93 ரூபாய் ஆகிறது. அதனைக் கொண்டு 900 கிராம் கிரான்யூல்ஸ் எனப்படும் தெர்மாகோல் உருண்டைகளைத் தயாரிக்கலாம். மூலப்பொருளை முதலில் பாய்லரில் போட்டு சூடாக்குகிறார்கள்.&lt;/p&gt;&lt;p&gt;அது வெந்தபிறகு சிறு உருண்டைகளாக வெளியே வருகிறது. அதனை பாலிமர், ஸ்டீமர், கம்ப்ரஸர் என அடுத்தடுத்த மெஷின்களில் போட்டு இன்னும் பெரிதான உருண்டையாக மாற்றுகிறார்கள். இந்த தெர்மாகோல் உருண்டைகளைத்தான் கிரான்யூல்ஸ் என்று சொல்கிறார்கள். இதனை ஷீட்டாகவோ அல்லது மோல்டிங் செய்து நமக்குத் தேவையான வடிவத்துக்கோ மாற்றிக் கொள்ளலாம். &lt;/p&gt;&lt;p class="style10"&gt;வாகனம்&lt;/p&gt;&lt;p&gt;உள்ளூரில் டெலிவரி செய்ய வாகனங்கள் இருந்தால் வாடிக்கையாளர்களை சுலபமாக சென்றடையலாம். &lt;/p&gt;&lt;p class="style11"&gt;இடம்&lt;/p&gt;&lt;p&gt;தெர்மாகோல் தயாரிப்பு யூனிட் ஆரம்பிக்க சுமார் 25 சென்ட் இடம் தேவை.&lt;/p&gt;&lt;p class="style10"&gt;ரிஸ்க்&lt;/p&gt;&lt;p&gt;நெருப்புதான் இந்த தொழிலின் முதல் எதிரி. பஞ்சு போன்று இருப்பதால் தெர்மாகோல் எளிதில் தீப்பற்றிக் கொள்ளும். எனவே நெருப்பிலிருந்து பாதுகாத்து கொள்ளத் தேவையான முன்னேற்பாடுகளை அவசியம் செய்ய வேண்டும். &lt;/p&gt;&lt;p class="style11"&gt;இன்ஷூரன்ஸ்&lt;/p&gt;&lt;p&gt;தீ விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதால் அதற்கான இன்ஷூரன்ஸ் அவசியம் வேண்டும்.&lt;/p&gt;&lt;p class="style10"&gt;மார்க்கெட்&lt;/p&gt;&lt;p&gt;இந்த பிஸினஸில் ஈடுபட்டிருப்பவர்கள் குறைவு. ஆனால் இதற்கான மார்க்கெட் அதிகளவில் உள்ளது. &lt;/p&gt;&lt;p class="style11"&gt;லாபம்&lt;/p&gt;&lt;p&gt;சுமார் 40 சதவிகிதம் அளவுக்கு லாபம் பார்க்கலாம்.&lt;/p&gt;&lt;p class="style10"&gt;எக்ஸ்ட்ரா வாய்ப்பு&lt;/p&gt;&lt;p&gt;இதன் வேஸ்டேஜ்களை மீண்டும் ரீசைக்ளிங் செய்து பயன்படுத்தலாம்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-5777704870043136605?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/5777704870043136605/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/03/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/5777704870043136605'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/5777704870043136605'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/03/blog-post.html' title='கேள்வி-பதில்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2884075294905186394</id><published>2010-02-11T10:52:00.000+02:00</published><updated>2010-02-11T10:53:30.301+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல் குறிப்புகள்'/><title type='text'>முப்பது வகை திருமண சமையல்</title><content type='html'>பிரபல சமையல் கலைஞர்களின் பிரமாதமான விருந்து....&lt;br /&gt;30 வகை கலயாண சமையல்!&lt;br /&gt;திருமணம் என்றாலே மணமகன் - மணமகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம்... சாப்பாட்டுக்குதான்! அதிலும் தமிழகத்தின் ஒவ்வொரு பகுதி சமையல் கலைஞர்கள் கைப்பக்குவத்துக்கும் ஒவ்வொருவிதமான முக்கியத்துவம் இருக்கும்.&lt;br /&gt;'நம்ம கல்யாணத்துக்கு கண்டிப்பா அவரோட சமையல்தான். அதுலயும் அவரோட ஸ்பெஷல் அயிட்டம் கண்டிப்பா இருக்கணும்...' என்று ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு சமையல் கலைஞரின் பெயரைச் சொல்லிச் சப்புக் கொட்டுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி தமிழகம் தழுவிய அளவில் பரவலாக போற்றப்படும் பிரபல சமையல் கலைஞர்களின் ஸ்பெஷல் 'ரெசிபி'களையும், அவர்கள் 'கைப்பக்குவ' ரகசியத்தையும் தேடிக் கண்டுபிடித்து உங்களுக்காக இங்கே இலை போடுகிறோம்.&lt;br /&gt;ஸ்வீட், மல்லி பிரியாணி, அவியல், சொதி என விதம்விதமான 'ஸ்பெஷல் அயிட்டங்களை' உங்கள் வீட்டிலும் செய்து, ருசித்தீர்களானால்... 'கல்யாணமாம் கல்யாணம், 'அவள்' ஸ்பெஷல் கல்யாணம்' என்று உங்களையும் அறியாமலே பாட்டுக் குபீரிடும்!&lt;br /&gt;ஈரோடு பகுதியில் புகழ்பெற்ற சமையல் கலைஞர் 'ஹரி'. அவருடைய ஸ்பெஷலான 'மலாயா லோட்டஸ்' ஸ்வீட்டுக்கு ஒரு கூட்டமே இருக்கிறது.&lt;br /&gt;மலாயா லோட்டஸ் ஸ்வீட்&lt;br /&gt;தேவையானவை: பால் - 1 லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, பால்கோவா - கால் கிலோ, ஏலக்காய்த்தூள், லெமன் பவுடர் - தலா அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார், மைதா மாவு கலவை - 10 கிராம், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;செய்முறை: கடாயில் நூறு மில்லி பாலை விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதில் சர்க்கரையை சேர்த்து மெதுவாகக் கிளறினால், ஜீரா ரெடி!&lt;br /&gt;மீதமுள்ள பாலைக் காய்ச்சி, ஒருமுறை கொதித்ததும் இறக்கி, அதில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு சேர்க்க... பால் திரிந்து விடும். வெண்மையான மெல்லிய துணியில் அதைக் கொட்டி 2 முறை வடிகட்டவும். அதிலுள்ள நீர்ச்சத்து போனதும், அப்படியே பேப்பரில் பரப்பவும். இதில் ஏலக்காய்த்தூள், கார்ன்ஃப்ளார் - மைதா மாவு கலவை சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசையவும். இந்த மாவை உருண்டைகளாக உருட்டி, உள்ளங்கையில் வைத்து தட்டி சிறு அப்பளமாக இடவும்.&lt;br /&gt;தயார் செய்து வைத்திருக்கும் ஜீராவை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும், அதில் கொஞ்சம் மாவுக் கலவையை சேர்க்கவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அப்பளம் போல் வட்டமாக செய்துள்ளவற்றை ஒவ்வொன்றாக அதில் போட... நன்றாக உப்பி வரும். பிறகு, அடுப்பிலிருந்து இறக்கவும். பால்கோவாவில் லெமன் பவுடர் கலந்தால் அது மஞ்சளாகிவிடும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். பிறகு ஜீராவில் ஊறிய அப்பளங்களை எடுத்து அதன் நடுவில் கட் செய்து, பால்கோவா மிக்ஸை அதனுள் ஸ்ட்ஃப் செய்யவும்.&lt;br /&gt;தேவைப்பட்டால், சில்வர் ஃபாயில், ஜாம், பிஸ்தா பருப்பு, செர்ரி பழம் பயன்படுத்தி அழகுபடுத்தலாம்.&lt;br /&gt;- எஸ்.ஷக்தி, படம்: தி.விஜய்&lt;br /&gt;நாகப்பட்டினம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் நடக்கும் பல திருமணங்களில் 'மங்கைமடம்' லயன் தங்க. அகோரமூர்த்தியின் கைமணம்தான். இதோ... அவருடைய அட்டகாசமான ஸ்பிரிங் ரோல்...&lt;br /&gt;ஸ்பிரிங் ரோல்&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - 250 கிராம், பால், தண்ணீர் - தலா 50 மில்லி, நறுக்கிய கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி கலவை - 2 கப், சில்லி சாஸ், டொமேட்டா சாஸ் - தலா 2 டீஸ்பூன், பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: மைதாவுடன் பால், தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து, இருபது நிமிடம் ஊற வைக்கவும். இதை ரொட்டிக்குத் தேவையான அளவு சிறிய பேடாக்களாக (அப்பளம் போல்) செய்து கொள்ளவும். நறுக்கிய காய்கறி கலவையை வேக வைக்கவும். வெந்ததும், அதில் பூண்டு விழுது, சில்லி சாஸ், டொமேட்டோ சாஸ், உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு அலுமினிய கடாயை அடுப்பின் மீது குப்புற கவிழ்த்து, பேடாவை ரொட்டியாக விசிறி போடவும். வெந்ததும் எடுத்து, அதில் வதக்கிய காய்கறி கலவையை நடுவில் வைத்து உருட்டவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருட்டிய உருளையைப் போட்டு, வெந்ததும் எடுக்கவும். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டினால் ஸ்பிரிங் ரோல் தயார்.&lt;br /&gt;இதற்கு தேங்காய் சட்னி, சூப்பர் சைட் டிஷ்!&lt;br /&gt;- கரு.முத்து&lt;br /&gt;திருநெல்வேலிக்கு என்றிருக்கும் சமையல் மணத்தை அப்படியே இலைக்கு கொண்டு வருபவர், அப்பகுதியில் பிரபலமாக இருக்கும் எம்.சங்கரன். அவருடைய ஸ்பெஷல் சொதி இங்கே...&lt;br /&gt;சொதி&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பருப்பு - 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் - தலா 200 கிராம், கேரட், வெங்காயம் - தலா கால் கிலோ, முருங்கைக்காய் - 2, காலிஃப்ளவர் - 1, பீன்ஸ், பூண்டு - தலா 100 கிராம், பச்சை மிளகாய், இஞ்சி - தலா 25 கிராம், பெரிய தேங்காய் - 2, எலுமிச்சம்பழம் - 3, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை சிட்டிகை, சீரகம் - 25 கிராம், நெய், வனஸ்பதி. - தலா 100 கிராம், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி அரைத்து... முதல், இரண்டாம் பாலை எடுத்து தனித்தனியாக வைக்கவும். பாசிப்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்துக் குழையாமல் வேக விடவும். கடாயில் வனஸ்பதியைப் போட்டு, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும். நறுக்கிய காய்கறிகளை அதனுடன் சேர்த்துக் கொதிக்க விடவும். காய்கறிகள் வெந்தததும், வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுடன் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து, நன்றாகக் கொதித்து, நுரையாக வந்ததும் இறக்கவும். உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். கடாயில் நெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அதில் கொட்டிக் கலந்தால்... சுவையான சொதி ரெடி!&lt;br /&gt;- ஆண்டனி ராஜ் படம்: ஆ.வின்சென்ட் பால்&lt;br /&gt;மஷ்ரூம் பிரியாணி&lt;br /&gt;சேலத்தில் பிரமாண்ட கல்யாணம் என்றால், ரஜினிகிருஷ்ணன் சமையல் அங்கே கட்டாயம் மணக்கும். அவருடைய பிரமாதமான கைமணத்தில் கமகமக்கிறது பிரியாணி.&lt;br /&gt;தேவையானவை: பிரியாணி அரிசி, மஷ்ரூம் (காளான்) - தலா கால் கிலோ, பட்டை - 5, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ - தலா 2, பிரிஞ்சி இலை - 1, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பெரிய வெங்காயம், தக்காளி - தலா 1, தயிர் - கால் கப், எலுமிச்சம்பழம் - அரை மூடி, நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆய்ந்த கொத்தமல்லி, புதினா - தலா கால் கப், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: மஷ்ரூம், தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். கடாயில் நெய் விட்டு பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து, அதில் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி, தயிர் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். அதில் மஷ்ரூம் சேர்த்து வதக்கி, அரை லிட்டர் தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து, அரிசியைப் போடவும். அரிசி பாதி வெந்ததும், எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும். இதில் கொத்தமல்லி, புதினா சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் மூடி விடவும். மூடியின் மேல் கரி நெருப்பை வைத்து 'தம்' போடவும். 15 நிமிடம் கழித்து மூடியை அகற்றி சாதத்தைக் கிளறி இறக்கினால், மஷ்ரூம் பிரியாணி ரெடி!&lt;br /&gt;ஆ.யாசர் அராபத், படம்: எம்.விஜயகுமார்&lt;br /&gt;செட்டிநாட்டுப் பகுதியின் சமையலில் பிரசித்தி பெற்றவர் 'நெடுங்குடி' முத்து. அவருடைய கலக்கலான ரெசிபி...&lt;br /&gt;பலாமூசு கூட்டு&lt;br /&gt;தேவையானவை: பிஞ்சு பலாக்காய் - 1, தேங்காய் துருவல் - ஒரு கப், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, முந்திரி, பாதாம், பிஸ்தா, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: பலாக்காயைத் தோல் சீவி நீளவாக்கில் நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்துக் கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாக சேர்ந்து வந்ததும், வேக வைத்த பலாக்காயை சேர்க்கவும். நன்கு கலந்து கிரேவியானதும் இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;- டி.எல்.சஞ்சீவிகுமார், படம்: சாய்தர்மராஜ்&lt;br /&gt;திருச்சியின் பிரபல சமையல் கலைஞர்களில் ஒருவர் சுலோசனா சந்தானம். சப்புக்கொட்ட வைக்கும் பிஸிபேளாபாத் அவருடைய கைமணத்தில் இங்கே மணக்கிறது.&lt;br /&gt;பிஸிபேளாபாத்&lt;br /&gt;தேவையானவை: அரிசி - 2 கப், துவரம்பருப்பு - ஒரு கப், வெல்லம் - நெல்லிக்காய் அளவு, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - கால் கிலோ, நறுக்கிய கேரட், பீன்ஸ், நூல்கோல், பட்டாணி, டபுள் பீன்ஸ் கலவை - 2 கப், வேக வைத்து எடுத்த முருங்கைக்காய் விழுது - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 10, தனியா - அரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், அன்னாசிப்பூ, ஏலக்காய், லவங்கம் - தலா 4, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.&lt;br /&gt;செய்முறை: 2 டம்ளர் வெந்நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து புளியை ஊற வைக்கவும். கடாயில் நெய், நல்லெண்ணெய் விட்டு, பாதியளவு அன்னாசிப்பூ, ஏலக்காய், லவங்கம் பொரித்துக் கொள்ளவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், ஒரு டேபிள்ஸ்பூன் வேர்கடலை, ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து சிவக்க வறுக்கவும். கடைசியாக, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து இறக்கவும். அவற்றுடன் பாதியளவு வெங்காயம், பாதியளவு தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தால் மசாலா தயார்.&lt;br /&gt;அடி கனமான பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு துவரம்பருப்பை வேக விடவும். பாதி வெந்ததும், அரிசியைச் சேர்த்து, கொதிக்கும்போதே வெங்காயம் தவிர மற்ற காய்கறிகளைச் சேர்த்து கொதிக்க விடவும்.&lt;br /&gt;புளிக் கரைசலுடன் மஞ்சள்தூள், வெல்லம், பெருங்காயம், கறிவேப்பிலை, சிறிது உப்பு, அரைத்த மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு மீதமிருக்கும் வெங்காயத்தை வதக்கி அதில் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். குழைய வெந்திருக்கும் சாதம், பருப்பு, காய்கறிக் கலவையில் இக்குழம்பை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கிளறி இறக்கவும். மீதமிருக்கும் லவங்கம், அன்னாசிப் பூ பொடித்து அதில் கலக்கவும். மீதமுள்ள நெய், நல்லெண்ணையை கடாயில் விட்டு, தனியே எடுத்து வைத்த சீரகம், வேர்க்கடலை, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சாதத்துடன் கொட்டிக் கலக்கவும்.&lt;br /&gt;- சண்.சரவணகுமார்&lt;br /&gt;கன்னியாகுமரியில் கல்யாண விருந்து என்றாலே 'தாழாக்குடி' நீலகண்ட பிள்ளையைக் கூப்பிடுங்க என்று பலரும் கைநீட்டுவார்கள். அவருடைய கைப்பக்குவத்தில் இதோ ஒரு ஸ்பெஷல் 'ரெசிபி'...&lt;br /&gt;சேனை இலைசேரி&lt;br /&gt;தேவையானவை: சேனைக்கிழங்கு - 1, குழம்பு மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம், மிளகுத்தூள், சீரகத்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல், தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: தேங்காய் துருவலில் பாதியை அரைத்துக் கொள்ளவும். சேனைக் கிழங்கின் தோலை நீக்கி, சிறிய இலை போல் நறுக்கிக் கொள்ளவும். இதில், குழம்பு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து முக்கால் பதத்தில் குழைய விடாமல் வேக வைக்கவும். வெந்ததும், அரைத்த தேங்காய் விழுது, சீரகத்தூள் சேர்த்துக் கலக்கவும்.&lt;br /&gt;மீதமுள்ள தேங்காய் துருவலை கடாயில் சிவக்க வறுத்து எடுக்கவும். அதே கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துக் கிளறவும். இதனை சேனையுடன் சேர்த்து, வறுத்த தேங்காய் துருவலையும் தேங்காய்ப் பாலையும் சேர்த்து, ஒருமுறை கொதிக்க விட்டு இறக்கவும்.&lt;br /&gt;- நா.சுவாமிநாதன்&lt;br /&gt;சென்னையில் திரும்பிய பக்கமெல்லாம் பிரபல சமையல் கலைஞர்கள்தான். அவர்களுக்கு நடுவே பல வருடங்களாக தனித்து தெரிபவர்களில் ஒருவர் 'சுபம்' கணேசன். இதோ சுவையுங்கள் அவருடைய ஸ்பெஷல் தயாரிப்பை...&lt;br /&gt;கல்கண்டு பாத்&lt;br /&gt;தேவையானவை: பால் - ஒரு லிட்டர், பொடித்த கல்கண்டு - 3 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், முந்திரி, திராட்சை - தலா 2 டீஸ்பூன், நெய் - ஒன்றரை கப், அரிசி - 2 கப், குங்குமப்பூ - 10 கிராம் (ஒரு கரண்டி பாலில் ஊற வைக்கவும்), பச்சை கற்பூரம் - 2 சிட்டிகை.&lt;br /&gt;செய்முறை: அரிசியை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, கொதித்ததும் அரிசியில் உள்ள தண்ணீரை வடித்து, பாலுடன் சேர்த்து மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும், சிறிது நெய் சேர்த்து குழம்பு பதம் வரும் வரை கிளறவும். தேவைப்பட்டால் பால், அல்லது சிறிது தண்ணீர் சேர்க்கலாம். அரிசி நன்றாகக் குழைந்ததும், பொடித்த கல்கண்டை சேர்த்து, சர்க்கரைப் பொங்கல் பதத்தில் வந்ததும் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறிக் கொண்டே இருக்கவும். சாதம், சுருண்டு வரும் பதத்தில் இறக்கி குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், பச்சை கற்பூரம் சேர்க்கவும். சிறிது நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து அதில் சேர்த்துக் கிளறவும்.&lt;br /&gt;- நாச்சியாள்&lt;br /&gt;சென்னை கல்யாணங்களில் வித்யா சுப்ரமணியத்தின் கைப்பக்குவமும் கமகமக்கிறது. அவருடைய தயாரிப்பில் மணக்கிறது... வடைகறி!&lt;br /&gt;வடைகறி&lt;br /&gt;தேவையானவை: கடலைப்பருப்பு - ஒரு கப், வெங்காயம் - 2, தக்காளி - 3, முதல் தேங்காய்ப் பால் - அரை கப், இரண்டாம் தேங்காய்ப் பால் - ஒரு கப், புதினா, கொத்தமல்லி - கைப்பிடியளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;மசாலா: மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 6 பல், சோம்பு - ஒரு டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2.&lt;br /&gt;செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து கரகரப்பாக அரைக்கவும். மசாலா பொருட்களை ஒன்று சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். அரைத்த மசாலாவிலிருந்து கொஞ்சம் எடுத்து, அரைத்த பருப்புடன் சேர்த்து, உப்பு சேர்த்துக் கலக்கவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு பக்கோடாக்களாக போட்டுப் பொரித்தெடுக்கவும்.&lt;br /&gt;இன்னொரு கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை தாளித்து, வெங்காயம் சேர்க்கவும். அது வதங்கியதும், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், அரைத்த மசாலா, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும், அதில் இரண்டாவதாக எடுத்த தேங்காய்ப் பாலை ஊற்றி கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். இந்தக் கலவை கொதிக்கும்போது பொரித்தெடுத்த பக்கோடாக்களைப் போடவும். இரண்டு நிமிடம் கொதித்ததும், முதலாவதாக எடுத்த தேங்காய்ப் பால் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;- நாச்சியாள், படம்: 'ப்ரீத்தி' கார்த்திக்&lt;br /&gt;சென்னையில் பாரம்பரிய திருமண சமையல் ஸ்பெஷலிஸ்ட் பவானி. அவருடைய ஸ்பெஷல் தயாரிப்பு களாக பிட்லை மற்றும் கல்யாண வத்தக் குழம்பு இரண்டும் மணக்கின்றன இங்கே...&lt;br /&gt;பிட்லை&lt;br /&gt;தேவையானவை: புளி - எலுமிச்சம்பழம் அளவு, துவரம்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை - தலா 50 கிராம், பூசணி - ஒரு கீற்று, கொத்தவரங்காய் (அ) அவரைக்காய், பாகற்காய் (அ) கத்தரிக்காய் - 100 கிராம், கடலைப்பருப்பு - 25 கிராம், சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், பெருங்காயம், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 5, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தேங்காய் - ஒரு மூடி.&lt;br /&gt;செய்முறை: வெந்நீரில் புளியுடன் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து, கரைத்து வடிகட்டவும். குக்கரில் துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, கொண்டைக் கடலை, மஞ்சள்தூள் சேர்த்து 2 விசில் வரும் வரை வேக விடவும். காய்களை நறுக்கி, வேக வைத்து, பாதி பதத்தில் வெந்ததும், புளிக் கரைசலை விட்டு சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.&lt;br /&gt;கடாயில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பை ஒன்றன் பின் ஒன்றாக சிவக்க வறுக்கவும். இவற்றுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கொதிக்கும் காய்கறிக் கலவையில் அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்க விடவும். வெந்த பருப்பையும், கொண்டைக்கடலையையும் அதில் சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்க வைத்து, ஒன்றாக சேர்ந்து வந்ததும் இறக்கவும். மீதமுள்ள நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்த்து இறக்கவும்.&lt;br /&gt;கல்யாண வத்தக் குழம்பு&lt;br /&gt;தேவையானவை: மணத்தக்காளி வத்தல் - 20 கிராம், புளி - 2 எலுமிச்சம்பழம் அளவு, சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், பொரித்த உளுந்து அப்பளம் - 2, வெல்லம் - நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய் - 2, கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;செய்முறை: புளியுடன் உப்பு சேர்த்து வெந்நீரில் அரை மணி ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். அடி கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, துவரம்பருப்பு தாளித்து, மணத்தக்காளி வத்தல் சேர்த்து வதக்கவும். வதங்கியதும், சாம்பார் பொடி சேர்த்துக் கலக்கி புளிக் கரைசலை அதில் விட்டு, அளவாக உப்பு சேர்த்துக் கலக்கவும். (வத்தலில் உப்பு இருக்கும்). மிதமான தீயில் வைத்து முக்கால் பாகமாக சுண்டும் வரும் வரை கொதிக்க விட்டு, கறிவேப்பிலை சேர்க்கவும். வெல்லத்தை சேர்த்து குழம்பு மூன்றில் ஒரு பாகமாக குறுகும்வரை கொதிக்க வைத்து இறக்கவும். சிறிது ஆறியதும், பொரித்த அப்பளங்களை உடைத்துச் சேர்க்கவும்.&lt;br /&gt;வத்தல், அப்பளத்துக்குப் பதிலாக வெண்டை, முருங்கை, சாம்பார் வெங்காயம், பரங்கிக்காய், கத்திரிக்காய், அவரை போன்ற காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.&lt;br /&gt;- நாச்சியாள்&lt;br /&gt;ரேவதி சண்முகம்... இவரை 'அவள்' வாசகிகளுக்கு அறிமுகப்படுத்தவே தேவையில்லை. சென்னையில் இவருடைய கைமணத்தோடு நடக்கும் திருமணங்கள் ஏராளம்! இதோ அவருடைய ரெசிபி.&lt;br /&gt;பனீர் ஜாமூன்&lt;br /&gt;தேவையானவை: பனீர் துருவல் - 1 கப், கோவா (இனிப்பில்லாதது... டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை கப், மைதா - அரை சிட்டிகை, சமையல் சோடா - 1 சிட்டிகை, சர்க்கரை - ஒன்றரை கப், தண்ணீர் - 1 கப், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன். நெய், எண்ணெய் - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: பனீர் துருவலுடன், கோவா, மைதா, சமையல் சோடா, நெய் சேர்த்து நன்கு பிசைந்து, அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை மிதமான தீயில் காய வைத்து, உருட்டிய உருண்டைகளை 4 - 5 ஆகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். பாத்திரத்தில் சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பாகு பதம் வந்தவுடன் இறக்கி, அதில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த குலாப் ஜாமூன்களை அதில் போட்டு ஊற விட்டுப் பரிமாறவும்.&lt;br /&gt;- நாச்சியாள்&lt;br /&gt;தர்மபுரி பகுதியில் மூன்று தலைமுறைகளாக கல்யாண சமையலில் புகழ்பெற்றது சங்கரின் குடும்பம். அவரின் சிறப்பு... சேமந்தண்டு குழம்பு. இதோ...&lt;br /&gt;சேமந்தண்டு குழம்பு&lt;br /&gt;தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு, தனியா, சீரகம் - தலா 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய், மிளகு - தலா 8, கடுகு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, தட்டைப்பயறு, அவரை - தலா 150 கிராம், மஞ்சள்தூள், நல்லெண்ணெய், புளி, நறுக்கிய சேமந்தண்டு (சேமக்கிழங்கு செடியின் தண்டு) - கால் கிலோ, தக்காளி - 4, சின்ன வெங்காயம் - 15, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, வடகம், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயம், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுத்து, கறிவேப்பிலையை சேர்க்கவும். ஆறியதும், நைஸாகப் பொடிக்கவும். சேமந்தண்டை முருங்கைகாய் போல நார் நீக்கி, ஓர் அங்குலம் அளவுக்கு நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தோலுரித்த இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாயை இடிக்கவும்.&lt;br /&gt;பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, அதில் துவரம்பருப்பு, தட்டைப்பயறு, அவரை, மஞ்சள்தூள் சேர்த்து வேக விடவும். வெந்ததும், நறுக்கிய சேமந்தண்டை சேர்க்கவும். தக்காளி, இடித்த சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு நன்றாக வேக விடவும். பச்சை வாடை போனதும், பொடித்த பொடியை சேர்த்து பத்து நிமிடம் நன்றாக வேக விடவும். பிறகு புளி கரைத்து விட்டு, உப்பு சேர்த்து 15 நிமிடம் வேக விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், வடகம் தாளித்து குழம்பில் கொட்டி இறக்கவும்.&lt;br /&gt;- எஸ்.ராஜாசெல்லம்&lt;br /&gt;தஞ்சாவூர் பகுதியில் திருமணம் என்றாலே... கட்டாயம் அதில் 'அசோகா அல்வா' எனப்படும் ஸ்வீட் இடம்பிடித்துவிடும். 'பாம்பே ஸ்வீட்' லஷ்மி, உஷா இருவரும் அதை தயாரிப்பதில் அசத்தல் பார்ட்டிகள். பிடியுங்கள் அந்த ரெசிபியை...&lt;br /&gt;அசோகா அல்வா&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 450 கிராம், மைதா - 50 கிராம், கோதுமை மாவு - 100 கிராம், முந்திரிப்பருப்பு, திராட்சை - 25, ஏலக்காய் - 10, கேசரி பவுடர் - தேவையான அளவு, எண்ணெய் - ஒரு கப், நெய் - கால் கிலோ, குங்குமப்பூ - சிறிதளவு.&lt;br /&gt;செய்முறை: பாசிப்பருப்பை தண்ணீரில் இருபது நிமிடம் ஊற வைத்து, சுத்தமாகக் கழுவி, லேசாக உலர்த்த வேண்டும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, பாசிப்பருப்பை சிவக்க வறுத்து, வேகவைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கோதுமை மாவு, மைதாவைக் கலந்து, கடாயில் எண்ணெய் விட்டு அதில் போட்டு சிவக்க வறுக்கவும். அதோடு பாசிப்பருப்பை சேர்த்துக் கலந்து கிளறவும். அதில் சர்க்கரை சேர்த்து மீண்டும் கிளறும்போது, சர்க்கரை உருகி அதோடு கலந்து திரண்டு வரும். அப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து. கெட்டியாக வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கெட்டியான பதம் வரும்போது நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கேசரி பவுடர், ஏலக்காய் சேர்த்து மீண்டும் பத்து நிமிடம் நெய் விட்டுக்கொண்டே நன்கு கிளற வேண்டும். மணத்துக்காக பச்சை கற்பூரம், ஜாதிக்காய் சேர்க்கலாம். அல்வாவை இறக்கி... சிறிதளவு பாலில் கரைத்த குங்குமப்பூவை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.&lt;br /&gt;- சி.சுரேஷ், படங்கள்: எம்.ராமசாமி&lt;br /&gt;தூத்துக்குடி 'சரவணாஸ்' செந்தில் ஆறுமுகம் மாஸ்டரின் தேங்காய்ச்சோறு இல்லாமல், இந்தப் பகுதி கல்யாணங்கள் சிறக்காது. அவரின் கைப்பக்குவத்தில்...&lt;br /&gt;தேங்காய்ச்சோறு&lt;br /&gt;தேவையானவை: வடித்த சாதம் - 2 கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, நெய் - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 கப், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய் எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செமுறை: சாதத்தை உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து சிவக்க மொறுமொறுவென வறுக்கவும். அதில் வடித்த சாதத்தை சேர்த்துக் கிளறவும். கிளறிய சாதத்தில் உப்பு, தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்து, சாதம் உடையாமல் கிளறினால்... தேங்காய்ச்சோறு ரெடி!&lt;br /&gt;- இ.கார்த்திகேயன், படம்: எல்.ராஜேந்திரன்&lt;br /&gt;அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த எல்.வேலாயுதம் பிள்ளை, 20 வருடங்களகாக கல்யாண சமையலில் பிஸி பார்ட்டி. 'அண்ணே சில்லி பரோட்டாவை கட்டாயம் போட்டுடுங்க' என்று சொல்லித்தான் ஆர்டரே கொடுப்பார்களாம். இதோ அந்த பரோட்டா...&lt;br /&gt;சில்லி பரோட்டா&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், கசாகசா - ஒரு டீஸ்பூன், வெங்காயம் (நறுக்கியது) - 1, தக்காளி (நறுக்கியது) - 2, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, உப்பு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, மல்லிப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள்- தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய் - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: மைதா மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, சப்பாத்திக் கட்டையால் மாவை நன்றாகத் தேய்த்து, விசிறி பரோட்டோ கல்லில் போட்டு வேக வைக்க... பரோட்டோ ரெடி! அதைத் துண்டு துண்டாக நறுக்கி, எண்ணெயில் வறுக்கவும்.&lt;br /&gt;கசகசா, முந்திரியை அரைமணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, அரைத்த கசகசா, முந்திரி விழுது, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்துக் கலக்கவும். இவை எல்லாம் ஒன்றாகக் கலந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன், மஞ்சள்தூள், மல்லிப்பொடி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். இதை, மீண்டும் ஒரு கடாயில் கொட்டி, நறுக்கிய பரோட்டாத் துண்டுகளை அதில் போட்டுக் கிளறவும். நன்றாக கலக்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் மீது நறுக்கிய கொத்தமல்லி, புதினாவைத் தூவி பரிமாறலாம்.&lt;br /&gt;ஆனியன் ரய்தா, இதற்கு சூப்பர் காம்பினேஷன்.&lt;br /&gt;- வே.அன்பழகன்&lt;br /&gt;மதுரை, சிவகங்கை, காரைக்குடி பகுதி கல்யாணங்களில் 'மணப்பட்டி' முருகேசன் சமையல் மணக்காமல் இருக்காது. பல பிரபலங்களும் இவருடைய கைப்பக்குவத்துக்கு சலாம் போடுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் ஈர்த்து வைத்திருக்கும் இவருடைய ரெசிபிகளில் உக்காரை மற்றும் கவுனி அரிசி இங்கே இடம் பிடிக்கிறது!&lt;br /&gt;உக்காரை&lt;br /&gt;தேவையானவை: பாசிப்பருப்பு, ரவை - தலா ஒரு கப், பச்சரிசி மாவு - அரை கப், பொடித்த வெல்லம், சர்க்கரை - தலா ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு, திராட்சை - தலா 10, ஏலக்காய் - 4, எண்ணெய், நெய் - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: வெறும் கடாயில் பாசிப்பருப்பை மிதமான தீயில் பொன்னிறமாக வறுத்து, வேக வைக்க வும். அதே கடாயில் எண்ணெய் விட்டு, ரவையைத் தனியாகப் பொன்னிறமாக வறுக்கவும். கடாயில் நெய் விட்டு, முந்திரிப்பருப்பை வறுக்கவும். அதில் தண்ணீர் விட்டுத் தேங்காய் துருவலை சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் ரவையை மெதுவாகத் தூவிக் கிளறவும். பிறகு, அதில் பச்சரிசி மாவையும், வேக வைத்த பாசிப்பருப்பையும் சேர்த்துக் கிளறவும். பொடித்த வெல்லத்தைச் சேர்த்து தொடர்ந்து கிளறவும். பிறகு, அதில் சர்க்கரையை சேர்க்கவும். எல்லாம் ஒன்று சேர்ந்து திரண்டு வரும் போது நெய் விட்டுக் கிளறவும். கடைசியாக, ஏலக்காய்த்தூள், திராட்சை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.&lt;br /&gt;தென்மேற்கு பருவக்காற்று வீசும் தேனி மாவட்ட கல்யாணங்களில்... வீரபத்திரன் கைமணமும் வீசத் தவறுவதில்லை. அவருடைய ஸ்பெஷல் தயாரிப்புகளில், பலருடைய நாக்கையும் கட்டிப்போடும் அயிட்டம்... பட்டாணி-கிழங்கு கூட்டு!&lt;br /&gt;பட்டாணி-கிழங்கு கூட்டு&lt;br /&gt;தேவையானவை: பட்டாணி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 200 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு, பூண்டு - 7 பல், கசகசா - ஒரு டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், வெங்காயம் (நறுக்கியது) - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா - சிறிதளவு, பட்டை - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், அன்னாசிப்பூ - 2. எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: பட்டாணியைக் குழையாமல் வேக வைத்துத் தண்ணீரை வடிக்கவும். உருளைகிழங்கை வேகவைத்து தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பு, இஞ்சி, பூண்டு, கசகசா, தேங்காய் துருவலை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். கடாயில் நெய், எண்ணெய் விட்டு, பட்டை, சோம்பு, அன்னாசிப் பூ, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். கொதித்ததும் மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். அனைத்தும் கலந்து வரும்போது, வேக வைத்த பட் டாணி, உருளைக் கிழங்கைச் சேர்த்து, 10 நிமிடம் கிளறவும். பிறகு, இறக்கிப் பரிமாற வும்.&lt;br /&gt;- இரா.முத்துநாகு&lt;br /&gt;கவுனி அரிசி&lt;br /&gt;தேவையானவை: கவுனி அரிசி - கால் கிலோ, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பால் - அரை டம்ளர், சர்க்கரை - ஒரு கப், முந்திரிப்பருப்பு - 20, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு.&lt;br /&gt;செய்முறை: கவுனி அரிசியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். அதை, அதிகம் குழைந்து போகாமல் அளவான தண்ணீரில் பொங்கவும். கொதித்து, ஆற வைத்த பாலை சாதத்தில் விட்டுக் கிளறவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, மீண்டும் நன்கு கிளறி, தேங்காய் துருவல், நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும். கடைசியாக, ஏலக்காய்த்தூள் தூவவும். நன்கு கலந்து இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;- வீ.ஜே.சுரேஷ் படம்: சாய்தர்மராஜ்&lt;br /&gt;'நாகப்பட்டினம் நாராயண ஐயர் சமையலா... பேஷ் பேஷ்' என்று ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டியிருக்கிறார்கள் என்றால்... அவருடைய கைப்பக்குவம் சும்மாவா...? அவருடைய ஸ்பெஷல் அட்ராக்ஷன் இதோ...&lt;br /&gt;சேமியா பேணி&lt;br /&gt;தேவையானவை: மைதா - ஒரு கப், எண்ணெய் - 2 கப், வனஸ்பதி, நெய் - தலா கால் கப், சோடா உப்பு - ஒரு சிட்டிகை, அரிசி மாவு - கால் கப், பூந்தி - 50 கிராம், பாதாம், முந்திரி, பிஸ்தா பருப்புகள் - தேவையான அளவு, ஃப்ரூட் எசன்ஸ் - 2 துளிகள், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தலா அரை டீஸ்பூன்.&lt;br /&gt;செய்முறை: மைதாமாவில் வனஸ்பதி, நெய் சேர்த்துப் பிசைந்து, 3 மணி நேரம் ஊற வைக்கவும். அதனுடன், அரிசி மாவு, சோடா உப்பு கலந்து நன்கு பிசைந்து அப்பளம் போல் தேய்க்க வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, தேய்த்த அப்பளங்களை அதில் இட்டு, உப்பியதும் எடுக்கவும். எடுக்கும்போது நான்கைந்து ஈர்க்குச்சிகளை பயன்படுத்தினால், அப்பளமானது சேமியா போல வரும் (இதற்கு மாவை பதமாக தயாரித்திருக்க வேண்டும்). அதிலிருக்கும் எண்ணெய் வடிய இரண்டு நாட்கள் ஆகும். பிறகு, அதன் மீது பூந்தியைத் தூவி, பாதம், முந்திரி, பிஸ்தா, ஃப்ரூட் எசன்ஸ், ஏலக்காய், ஜாதிக்காய்த்தூள் கலந்து, பாலில் ஊறவைத்து பரிமாறவும்.&lt;br /&gt;- வீ.மாணிக்கவாசகம்&lt;br /&gt;&lt;br /&gt;திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியின் புகழ்பெற்ற சமையல் கலைஞர் ஃபஸுல் ரஹ்மான். அங்கு மட்டுமல்ல... பல மாவட்டங்களிலும் இவருடைய கைமணத்துக்கு ஏக மரியாதை. இவருடைய அசத்தலான ரெசிபி... ஸ்வீட் தக்காளி!&lt;br /&gt;ஸ்வீட் தக்காளி&lt;br /&gt;தேவையானவை: தக்காளி - அரை கிலோ, சர்க்கரை - 400 கிராம், பேரீச்சை, திராட்சை -150 கிராம், முந்திரி - 20, நெய் - 2 டீஸ்பூன், வெனிலா பவுடர் - ஒரு சிட்டிகை.&lt;br /&gt;செய்முறை: தக்காளியைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து, அடுப்பில் ஏற்றி மெதுவாகக் கிளற வேண்டும். பிறகு பேரீச்சை, திராட்சையை சுத்தம் செய்து அதனுடன் சேர்த்து கிளறி நன்கு கொதிக்க விடவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து, மணம் வந்ததும், இறக்கி வெனிலா பவுடர், நெய்யில் வறுத்த முந்திரியைப் போட்டு, கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;- வீ.மாணிக்கவாசகம்&lt;br /&gt;விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில்... 'வடமலைக்குறிச்சி' அழகர் என்றால்... ஏகபிரபலம். 27 ஆண்டுகளாக இவருடைய சமையலில் சூப்பர் இடத்தைப் பிடித்திருக்கும் பாசந்தி, இங்கே உங்களுக்காக!&lt;br /&gt;பாசந்தி&lt;br /&gt;தேவையானவை: முள்ளங்கி - அரை கிலோ, கேரட்- 50 கிராம், பால் - ஒரு டம்ளர், பால்கோவா - 100 கிராம், பாதாம் பருப்பு- 50 கிராம், முந்திரிப்பருப்பு- 25 கிராம், சாரைப்பருப்பு- 10 கிராம், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 300 கிராம்.&lt;br /&gt;செய்முறை: முள்ளங்கி, கேரட்டை பொடியாக நறுக்கி, வேக வைத்து தண்ணீரை வடிகட்டவும். பாதாம்பருப்பை வெந்நீரில் ஊற வைத்து, தோலை நீக்கி, அதனுடன், முந்திரிப்பருப்பையும் சேர்த்து, பால் விட்டு அரைக்கவும். இதை பால்கோவாவுடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். கடாயில் பாலை ஊற்றி, கொதித்ததும் வேக வைத்த காய்கறி மற்றும் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் வேகவிடவும். பின்பு, அரைத்த விழுதை அதில் சேர்த்துக் கிளறவும். கூடவே, நெய் விடவும். கெட்டிப் பதத்துக்கு வந்ததும் இறக்கி, வறுத்த சாரைப்பருப்பைத் தூவவும். ஆற வைத்து, ஃபிரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம்.&lt;br /&gt;- கே.கே.மகேஷ், படம்: எல்.ராஜேந்திரன்&lt;br /&gt;திண்டுக்கல் பகுதியின் பெரும்பாலான கல்யாண கொண்டாட்டங்களில்... சந்திரசேகரன் கைமணக்கத் தவறுவ தில்லை. 25 வருடங்களாக சமையலில் ஈடுபட்டிருக்கும் இவரின் கண்டுபிடிப்பு கரண்டி அல்வா! 'கரண்டி ஆம்லெட்' திண்டுக்கல் பகுதியில் ஏகபிரபலம். ஆனால், அதென்ன கரண்டி அல்வா? என் றால்... ''சும்மா நானே வெச்ச பேருதான்'' என்று சிரிக்கிறார். அந்த கரண்டி அல்வாவைக் கிண்டுவோமா?&lt;br /&gt;கரண்டி அல்வா&lt;br /&gt;தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், சர்க்கரை - 2 கப், வறுத்த முந்திரி - ஒன்றரை கப், நெய் - 2 கப், எண்ணெய் - 4 கப், ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: மைதா மாவில் தண்ணீர் விட்டு, கெட்டியாகக் கரைத்து, இரண்டு நாட்கள் புளிக்க வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில், தண்ணீரைக் கொதிக்க வைத்து சர்க்கரையைப் போட்டு, பாகு பதம் வரும் வரை காய்ச்சவும். அதில், மைதா கரைசலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். அல்வா பதம் வந்ததும்... ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்த்து மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா இறுக்கமானவுடன், எண்ணெய், நெய் விட்டு மீண்டும் இளகும் வரை கிளறவும். கடைசியாக, வறுத்த முந்திரியைப் போட்டு இறக்கினால்... கரண்டி அல்வா ரெடி!&lt;br /&gt;- ஜி.பிரபு&lt;br /&gt;வேலூர் பகுதியில் நான்-வெஜ் பிரியாணிதான் மணமணக்கும். அதற்கு நடுவேயும்... பல ஆண்டுகளாக வெஜிடேரியன் கல்யாண சமையலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் பாபு. 'அண்ணே... கட்டாயம் முட்டைகோஸ் பொடிமாஸ் போட்டுடுங்கோ..!' என்று எல்லாக் கல்யாணங்களிலும் தவறாமல் ஆர்டர் போட்டுவிடுவார்களாம். உங்களுக்காக நாமும் அதையே ஆர்டர் செய்திருக்கிறோம்... ருசியுங்கள்!&lt;br /&gt;முட்டைகோஸ் பொடிமாஸ்&lt;br /&gt;தேவையானவை: முட்டைகோஸ் (நறுக்கியது) - 2 கப், கேரட், பீன்ஸ் (நறுக்கியது) - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், வெங்காயம் (நறுக்கியது) - 2, பாசிப்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் மூன்றையும் பாதி பதத்தில் வேக வைக்கவும். பாசிப்பருப்பை தனியாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தை வதக்கி... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பச்சை மிளகாய் சேர்க்கவும். வெந்த முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் மற்றும் பருப்பு ஆகியவற்றையும் சேர்த்து, உப்பு போட்டுக் கிளறி... 10 நிமிடம் மிதமான தீயில் மூடி வைக்கவும். பிறகு, தேங்காய் துருவல், கொத்தமல்லி தூவி கிளறவும். இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;- டி.தணிகைவேல் படம்: எம்.ரமேஷ்பாபு&lt;br /&gt;'அறுசுவை அரசு நடராஜன்' சமையல் என்றால், கல்யாண பத்திரிகை கிடைக்கப்பெற்ற அத்தனை பேருமே கண்டிப்பாக ஆஜாராகிவிடுவார்கள். அந்த 'அறுசுவை அரசின்' வாரிசு 'அறுசுவை' குமாரும் சென்னையைக் கலக்கிக் கொண்டிருக்கிறார் கல்யாண சமையலில். இதோ அவருடைய ஸ்பெஷல் செரோட்டி!&lt;br /&gt;செரோட்டி&lt;br /&gt;தேவையானவை: பெங்களூர் ரவை - ஒரு டம்ளர், மைதா மாவு - கால் டம்ளர், வனஸ்பதி - 100 கிராம், சமையல் சோடா- ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு, பால் - 2 கப், பாதாம் - 4, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், சர்க்கரை - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: வட்டமான ஒரு பேஸினில் ரவை, மைதாவை கொட்டி பாதி அளவு வனஸ்பதி, சமையல் சோடா சேர்த்து நன்றாகத் தேய்க்கவும். பிறகு, தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைய... உருட்டுவது போல் பக்குவமாக வரும். இதை 4 துண்டுகளாகக் கிள்ளிப் போடவும். அதில் ஒரு துண்டை எடுத்து வட்டமாக இட்டு, அதன் மேல் வனஸ்பதி தடவி மூன்றாக மடிக்கவும். திரும்பவும் வனஸ்பதி தடவி மடிக்கவும். இப்படி 6 முறை மடிக்கவும். இதுபோல் நான்கு துண்டுகளையும் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பூரி மாதிரி உடையாமல், அப்படியே அடுக்கடுக்கான லேயர் உப்பி வரும். அதுதான் செரோட்டி. தேவைப்பட்டால் இதன் மேல் லட்டு வைத்து அலங்கரிக்கலாம்.&lt;br /&gt;பாலை காய்ச்சி, பாதாம் பருப்பை விழுதாக அரைத்து அதில் சேர்த்து, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்க்கவும். இந்த பாதாம் பாலை செரோட்டியின் மேல் ஊற்றிப் பரிமாறவும்.&lt;br /&gt;- ரேவதி, படம்: எம்.உசேன்&lt;br /&gt;சென்னையில் பிரபல சமையல் கலைஞர்களில் தங்கராஜுக்கும் தனி இடம் உண்டு. அவருடைய அசத்தல் 'ரெசிபி'களில் பலரையும் கவர்ந்த ஒன்று உருளைக்கிழங்கு ஆயில் ரோஸ்ட். இதோ அதன் செய்முறை...&lt;br /&gt;உருளைக்கிழங்கு ஆயில் ரோஸ்ட்&lt;br /&gt;தேவையானவை: உருளைக்கிழங்கு - 200 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கரம் மசாலாத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, தக்காளி(நறுக்கியது), வெங்காயம் (நறுக்கியது) - தலா 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி, சதுரமாக நறுக்கி, உப்பு, சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். கடாயில், எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து வெங்காயம் போட்டுச் சிவக்க வறுக்கவும். அதில் தக்காளியையும் சேர்த்து கிரேவி பதம் வரும் வரை வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், பூண்டு விழுதை அதில் சேர்த்து மீண்டும் கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கைப் பொரித்து, அதை கிரேவியில் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.&lt;br /&gt;- நாச்சியாள், படம்: எம்.உசேன்&lt;br /&gt;கிரிவல புகழ் திருவண்ணாமலையில் சேகர் ஐயரின் எண்ணெய் கத்திரிக்காய் பொரியல் ஏக பிரபலம். 20 வருடங்களாக சுற்று வட்டார திருமணங்களில் அது மணந்து கொண்டே இருக்கிறது இவரின் கைப்பக்குவத்தால்...&lt;br /&gt;எண்ணெய் கத்திரிக்காய்&lt;br /&gt;தேவையானவை: பிஞ்சுக் கத்திரிக்காய் - அரை கிலோ, தக்காளி, வெங்காயம் (நறுக்கியது) - தலா கால் கிலோ, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;அரைக்க: தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், வெந்தயம் - 1 டீஸ்பூன்.&lt;br /&gt;செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து, உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும். கத்திரிக்காயின் அடிப்பகுதியில் நான்காகக் கீறவும். அதில் பிசைந்த கலவை வைத்து ஸ்டஃப் செய்யவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் தாளித்து, நறுக்கிய தக்காளி, பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். அது கிரேவி பதத்துக்கு வந்ததும், அதில் ஸ்டஃப் செய்த கத்திரியைப் போட்டு வதக்கி, வெந்ததும் இறக்கவும். கத்திரி எண்ணெயிலேயே வேகும் அளவுக்கு எண்ணெய் விட வேண்டும் என்பது முக்கியம்.&lt;br /&gt;- யா.நபீசா, படம்: பா.கந்தகுமார்&lt;br /&gt;பிரெஞ்சு காற்று வீசும் புதுச்சேரி... எதிலுமே வித்தியாசமாகத்தான் இருக்கும். அதை தன்னுடைய 'ரெசிபி'யிலும் மெய்ப்பிக்கிறார் அங்கே புகழ்பெற்ற சமையல் கலைஞர்களில் ஒருவராக இருக்கும் கண்ணன். லீச் ரப்ளி எனும் அந்தப் பெயரைக் கேட்டாலே அது புரிந்துவிடும்.&lt;br /&gt;லீச் ரப்ளி&lt;br /&gt;தேவையானவை: லீச் பழம் - 40, பால் - 5 லிட்டர், சர்க்கரை - கால் கிலோ, குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன், ஜாதிக்காய் - ஒன்று, இனிப்பு கோவா - அரை கிலோ, முந்திரி, பிஸ்தா, பாதாம் - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: பாதிக்குப் பாதி சுண்டும்வரை பாலைக் காய்ச்சவும். அதில் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்ததும், பொடித்த ஜாதிக்காய், ஏலக்காய்த்தூளை சேர்த்துக் கலக்கினால்... மசாலா பால் தயார்! லீச் பழத்தை எடுத்து, நடுவில் இனிப்பு கோவாவை வைக்க வேண்டும். மசாலா பாலை கப்பில் விட்டு, அதன் நடுவில் கோவா வைக்கப்பட்ட லீச் பழத்தை வைத்து, அதன்மேல் முந்திரி, பிஸ்தா, பாதாம் தூவி பரிமாறவும்.&lt;br /&gt;- எச்.சிராஜுதீன்&lt;br /&gt;'அம்மணி, நம்மவீட்டு கல்யாணத்துக்கு கட்டாயம் சூலூர் ராஜேந்திரன் சமையல்தான். இப்பவே தாக்கு சொல்லோணும்...' என்று கோயம்புத்தூர் பகுதி மக்களால் ரிசர்வ் செய்யப்படும் அளவுக்கு இருக்கிறார் கொங்கு மண்டல 'டாப் டென்' சமையல் கலைஞர்களில் ஒருவரான ராஜேந்திரன். இவருடைய ஸ்பெஷல்... கோவை முருங்கைக்காய் சாம்பார் மற்றும் கொத்தமல்லி பிரியாணி!&lt;br /&gt;கோவை முருங்கைக்காய் சாம்பார்&lt;br /&gt;தேவையானவை: முருங்கைகாய் - 2, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 6, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பூண்டு - 2 பல், தேங்காய் துருவல் - அரை கப், சின்ன வெங்காயம் - 6, தக்காளி (நறுக்கியது) - 4, கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 4, கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், பொடித்த வெல்லம் - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... சிறிது துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், பூண்டு, தேங்காய் துருவல், முந்திரி, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து, ஆற வைத்து அரைக்கவும். முருங்கைக்காயை தனியே வேக வைக்கவும். இன்னொரு பாத்திரத்தில் துவரம்பருப்பை வேக வைக்கவும். அரைத்த விழுதை அதில் கலந்து, எண்ணெயில் வதக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்துக் கொதிக்க விடவும். பொடித்த வெல்லத்தை சேர்க்கவும். நன்கு கொதித்தவுடன், வேக வைத்த முருங்கைக்காயைச் சேர்த்து... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டிக் கலக்க வேண்டும். பிறகு, நெய் விட்டு, உப்பு சேர்த்து ஒருமுறை கொதித்ததும் இறக்கவும்.&lt;br /&gt;கோவை கொத்தமல்லி பிரியாணி&lt;br /&gt;தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு, பிரியாணி அரிசி - 2 கப், நெய் - 100 கிராம், எண்ணெய் - 100 கிராம், பட்டை - 4, ஏலக்காய் - 6, கிராம்பு - 10, சோம்பு - ஒரு டீஸ்பூன், அன்னாசிப்பூ - 4, மராத்தி மொக்கு - 4, இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் - ஒரு கப் (நறுக்கியது), பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 4, பட்டாணி - அரை கப், முந்திரி - 20, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கிய கொத்தமல்லியை விழுதாக அரைக்கவும். பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, அதில் வாசனைப் பொருட்களைத் தாளிக்கவும், இடித்த சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஆகியவற்றை அதில் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், பச்சை மிளகாயை முழுதாக போடவேண்டும். பிறகு, இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, முந்திரி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், பட்டாணி சேர்த்து நன்கு கலக்கவும். அரைத்த கொத்தமல்லி விழுது, தயிர் ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கவும். அதில் 'ஒரு கப் அரிசிக்கு, ஒன்றரை கப்' என்ற அளவில் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, அரிசியைப் போட்டு பாத்திரத்தை மூட வேண்டும். மிதமான தீயில் 15 நிமிடம் வேக விடவும், மூடியை எடுத்துவிட்டு கிளறிக் கொண்டே இருக்கவும். பிறகு, கனமான மூடியால் மூடவும் (தம் கட்டுவது). 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, மூடியை அகற்றி ஒருமுறை கிளறினால்... கொத்தமல்லி பிரியாணி தயார்!&lt;br /&gt;வீடுகளில் செய்யும்போது, குக்கரில் செய்தாலே தம் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2884075294905186394?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2884075294905186394/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post_3864.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2884075294905186394'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2884075294905186394'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post_3864.html' title='முப்பது வகை திருமண சமையல்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-6558241145896017283</id><published>2010-02-11T10:49:00.000+02:00</published><updated>2010-02-11T10:50:47.780+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலீடு'/><title type='text'>தொழில் ஐயங்கள்</title><content type='html'>ரெண்டுல ஒண்ணு சொல்லுங்க?&lt;br /&gt;''எங்கள் குடும்பம் ஓட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளது. நான் 15 வருடம் அங்கேயே வேலை பார்த்தேன். பிறகு நான் யூ.பி.எஸ். உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று விட்டேன். இப்போது அந்தத் தொழிலில் ஐந்து வருடம் எனக்கு அனுபவம் இருக்கிறது. இப்போது சொந்தமாக பிஸினஸ் செய்யவேண்டும் என்று விரும்புகிறேன். மேலே சொன்ன இரண்டு தொழிலிலும் எனக்கு அனுபவம் இருப்பதால் எந்த பிஸினஸ் ஆரம்பிக்கலாம் என்பதில் குழப்பமாக உள்ளது. நீங்கள்தான் எனக்கு சரியான தீர்வை வழங்கவேண்டும்.''&lt;br /&gt;பி.ராஜேந்திரகுமார், மதுரை.&lt;br /&gt;ஆர்.எஸ்.வீரவல்லி. பேராசிரியர், கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிடியூட்.&lt;br /&gt;பிஸினஸில் அனுபவம் இருந்தால் மட்டும் போதாது, அதைத் தாண்டியும் சில விஷயங்கள் தேவைப்படும். எந்த பிஸினஸ் செய்வதாக இருந்தாலும் விடாமுயற்சி, மனஉறுதி, ரிஸ்க் எடுக்கும் தைரியம் இவை மூன்றும் கண்டிப்பாகத் தேவை. உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்யுங்கள். இவற்றில் ஒவ்வொன்றுக்கும் 10 மதிப்பெண்களுக்கு 7-க்கு கீழ் வாங்கினால் உங்களுக்கு பிஸினஸ் சரிப்படாது. இவற்றில் ஏழு மதிப்பெண்களுக்கு மேலே வாங்கினால் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையைப் பூர்த்தி செய்யுங்கள்.&lt;br /&gt;விடாமுயற்சி, மனஉறுதி, ரிஸ்க் எடுக்கும் தைரியம் இதெல்லாம் அடிப்படைக் குணாதிசயங்கள். பிஸினஸ் என்று வரும் போது எந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக் கிறீர்களோ அந்தத் தொழிலுக்கான எதிர்காலம், போட்டி யாளர்கள் இவற்றை ஆராய வேண்டும். இவை ஒவ்வொன்றுக்கும் மதிப்பெண் போடுங்கள். அதே போல உங்களுக்கு அந்த இரண்டு தொழில்களில் எந்தளவுக்கு திறமை, அனுபவம், ஆர்வம், ஆதாரம் இருக்கிறது என்பதையும் அறிந்து அதற்கேற்ப மதிப்பெண் போடுங்கள். (குறைந்தபட்ச மதிப்பெண் 0, அதிகபட்சம் 10)&lt;br /&gt;நீங்கள் சுயபரிசோதனை செய்துகொள்வது மட்டுமல்லாமல் உங்களைப் பற்றி நன்கறிந்த, பிஸினஸ் பற்றி ஓரளவு தெரிந்த நபர்களிடம் கொடுத்து உங்களை மதிப்பீடு செய்யச் சொல்லுங்கள்.&lt;br /&gt;இதில் இருந்து கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் எந்தத் தொழிலுக்கு அதிக மதிப்பெண் வருகிறதோ அந்த பிஸினஸை தேர்ந்தெடுக்கலாம். இதை உங்களையே செய்யச் சொல்வதன் நோக்கம் எல்லா விஷயங்களையும் பற்றி தெரிந்த பிறகு பிஸினஸில் இறங்க வேண்டும் என்பதற்காகத்தான்.&lt;br /&gt;100 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட பயோடீசல் பிளான்ட் ஒன்றை அமைக்கலாம் என்று இருக்கிறேன். இதற்கு எவ்வளவு செலவாகும்? அரசு மானியம் எதாவது உண்டா?&lt;br /&gt;மோகன், கோயம்புத்தூர்.&lt;br /&gt;வெங்கடாசலம், பேராசிரியர் மற்றும் தலைவர்,உயிராற்றல் துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை.&lt;br /&gt;250 முதல் 300 லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட இயந்திரங்களைத்தான் வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. ஆனால் இதைத் தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு டன் பிழியலாம் என்ற அளவில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;பயோடீசலைத் தவிர புண்ணாக்கும் கிடைக்கும். இந்த மொத்த அமைப்புக்கு 6 லட்சம் ரூபாய் வரை செலவாகும். 100 லிட்டர் உற்பத்தித் திறன் என்றால் இன்னும் குறைவாகவே செலவாகும். இதற்கு அரசு மானியம் எதுவும் வழங்கவில்லை.&lt;br /&gt;தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் பயோடீசலுக்கு 26 ரூபாய் என்று அரசு நிர்ணயித்துள்ளது. அதனால் இப்போது பெரிதாக லாபம் இல்லை. ஆனால் மற்ற நாடுகள் பயோடீசலுக்கு பிரீமியம் விலையை நிர்ணயித்துள்ளது. இந்தியாவும் பயோடீசல் விலையை 34 ரூபாயாக அறிவிக்கலாம் என்று செய்திகள் வருகின்றன. அப்படி விலையை உயர்த்தும்போது இது லாபகரமான பிஸினஸ்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-6558241145896017283?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/6558241145896017283/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post_4137.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6558241145896017283'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6558241145896017283'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post_4137.html' title='தொழில் ஐயங்கள்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-7760230357697782407</id><published>2010-02-11T10:47:00.000+02:00</published><updated>2010-02-11T10:48:42.014+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலீடு'/><title type='text'>பரஸ்பர சஹாய நிதி - அறிமுகம்</title><content type='html'>ஏன், எதற்கு, எப்படி?&lt;br /&gt;''மியூச்சுவல் ஃபண்ட்னா என்ன, தெரியுமா?''&lt;br /&gt;''இந்த சீட்டு போடற மாதிரிதானே?''&lt;br /&gt;''ஃபைனான்ஸ் கம்பெனிங்க...''&lt;br /&gt;''கேள்விப்பட்டிருக்கேன், ஆனா கரெக்டா அது என்னனு சொல்லத் தெரியல!''&lt;br /&gt;பலபேரிடம் கேட்டபோது இப்படித்தான் பதில் கிடைத்தது. இவ்வளவுக்கும் இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட எட்டு லட்சம் கோடி ரூபாய்!&lt;br /&gt;ஆச்சரியப்படற அளவுக்கான தொகைதான் அது என்றாலும் கூட, இன்னும் பரவலான மக்களை அது போய்ச் சேரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட்டில் பணத்தைப் போட்டு, லாபத்தை ருசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ருசியை எல்லோரும் அனுபவிக்க வேண்டும், பலனடைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கட்டுரை... மியூச்சுவல் ஃபண்ட் பற்றி ஏற்கெனவே அறிந்தவர்கள் இதை 'ஸ்கிப்' செய்துவிட்டு மற்ற பகுதிக்கு சென்றுவிடவும்...&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன?&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்டை நிர்வகிப்பதற்காகவே பல நிறுவனங்கள் இருக்கின்றன. இவை பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியைத் திரட்டி, பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அப்படி முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தையோ அல்லது நஷ்டத்தையோ முதலீட்டாளர்கள் பகிர்ந்து கொள்வார்கள். இப்படி நிர்வகிப்பதற்காக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை கமிஷனாக எடுத்துக் கொள்கின்றன. இந்த நிறுவனங்கள் 'செபி'யின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.&lt;br /&gt;எதற்காக மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும்?&lt;br /&gt;யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வராமலா போய்விடும்? அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஒரு காலம் என்றால், இப்போது இந்தியா சீனா ஆகிய நாடுகளின் காலம். இந்த இரண்டு நாட்டின் பொருளாதாரம் மிகச் செழிப்பாக வளரும் என்று நிபுணர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் அப்படிப்பட்ட காலத்தில் சம்பளங்கள் உயரும், விலைவாசிகளும் (பணவீக்கம்) உயரும். அப்படி பணவீக்கம் உயரும்போது, நமது சேமிப்புகளுக்கு கிடைக்கும் வருமானமும் அதிகமாக இருந்தால்தான் சமாளிக்க முடியும். அதற்கு பங்கு சார்ந்த முதலீடுகள்தான் ஏற்றது. அப்படி பங்குகளில் செய்யும் முதலீட்டுக்கு மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த கருவி.&lt;br /&gt;இதுவரை இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களின் செயல்பாடு எப்படி?&lt;br /&gt;மிக மிக அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும்! கடந்த ஐந்து வருடங்களில் பத்துக்கும் மேற்பட்ட திட்டங்கள் ஆண்டொன்றுக்கு 28%-க்கு மேல் வருமானத்தைத் தந்துள்ளன. அதேபோல் எஸ்.ஐ.பி. முறையில் கடந்த 10 வருடங்களில் முதலீடு செய்திருந்தாலும், ஆண்டொன்றுக்கு 28%-க்கு மேல் வருமானத்தை பல நல்ல திட்டங்கள் தந்துள்ளன. இந்த அளவுக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகம் என்றால்கூட, ஆண்டொன்றுக்கு நீண்டகால அடிப்படையில் 12 - 15% வருமானத்தைத் தாராளமாக எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது. தேர்ந்தெடுத்த ஒரு சில திட்டங்களில் பதினான்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், அதன் மதிப்பு இன்று 42 லட்சத்துக்கும் மேல்! இருப்பினும் சந்தையின் செயல்பாட்டைவிட மிக மோசமாக செயல்பட்ட திட்டங்களும் இருக்கின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது.&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட்டில் எப்படி முதலீடு செய்வது சிறந்தது?&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட்களில் பங்கு, கடன், மற்றும் இரண்டும் சார்ந்த திட்டங்கள் என பலவகை இருந்தாலும், இங்கே நாம் எடுத்துக் கொள்ளப்போவது பங்கு சார்ந்த திட்டங்களைத்தான். பங்கு சார்ந்த முதலீடுகள் அதிக ரிஸ்க் உடையது. ஆனால் நீண்டகால அடிப்படையில் பார்க்கும்போது ரிஸ்க் மிகவும் குறைவு. அதனால் சிறு முதலீட்டாளர்கள் தங்களுடைய நீண்ட நாள் தேவைகளுக்காக பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. அப்படி முதலீடு செய்யும் பணம் இடையில் தேவைப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பொதுவாக எஸ்.ஐ.பி. முறையில் மாதாமாதம் முதலீடு செய்வது ரிஸ்க்கை கணிசமாகக் குறைக்கும்.&lt;br /&gt;நம்முடைய ஒவ்வொரு தேவைக்காகவும் குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, ஒன்று அல்லது இரண்டு ஃபண்டை தேர்வுசெய்து முதலீடு செய்து வரலாம். நாம் நிர்ணயித்த தொகையை அடைந்தவுடன், முழுவதுமாக பங்கு சார்ந்த திட்டங்களில் இருந்து வெளியேறி, நிரந்தர வருமானம் தரக்கூடிய கடன் சார்ந்த திட்டங்களில் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதுபோன்ற சேமிப்பை குறிக்கோள் சார்ந்த சேமிப்பு/ முதலீடு என்பார்கள். இளவயதினர் பலருக்கும் இதுபோன்ற முதலீடு பொருந்தும். அவ்வாறு முதலீடு செய்யும்போது 'குரோத் ஆப்ஷன்' என்று சொல்லக்கூடிய வளர்ச்சிப் பாதையிலேயே செல்லலாம். 25 வயதிலிருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள் அவ்வாறு முதலீடு செய்யும்போது, தங்களது முதலீட்டில் 75% முதல் 50% வரை பங்கு சார்ந்த முதலீடுகளில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். மீதியை வேறு முதலீட்டுகளில் திசை திருப்பலாம்.&lt;br /&gt;எத்தனை ஃபண்ட்களில்/ ஃபண்ட் நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்?&lt;br /&gt;பல பேர்கள் தாங்கள் கேள்விப்படும் ஃபண்ட்களில் எல்லாம் முதலீடு செய்துவிடுவார்கள். கடைசியில் அதுவே ஒரு பெரிய தலைவலி ஆகிவிடும்! நமது போர்ட்போஃலியோவில் ஃபண்ட்களின் மற்றும் ஃபண்ட் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நமது வேலைப்பளு கூடும், கவனம் சிதறும், மேலும் மொத்த முதலீட்டின் வருமானமும் குறைய வாய்ப்புள்ளது. நிறைய ஃபண்ட்களில் முதலீடு செய்வதால் மட்டுமே ரிஸ்க்கும் குறைந்து விடாது. அதனால் நல்ல ஃபண்ட் நிறுவனங்களாக நான்கு அல்லது ஐந்தை மட்டும் தேர்ந்தெடுத்து அதற்குள்ளேயே முதலீடு செய்வது நல்லது. அதேபோல் முதலீடு செய்யும் ஃபண்ட் திட்டங்களின் எண்ணிக்கையையும் ஒரு வரையறைக்குள் வைத்திருப்பதுதான் நல்லது. நீங்கள் ஒரு சிறிய முதலீட்டாளர் என்றால் 2 - 4 திட்டங்களிலும், நடுத்தர முதலீட்டாளர் என்றால் 6 - 8 திட்டங்களுக்கு மிகாமலும், பெரிய முதலீட்டாளர் என்றால் 10 - 12 திட்டங்களுக்கு மிகாமலும் பார்த்துக் கொள்வது நன்று.&lt;br /&gt;ஃபண்டை எப்படி தேர்வு செய்வது?&lt;br /&gt;இந்தியாவில் இன்று கிட்டத்தட்ட 40 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உள்ளன. அவை நிர்வகிக்கும் திட்டங்கள் நூற்றுக்கணக்கானவை. நீங்கள் நல்ல ஃபண்ட்களைத் தேர்வு செய்வதற்கு கீழ்கண்ட ஃபில்ட்டர்களை அப்ளை செய்யலாம். இதுவே முடிவானதல்ல, நீங்களே கூட இன்னும் சில ஃபில்ட்டர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;1. குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருந்துள்ளவை.&lt;br /&gt;2. தனிப்பட்ட திட்டங்களின் அஸட் சைஸ் 500 கோடி ரூபாய்க்கு மேல் இருப்பவை.&lt;br /&gt;3. ஃபண்ட் ஹவுஸின் அஸட் சைஸ் (மொத்தத் திட்டங்களின் கூட்டு மதிப்பு) மீடியனுக்கு மேல் இருத்தல் வேண்டும் (இன்றைய நிலையில் ரூ 8,000 கோடிக்கு மேல்).&lt;br /&gt;4. ஜெயன்ட் மற்றும் லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகள் அதிகமாக இருப்பவை.&lt;br /&gt;5. கடந்த ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு மற்றும் அதற்கும் மேற்பட்ட கால கட்டங்களில் சென்செக்ஸ்/ நிப்டி 50 குறியீடுகளைவிட அதிகம் வருமானத்தைத் தந்துள்ளவை.&lt;br /&gt;6. ரேட்டிங் கொடுக்கப்பட்ட திட்டங்களில் மட்டுமே முதலீட்டை மேற்கொள்ளுங்கள்.&lt;br /&gt;7. ஓப்பன் எண்டட் திட்டங்களாக இருப்பது நல்லது.&lt;br /&gt;பயப்படாதீர்கள்!&lt;br /&gt;ஏமாற்றிவிட்டு ஓடிவிடும் லோக்கல் ஃபைனான்ஸ் கம்பெனிகளோடு ஃபண்ட் நிறுவனங்களை ஒப்பிட்டு பல பேர்கள் பயந்துகொண்டிருக்கிறார்கள்! ஆனால் உண்மை அப்படி இல்லை. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடுமையான சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றன. அவற்றால் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட முடியாது. மேலும் மியூச்சுவல் ஃபண்டுகளை இந்தியாவிலும் உலகளவிலும் உள்ள பல தலைசிறந்த நிறுவனங்கள்தான் நடத்தி வருகின்றன. மற்ற அனைத்தையும் சரியாக தேர்ந்தெடுத்துவிட்டால் முதலீட்டாளர் எடுக்க வேண்டிய ரிஸ்க் என்பது சந்தை ரிஸ்க் மட்டும்தான். உங்கள் பணத்தைப் போடுவதற்கு முன்பு நன்றாக ஹோம்வொர்க் செய்து முதலீடு செய்தால் பலன் நிச்சயம். பயத்தால் பலனை இழந்து விடாதீர்கள்!&lt;br /&gt;ஃபண்ட் டிக்ஷ்னரி&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளராவது என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் சில வார்த்தைகளை அடிக்கடி கேட்க வேண்டியதிருக்கும். அப்படிப்பட்ட சில சொற்களும் அதற்கான விளக்கமும்...&lt;br /&gt;யூனிட் - மியூச்சுவல் ஃபண்ட்களை விற்கும் அளவு யூனிட் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு யூனிட்டின் முகமதிப்பு ரூ 10 ஆகும். முதன்முதலாக வெளிவரும்போது 10 ரூபாய்க்கே விற்பனையாகும். பிற்காலங்களில் அந்த ஒவ்வொரு யூனிட்டின் மதிப்பும், அந்த திட்டத்தின் செயல்பாட்டைப் பொறுத்து முகமதிப்பைவிட கூடவோ குறையவோ செய்யும்.&lt;br /&gt;என்.ஏ.வி - என்.ஏ.வி என்பது 'நெட் அஸட் வேல்யூ' ஆகும். ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தின் ஒரு தேதியில் உள்ள மொத்த சொத்துக்களை அதன் கடன்களில் இருந்து கழித்தபிறகு வரும் தொகையை, அன்றைய தேதியில் உள்ள யூனிட்டுகளால் வகுத்து வருவதுதான் என்.ஏ.வி. ஆகும்.&lt;br /&gt;ஓப்பன் எண்டட் ஃபண்ட் - ஓப்பன் எண்டட் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் யூனிட்டுகளை எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதுவரை நன்றாகச் செயல்பட்டுள்ள பலதிட்டங்கள் ஓப்பன் எண்டட் வகையைச் சார்ந்தவையே.&lt;br /&gt;குளோஸ் எண்டட் ஃபண்ட் - இவ்வகையைச் சார்ந்த திட்டங்களில் குறிப்பிட்ட வருடங்களுக்கு புதிதாக வாங்கவோ விற்கவோ முடியாது. இவ்வகையைச் சார்ந்த திட்டங்கள் பல இந்தியாவில் சிறப்பாகச் செயல்படவில்லை.&lt;br /&gt;டைவர்ஸிஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் - இத்திட்டங்கள் அனைத்து துறைசார்ந்த பங்குகளிலும் தங்களது முதலீட்டை மேற்கொள்ளும். இத்திட்டங்களின் ரிஸ்க், சந்தை ரிஸ்க்கை ஒட்டி அமையும்.&lt;br /&gt;செக்டோரல் ஃபண்ட்ஸ் - இத்திட்டங்கள் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் தங்களது முதலீட்டை மேற்கொள்ளும். டைவர்ஸிஃபைடு திட்டங்களைவிட இத்திட்டங்களுடைய ரிஸ்க் அதிகம்.&lt;br /&gt;லார்ஜ் கேப் திட்டங்கள் - பெரிய நிறுவனப் பங்குகளில் மட்டும் முதலீடு செய்யும் திட்டங்கள்.&lt;br /&gt;மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் திட்டங்கள் - நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டங்கள்.&lt;br /&gt;என்ட்ரி லோட் - யூனிட்டுகளை வாங்கும்போது முதலீட்டாளர் செலுத்த வேண்டிய கட்டணம். இக்கட்டணம் இன்றைய நிலையில் முழுவதுமாக செபியால் அகற்றப்பட்டுவிட்டது.&lt;br /&gt;எக்ஸிட் லோட் - யூனிட்டுகளை விற்கும்போது முதலீட்டாளர் செலுத்த வேண்டிய கட்டணம். ஓப்பன் எண்டட் திட்டங்கள் அனைத்திலும் முதலீடு செய்த ஒரு வருடத்துக்குள் வெளியேறினால் 1% வசூலிக்கப்படுகிறது. அதற்குமேல் வெளியேறும்போது எக்ஸிட் லோட் எதுவும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-7760230357697782407?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/7760230357697782407/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post_11.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/7760230357697782407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/7760230357697782407'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post_11.html' title='பரஸ்பர சஹாய நிதி - அறிமுகம்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-1511261012423932920</id><published>2010-02-11T10:43:00.000+02:00</published><updated>2010-02-11T10:45:26.816+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முதலீடு'/><title type='text'>முதலீடு ஆலோசனை</title><content type='html'>நான் 5 ஸ்டார் ஃபண்ட் ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். அந்த ஃபண்ட் தற்போது 2 ஸ்டார் ஃபண்டாக உள்ளது. நான் அந்த ஃபண்டை என்ன செய்யலாம்?&lt;br /&gt;- பிரகாஷ், லால்குடி.&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது வெறும் ஸ்டார் ரேட்டிங்கை மட்டுமே வைத்து தேர்ந்தெடுப்பது அவ்வளவு நல்லதல்ல. அந்த ஃபண்டின் ஐந்தாண்டு மற்றும் அதற்கு மேலும் உள்ள வருமானம், ஃபண்ட் ஹவுஸ் மற்றும் அத்திட்டம் நிர்வகிக்கும் தொகை, ஃபண்ட் மேனேஜரின் அனுபவம் போன்ற பலவற்றையும் மனதில் வைத்துதான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வாறு தேர்தெடுத்த பிறகு, வருடத்துக்கு ஒரு முறையாவது நாம் செய்திருக்கும் முதலீட்டின் செயல்பாட்டினை கவனிக்க வேண்டும். சில நல்ல ஃபண்டுகள்கூட சில நேரங்களில் சுமாராக செயல்படும். அதற்காக உடனடியாக அந்த ஃபண்டை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நீண்ட கால செயல்பாட்டை வைத்து ஃபண்டை மாற்றலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.&lt;br /&gt;பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது குரோத், டிவிடெண்ட் ரிஇன்வெஸ்ட்மென்ட், அல்லது டிவிடெண்ட் பேஅவுட் இவற்றில் எந்த ஆப்ஷனுக்குச் செல்லலாம்?&lt;br /&gt;- உமா கணேசன், கடலூர்.&lt;br /&gt;எந்த ஆப்ஷனில் செல்லலாம் என்பது ஒருவருடைய வயது மற்றும் தேவைகளைப் பொறுத்தது. இளைஞர்கள், சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள், உடனடியாகப் பணம் தேவைப்படாதவர்கள், நீண்டநாள் லட்சியங்களுக்காக முதலீடு செய்பவர்கள் குரோத் ஆப்ஷனுக்குச் செல்லலாம். முதியோர்கள், பணம் தேவைப்படுபவர்கள், தங்களது முதலீட்டில் உள்ள ரிஸ்க்கை குறைத்துக் கொள்ள விரும்புபவர்கள் டிவிடெண்ட் பேஅவுட் ஆப்ஷனுக்குச் செல்லலாம். டிவிடெண்ட் ரிஇன்வெஸ்ட்மென்ட் ஆப்ஷனில் எந்தவித சிறப்பம்சமும் இல்லை. அதனால் அதைத் தவிர்த்துவிடலாம். கடன் சார்ந்த திட்டங்களுக்கு உள்ளது போல், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு டி.டி.டி (DDT – Dividend Distribution Tax) என்று கூறப்படும் வரி கிடையாது. ஆகவே எந்த ஆப்ஷனுக்குச் செல்லலாம் என்பது அவரவர்களுடைய தேவையைப் பொறுத்தது.&lt;br /&gt;எங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகிறது. அவளின் கல்லூரி மற்றும் திருமணச் செலவுகளுக்காக சேமிக்க விரும்புகிறோம். எவ்வாறு சேமிக்கலாம்?&lt;br /&gt;- மஞ்சுளா, கும்பகோணம்.&lt;br /&gt;இன்னும் 16 ஆண்டுகள் கழித்து வரக்கூடிய செலவுக்காக இப்போதே சேமிக்க விரும்புகிறீர்கள்... இவ்வளவு நீண்ட காலத் தேவைகளுக்கு மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எஸ்.ஐ.பி. முறையில் சேமிப்பது, வேறு எந்தவிதமான முதலீட்டையும்விட (இன்ஷூரன்ஸ் உள்பட) சிறந்தது. பெற்றோரின் பான் கார்டை வைத்தே குழந்தையின் பெயரில் முதலீட்டைச் செய்யலாம். நீண்ட காலம் என்பதால் மிட்கேப் ஃபண்ட்களில்கூட முதலீடு செய்யலாம். குறைந்தது ஆண்டுக்கு ஒருமுறையாவது முதலீட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்.&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது ஒரே தடவையில் முதலீடு செய்வது நல்லதா அல்லது மாதா மாதம் எஸ்.ஐ.பி. முறையில் முதலீடு செய்வது நல்லதா?&lt;br /&gt;- செல்வசுந்தரம், தென்காசி.&lt;br /&gt;பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் மாதாந்திர முறையில் முதலீடு செய்வதுதான் சிறந்தது. இதில் ரிஸ்க் குறைவு - அதே சமயத்தில் முதலீட்டு ஒழுக்கமும் இருக்கும். ஒரே தடவையில் முதலீடு செய்வதற்குப் பதிலாக எஸ்.டி.பி. (STP – Systematic Transfer Plan) முறையில் முதலீடு செய்யலாம். இதில் ரிஸ்க் இல்லாத கடன் திட்டத்தில் மொத்த பணத்தையும் போட்டு விட்டு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பங்கு சார்ந்த முதலீட்டுக்கு மாற்றி விடலாம்.&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கு அடிப்படையில் என்னென்ன தேவை?&lt;br /&gt;- ரவிபாரதி, ராணிப்பேட்டை.&lt;br /&gt;மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்வது மிகவும் சுலபம். பான் கார்டும், பேங்க் அக்கவுன்ட்டும் இருந்தால் போதுமானது. மைக்ரோ எஸ்.ஐ.பி. (வருடத்துக்கு 50,000 ரூ. கீழ்) மூலம் முதலீடு செய்தால் பான் கார்டு கூடத் தேவையில்லை. ஏதாவது ஒரு அரசாங்க அடையாள அட்டை இருந்தால் போதுமானது.&lt;br /&gt;வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர்கள் இந்திய மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா?&lt;br /&gt;- வின்சென்ட் ராஜ், சிங்கப்பூர்.&lt;br /&gt;தாராளமாகச் செய்யலாம். இந்திய மக்களைப் போல அவர்களுக்கும் மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு போன்றவை தேவை.&lt;br /&gt;நான் ஒரு சிறிய முதலீட்டாளர். துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாமா?&lt;br /&gt;- மாணிக்கம், புவனகிரி.&lt;br /&gt;சிறிய முதலீட்டாளர்கள் துறை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கலாம். துறை சார்ந்த திட்டங்கள் டைவர்ஸிஃபைடு திட்டங்களைவிட அதிக ரிஸ்க் உடையது. டைவர்ஸிஃபைடு திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது முதலீட்டாளர்கள் சந்தை ரிஸ்க்கை மட்டும்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். துறைசார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது சந்தை ரிஸ்க்குடன் சேர்ந்து துறை சார்ந்த ரிஸ்க்கையும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறு துறை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது மொத்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் 20 - 30%-க்குள் இருப்பது நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-1511261012423932920?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/1511261012423932920/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/1511261012423932920'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/1511261012423932920'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/02/blog-post.html' title='முதலீடு ஆலோசனை'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2231515872121550419</id><published>2010-01-29T03:41:00.001+02:00</published><updated>2010-01-29T03:46:04.363+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல்'/><title type='text'>கறிமீன் பொலிச்சது...!</title><content type='html'>கறிமீன் பொலிச்சதுசெய்முறை:சின்ன வெங்காயம், வெந்தயம், கடுகு, காஷ்மீர் சில்லி பௌடர், கறிவேப்பிலை, புளி, உப்பு இவற்றை தேவைக்கு ஏற்ப அரைத்து மசாலாவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு காய்ந்த தேங்காய் எண்ணெயில் சிறிது கடுகு, கறிவேப்பிலையைப் போட்டு வறுத்தவுடன் அரைத்த கலவையைக் கொட்டி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.பின்பு,கழுவிய மீனை நன்றாக சமையல் எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டு வேக வைத்த மசாலாவில்   போட்டு நன்றாக மீனைத் திருப்ப வேண்டும். இப்படித் திருப்பும் போது மசாலா வாணலியில் அதிக சூட்டில் அடுப்பிலேயே இருக்க வேண்டும்.இது முடிந்த பின்,வறுத்த மீனை எடுத்து வாழை இலையில் மடித்து எண்ணெய் இடாமல் வாணலியை சூடுபடுத்தி அதில் இந்த வாழைஇலை மீனை வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். இலை வதங்கியவுடன் அப்படியே எடுத்துப் பரிமாறினால் கறிமீன் பொலிச்சது தயார்.ஸ்பெஷல் ஐட்டங்கள் ப்ளஸ் ரேட்:1. கறி மீன் பொலிச்சது சுமார் 200 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை மீனின் நீளத்திற்கு ஏற்ப கிடைக்கும்.2. மத்தி ஃப்ரை  ரூபாய் 1203. ஐலா மீன் பொலிச்சது  ரூபாய்  1254. நண்டு ரோஸ்ட்  ரூபாய்  1556. கொஞ்சு ஃப்ரை (எறால்)  ரூபாய்  1657. கனவா மீன்  ரூபாய்  160கடற்கரய்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2231515872121550419?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2231515872121550419/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/01/blog-post_28.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2231515872121550419'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2231515872121550419'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/01/blog-post_28.html' title='கறிமீன் பொலிச்சது...!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-6402069042558795483</id><published>2010-01-03T12:26:00.000+02:00</published><updated>2010-01-03T12:27:45.153+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='moolathanam'/><title type='text'>இன்வெஸ்ட்மென்ட் டிப்ஸ்</title><content type='html'>&lt;p&gt;&lt;img hspace="3" vspace="3" align="absMiddle" src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/questin.jpg" width="30" height="30" /&gt;சிங்கப்பூரில் வசிக்கும் நான் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய விரும்புகிறேன். எனக்கு என்.ஆர்.இ. மற்றும் என்.ஆர்.ஓ. அக்கவுண்ட் உள்ளது. டீமேட் அக்கவுன்ட் ஆரம்பிக்கவும், ஷேரில் முதலீடு செய்யவும் வேறு என்ன ஆவணங்கள் தேவைப்படும்? &lt;/p&gt;&lt;p&gt;_ ரமேஷ் சண்முகம், சிங்கப்பூர்.&lt;/p&gt;&lt;p class="brown_color_bodytext"&gt;- சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட்&lt;/p&gt;&lt;p&gt;நீங்கள் என்.ஆர்.ஐ. என்பதால் என்.ஆர்.இ. டீமேட் அக்கவுன்ட், எஸ்.பி. அக்கவுன்ட், பி.ஐ.எஸ். எனப்படும் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்மென்ட் ஸ்கீம் &lt;img align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/p58.jpg" width="112" height="151" /&gt;(இது ஆர்.பி.ஐ. ஒப்புதல்- வங்கி மூலம் வழங்கப்படும்), டிரேடிங் அக்கவுன்ட் ஆகியவை தேவைப்படும். ஷேரில் சம்பாதிக்கும் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றால் கூடுதலாக என்.ஆர்.ஓ. அக்கவுன்ட் தேவைப்படும். என்.ஆர்.ஓ., மற்றும் என்.ஆர்.இ. டீமேட் அக்கவுன்ட் ஆகியவற்றை புரோக்கர் மூலமாகவும் மற்றவை நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்தும் பெறவேண்டும். இவை இருந்தால் நீங்கள் சிங்கப்பூரில் இருந்தபடியே ஷேரில் முதலீடு செய்யலாம். &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-6402069042558795483?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/6402069042558795483/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/01/blog-post_03.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6402069042558795483'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6402069042558795483'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/01/blog-post_03.html' title='இன்வெஸ்ட்மென்ட் டிப்ஸ்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2479257682498677434</id><published>2010-01-03T12:00:00.000+02:00</published><updated>2010-01-03T12:07:54.682+02:00</updated><title type='text'>ஈரோடு</title><content type='html'>&lt;strong&gt;'உ&lt;/strong&gt;ழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'ன்னு சொன்ன பாரதியாரை அப்படியே ஃபாலோ பண்ற ஊரு ஈரோடு. பஸ்சை விட்டு எறங்கி லாட்ஜுக்குப் போய் குளியலைப் போட்டுட்டு நகர்வலம் கிளம்பினேன். ஒருகாலத்துல விவசாயக் கொடி உசரத்துல பறந்த ஊரு. இப்ப அதுக்கு இணையா தொழில்துறையும் பட்டொளி வீசிப் பறக்குது. அதுவும் இப்பக் கொஞ்ச காலமா விவசாயத்துறையைத் தாண்டிப் போயிக்கிட்டிருக்கு தொழில்துறை. இந்த ஊர்ல முக்கிய தொழிலுன்னு பாத்தா, டெக்ஸ்டைல்ஸ், மஞ்சள், ஆயில், ஆட்டொமொபைல், என்ஜினீயரிங் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழில்கள்தான் இருக்கு&lt;br /&gt;&lt;p&gt;&lt;img hspace="2" vspace="2" align="left" src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/p22c.JPG" width="200" height="225" /&gt;முதல்ல டெக்ஸ்டைல்ஸ் அண்ட் கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட்டர்ஸ் அசோஷியேசன் தலைவர், சுப்பிரமணியனிடம் பேசினேன்... &lt;/p&gt;&lt;p&gt;''ஈரோடு ஜவுளித் தொழிலுக்கு தாய்வீடு மாதிரி! எல்லா ஊர்கள்ல இருந்தும் ஃபேப்ரிக் மெட்டீரியல் ஈரோடுக்கு வருது. இங்க எல்லா வகையான பிராசஸிங் யூனிட்டும் இருக்கு. அதனால வேலைவாய்ப்புக் கொட்டிக்கிடக்குது. ஆனா அதுக்கு ஏத்த மாதிரி ஆளுங்க கிடைக்காததால வேற மாநிலத்துக்காரங்க அதிகமா இங்கயிருக்காங்க. இந்தியாவுல இருக்குற எல்லா மொழி பேசுறவங்களும் இங்க இருக்காங்க. குறிப்பா இந்திரா நகர்னு ஒரு ஏரியா இருக்கு. அது குட்டி இந்தியான்னே சொல்லலாம். அந்தளவுக்கு எல்லா மாநிலத்துக்காரங்களும் அங்க இருக்காங்க. &lt;/p&gt;&lt;p&gt;&lt;img hspace="2" vspace="2" align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/p22e.JPG" width="250" height="215" /&gt;ஜவுளித் தொழில்ல நெய்வதில் ஆரம்பித்து எம்ப்ராய்டரி வரை எல்லா வேலையும் இங்க நடக்குது. மொத்தத்துல 5 லட்சம் பேருக்கு மேல நேரடியாவும், மறைமுகமாவும் வேலை பாக்குறாங்க. ஈரோடுல புடவை 50 ரூபாயிலிருந்தும், வேஷ்டி 25 ரூபாயிலிருந்தும் கிடைக்கும். &lt;/p&gt;&lt;p&gt;இங்க உற்பத்தியாகி வெளியூருக்குப் போறதில்லாம, வாரா வாரம் இங்கயே துணிச் சந்தை கூடுது. விலை ரொம்ப கம்மியா இருக்கும். துணியை வாங்குறதுக்காக பல மாநிலங்களிருந்தும் வியாபாரிக வருவாங்க. ஒவ்வொரு வாரமும் மூணு கோடி ரூபாய் வரைக்கும் வியாபாரம் ஆகுது. இந்தியாவிலயே வாரச்சந்தையில இவ்வளவு வியாபாரம் ஆகுறது இங்கதான்னு நினைக்கிறேன். &lt;/p&gt;&lt;p&gt;இந்த மாவட்டத்திலிருந்து நேரடி ஏற்றுமதி குறைவு. அப்படியிருந்தும் ஆண்டுக்கு 10 கோடிக்கும் மேலா இந்த மாவட்டத்திலிருந்து ஏற்றுமதியாகுது. மறைமுக ஏற்றுமதின்னு பாத்தா 15 கோடிக்கும் மேலயிருக்கும். ஈரோடுல இவ்வளவு வியாபாரம் நடந்தாலும் இங்க இருக்குற ஒரே பிரச்னை சாயக்கழிவுதான். இதைச் சரிசெய்ய அரசோட ஒத்துழைப்பு கட்டாயம் தேவை. அது நடந்தா தொழில் இன்னும் வளரும்''னு கோரிக்கையோட முடிச்சுகிட்டார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;img hspace="2" vspace="2" align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/p22d.JPG" width="269" height="183" /&gt;டெக்ஸ்டைல்ஸ் துறையில ஈரோடு தனி முத்திரை பதிச்சதுக்கு லுங்கி தயாரிப்பும் ஒரு காரணம்னு சொல்றாங்க. “ஒரு காலத்துல ஈரோட்ல மட்டுந்தான் லுங்கி தயாரிப்பு நடந்துச்சு. இந்தியா முழுசுக்கும் இங்கிருந்துதான் லுங்கி போயிகிட்டிருந்துச்சு. இப்ப கொஞ்சக் காலமாத்தான் அகமதாபாத், நாக்பூர் மாதிரியான வடமாநிலங்கள்ல தயாரிக்குறாங்க. லுங்கி இங்கிருந்து அதிகமா ஆந்திரா, கேரளாவுக்குதான் போகுது. லுங்கித் தொழில்ல மட்டும் ஈரோட்டுல தோராயமா வருஷத்துக்கு 600 கோடி ரூபாய் வியாபாரம் நடக்கும். ஏற்றுமதின்னு பாத்தா இலங்கைக்கும், மலேசியா, சிங்கப்பூருக்கும் அதிகமா போயிக்கிட்டிருந்துச்சு. இப்ப சமீபமா ஏற்றுமதி குறைஞ்சு போச்சு'' என்றார் முன்னணி லுங்கி தயாரிப்பாளரான பாபு.&lt;/p&gt;&lt;p&gt;ஜவுளிக்கு அடுத்ததா அதிகமா விற்பனையாகுற பொருள் மஞ்சள். இதைப் பத்தி மஞ்சள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிசங்கரிடம் பேசினேன். &lt;/p&gt;&lt;p&gt;'' இந்தியாவில பல பகுதிகள்ல மஞ்சள் விளைஞ்சாலும், ஈரோடு மஞ்சள்தான் தரத்துல உசந்து நிக்குது. இந்த நிறம், சைஸ் மத்த மஞ்சள்ல இருக்காது. இந்தியாவுலயே இரண்டாவது பெரிய மஞ்சள் மார்க்கெட் ஈரோடு மார்க்கெட்தான். வருஷத்துக்கு 500 கோடி ரூபாய் மஞ்சள்ல மட்டும் வர்த்தகம் நடக்குது. இப்ப மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்குது. 2007 ஜனவரியில 2500 ரூபாயிக்கு வித்த ஒரு குவிண்டால் மஞ்சளுக்கு இப்ப 9,000 ஆயிரம் கிடைக்குது. &lt;/p&gt;&lt;p&gt;&lt;img hspace="2" vspace="2" align="right" src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/p22b.JPG" width="297" height="193" /&gt;பொதுவா மத்த ஊர்கள்ல பணம், பொன்னு, பொருளை சேத்து வப்பாங்க. ஆனா, ஈரோடு மஞ்சள் விவசாயிக இன்னும் மஞ்சளை சேமிப்பா வச்சிட்டிருக்காங்க. அறுவடையான மஞ்சளை வீட்டுலயே சேமிச்சு வச்சுக்குவாங்க. சந்தையில நல்ல விலை வர்றப்பவோ, அவசரச் செலவுக்கோ வீட்டிலிருக்குற மஞ்சளை வித்துடுவாங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் மஞ்சள் வீட்டிலிருக்குறது, ஏ.டி.எம். மிஷினே வீட்டுல இருக்கிறமாதிரி'' என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;''ஒரு காலத்துல கடலை எண்ணெய், நல்லெண்ணைய்க்கு ஈரோடுதான் முக்கியமான மார்க்கெட். எள், நிலக்கடலை விளைச்சல் குறைஞ்சு போனதால இந்தத் தொழில் கொஞ்சம் சுணங்கிப் போச்சு. இப்ப ஈரோடு சுத்து வட்டாரப் பகுதிகளுக்கு இந்தத் தொழில் நகர்ந்துடுச்சு. இப்ப கொப்பரை, சூரியகாந்தி, பருத்திக் கொட்டை, அரிசியிலிருந்தும் ஆயில் எடுக்குறாங்க. &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/p22a.JPG" width="470" height="199" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கல்வியைப் பொறுத்தவரைக்கும் நல்லாயிருக்கு. ஆனா மத்திய, மாநில அரசுகளோட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் எதுவும் இல்லாதது ஒரு குறையா இருக்கு. ஈரோட்ல எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் இருந்தாலும், ஐ.டி. துறையைச் சேர்ந்தவங்க வர்றதுக்கு தயக்கம் காட்டுறாங்க. மத்திய அரசோட அலுவலகங்கள் இங்க அதிகமா வந்தாத்தான் ஐ.டி துறையும் கொஞ்சம், கொஞ்சமா வரும்.'' என்றார் சி.ஐ.ஐ. (இந்திய தொழில்கள் கூட்டமைப்பு) மாவட்டத் தலைவர் வெங்கடேசன். &lt;/p&gt;&lt;p&gt;''மஞ்சள் விவசாயத்துக்காக அரசு ஆரம்பிச்ச ரெகுலேட்டர் மார்க்கெட் சரியா நடக்குறதில்லை. விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்று கூடி நாகர்கோவிலில் இருக்குற அப்டா மார்க்கெட் மாதிரியான ஒரு சந்தையை ஏற்படுத்துற முயற்சி நடந்துகிட்டிருக்கு'' என்றார் வேளாண் அங்காடிகள் மேம்பாட்டு மன்றத்தின் பொருளாளர் நல்லுசாமி. &lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;img src="http://www.vikatan.com/Nanayam/2010/jan/15012010/p22.JPG" width="520" height="203" /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்த ஊர்ல மஞ்சளுக்கு அடுத்தபடியா கரும்பு, நெல், வாழைன்னு பயிர் பண்றாங்க. மாவட்டத்துல மூணு சர்க்கரை ஆலைக இருக்குது. இவ்வளவு தொழில்கள் இருக்குறதால இந்த ஊர் ஜனங்ககிட்ட தாராளமா காசு புரளுது. ஆனா, பொழுதுபோக்க இந்த ஊர்ல டாஸ்மாக், சினிமா தியேட்டரை விட்டா வேற வழியில்லாம ரொம்பக் கஷ்டப்படுறாங்க. &lt;/p&gt;&lt;p&gt;இந்த ஊர் சனங்க அம்புட்டு சீக்கிரம் காசை வெளியில எடுக்குறதில்லை.பணத்தை அதிகமா நிலங்கள்லதான் முதலீடு செய்றாங்க. ஈரோட்டுல இருந்து பெருந்துறை வரைக்கும் இருக்குற ஏரியா வேகமா வளந்துகிட்டிருக்கு. நிலம், தங்கத்துக்கு அடுத்த இடத்துலதான் ஷேர்மார்க்கெட் இருக்குது. நல்லா உழைச்சுச் சம்பாதிக்குற ஜனங்க அதிகமா இருக்குற இந்த ஊர்லதான் சீக்கிரமா பணக்காரனாக ஆசைப்படுறவங்களும் அதிகமா இருக்காங்க. உலகத்துல எந்த மூலையில புதுசா ஒரு மல்டிலெவல் மார்க்கெட்டிங் ஆரம்பிச்சாலும் அதோட ஏஜென்ட் ஈரோட்டுல நிச்சயம் இருப்பாங்க. அந்தளவுக்கு எம்.எல்.எம் பார்ட்டிக அதிகமா இருக்குற ஊர்.&lt;/p&gt;&lt;p&gt;கடைசியா ஷேர் மார்க்கெட் நிலவரத்தைப் பத்தி கோயமுத்தூர் கேப்பிடல் ஆபீசுல இருந்த சுரேஷ்பாபுகிட்ட கேட்டேன்...&lt;/p&gt;&lt;p&gt;''ஈரோடு மக்கள்கிட்ட ஷேர் மார்க்கெட் பத்துன விழிப்புணர்வு மெள்ள மெள்ள வந்துகிட்டிருக்கு. 2003-ல 10 புரோக்கர் ஆபீஸ் இருந்த இடத்துல இன்னிக்கு 100 ஆபீசுக்கு மேல இருக்கு. இந்த ஊர்ல ஷேர்ல 80 சதவிகிதம் பேர் டிரேடுலதான் ஈடுபடுறாங்க. 20 சதவிகிதம்தான் முதலீடா செய்றாங்க. கமாடிட்டி அவ்வளவா போகலை. அப்படியே பண்றவங்களும் தங்கம், வெள்ளி, பேப்பர் மாதிரி பாதுகாப்பான பொருட்கள்ல மட்டும் முதலீடு பண்றாங்க. மொத்தத்துல ஈரோட்டுல தினமும் 80 கோடிக்குக் குறையாம ஷேர் மார்க்கெட்ல பிஸினஸ் நடக்குது'' என்றார்.&lt;/p&gt;&lt;p&gt;மொத்தத்துல நல்ல சம்பாத்தியம்... அவசியமான செலவு... நிம்மதியான வாழ்க்கைன்னு வாழ்ந்துகிட்டிருக்காங்க ஈரோட்டு வாசிக.&lt;/p&gt;&lt;table class="big_bluecolor_english_text" border="0" cellspacing="0" cellpadding="0" width="100%"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td colspan="2"&gt;&lt;span class="orange_color_heading"&gt;&lt;span style="color:#006666;"&gt;- படங்கள் : ஆர்.குமரேசன், தி.விஜய்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/td&gt;&lt;td rowspan="2" colspan="3" align="middle"&gt; &lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2479257682498677434?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2479257682498677434/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/01/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2479257682498677434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2479257682498677434'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2010/01/blog-post.html' title='ஈரோடு'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-6092483772323227929</id><published>2009-12-24T12:13:00.000+02:00</published><updated>2009-12-24T12:16:47.020+02:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமையல் குறிப்புகள்'/><title type='text'>முப்பது வகை சூப்/ அவள் விகடன்</title><content type='html'>முழுமையான உற்சாகத்துக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்க அசத்தலா சமைச்சு, 'ஆஹா...ஓஹோ'னு மோதிரக்கையால உங்க வீட்டுல தங்கக் குட்டு வாங்கியிருப்பீங்க. இருந்தாலும் எப்பவாவது, 'டிஃபரன்ட்டா ஒரு சூப் வச்சுக் கொடேன்'னு உங்க ஆசை கணவரோ, பிள்ளைகளோ கேட்கிறப்ப 'திருதிரு துறுதுறு'னு முழிப்பீங்க.&lt;br /&gt;&lt;br /&gt;'பஜ்ஜி, சொஜ்ஜி கேட்டா அஞ்சு நிமிஷத்துல வகை வகையா செஞ்சுடலாம்... என்கிட்ட போயி டிஃபரன்ட்டான சூப் கேட்டா என்ன செய்வேன்?'னு நீங்க கையைப் பிசைஞ்சு நிக்கக் கூடாது இல்லியா... அதுக்காகவே வித்தியாசமான டேஸ்ட்ல பல வகை சூப்களை தயாரிக்கக் கத்துக்கொடுத்து, உங்களை குஷிப்படுத்தறாங்க ரேவதி சண்முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;''சூப் ஒரு மெயின் உணவு கிடையாது, ஆனா, பசியைத் தூண்டுற அபிடைஸர். அதாவது, சூப்பைக் குடிச்சுட்டுத்தான், சாப்பிட ஆரம்பிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;சூப் செய்யுறப்ப கார்ன்ஃப்ளாரை அப்படியே நேரடியா கலக்கக் கூடாது. தண்ணியிலயோ, பால்லயோ கரைச்சு விடணும். காய்கறியை அரைப் பதத்துக்குதான் வேக வைக்கணும். கொழகொழனு வேக வச்சா சூப்போட டேஸ்ட் மாறிடும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடமாட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;சில வகை சூப்புல பூண்டு பயன்படுத்தி இருப்போம். பூண்டு உபயோகிக்க விரும்பாதவங்க அதைத் தவிர்க்கலாம். அதேமாதிரி, பெரும்பாலான சூப்கள்ல மிளகுத்தூள் சேர்த்திருக்கோம். ஆனாலும், தேவைப்படறவங்க தனியாவும் மிளகுத்தூள் சேர்த்துக்கலாம்'' என்று சூப்பராக டிப்ஸ்களையும் தந்தார் ரேவதி சண்முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவா, குளிர்காலத்துல அதிகமா பசியெடுக்காது. அந்தச் சமயங்கள்ல சூடான சூப் வயித்துக்கு நல்லது. பசியையும் தூண்டும். அதனால வெரைட்டியான சூப்களை செய்து, இந்தக் குளிர்காலத்தை 'சூப்'பரா கொண்டாடுங்க!&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி சூப்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தக்காளி - 4, வெங்காயம் - 1, பீட்ரூட், கேரட், பீன்ஸ் - தலா 50 கிராம். பச்சை மிளகாய் - 1, இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 2 பல், புதினா - சிறிதளவு, நன்றாகக் கழுவிய கொத்தமல்லி வேர் - 3 துண்டு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, வெண்ணெய் - தேவை யான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தக்காளி, வெங்காயம், பீட்ரூட், கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நசுக்கவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, காய்கறிகளை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அதில் புதினா, கொத்தமல்லி வேர், மிளகுத்தூள், உப்பு, 5 கப் தண்ணீர் சேர்த்து 4-5 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் திறந்து காய்கறிகளை வடிகட்டி, மிக்ஸியில் அரைக்கவும். அதை, வடிகட்டிய சூப்புடன் சேர்த்து மீண்டும் சூடுபடுத்தி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கேரட் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கேரட் - 2, வெங்காயம் - 1, பூண்டு - 2 பல், நன்றாகக் கழுவிய கொத்தமல்லி வேர் - ஒரு கைப்பிடி அளவு, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், பட்டை - ஒரு துண்டு, வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கேரட்டை தோல் சீவி நறுக்கவும். வெங்காயம், பூண்டு இரண்டையும் தோலுரித்து நறுக்கவும். குக்கரில் வெண்ணெயைப் போட்டு உருக்கி... பட்டை, வெங்காயம், பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கி, கேரட்டை சேர்க்கவும். 2 நிமிடம் வதக்கியதும், கொத்தமல்லி வேர், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி பட்டை, கொத்தமல்லி வேரை தனியே எடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை அரைக்கவும். அரைத்ததை வடிகட்டிய நீரில் சேர்த்து, அதனுடன் பாலையும் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தக்காளி சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வெங்காயம் - 2, தக்காளி - 4, தேங்காய்ப்பால் - அரை கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சோம்பு - கால் டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வெறும் கடாயில் சோம்பு, தனியா, மிளகு, சீரகத்தை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெயை விட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தக்காளி, உப்பு சேர்க்கவும். நான்கு கப் தண்ணீர் சேர்த்து தக்காளி கரையும் வரை வதக்கவும். தயாராக இருக்கும் பொடியைச் சேர்த்து, 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி, அதில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறி சூப்மி&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அவரைக்காய் - 3, கொத்தவரங்காய் - 10, காராமணி - 6, புடலங்காய், முள்ளங்கி, பூசணி - சிறு துண்டுகள் (தலா ஒன்று), சீரகம் - அரை டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன். நெய் அல்லது எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, காய்கறிகளைச் சேர்க்கவும். அதில் இஞ்சி - பூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி, 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கால் கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரை கரைத்து, அதனுடன் சேர்க்கவும். 2 நிமிடம் கொதித்ததும் இறக்கி மிளகுத்தூள், கொத்தமல்லி, தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்கறி சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர் எல்லாம் சேர்த்து - 2 கப், நறுக்கிய வெங்காயம் - 1, கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - 2 டீஸ்பூன், வெங்காயத்தாள் - சிறிதளவு, சர்க்கரை - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பூண்டு - 2 பல், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: காய்ந்த மிளகாய், பூண்டு இரண்டையும் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும். அதில் வெங்காயம், காய்கறிகளைப் போட்டு 5 நிமிடம் நன்கு வதக்கி, 5 கப் தண்ணீர் விடவும். கொதிக்கும்போது சர்க்கரை, சோயா சாஸ், உப்பு, சேர்க்கவும். காய்கறி அரைப்பதம் வேகும் வரை வேக விடவும். கால் கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து அதில் சேர்த்து, கொதித்ததும் வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலிஃப்ளவர் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காலிஃப்ளவர் - 1 (சிறியது), வெங்காயம் - 1, தக்காளி - 3, துவரம்பருப்பு வேக வைத்த தண்ணீர் - 3 கப், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், பூண்டு (நசுக்கியது) - 8 பல், சோம்பு - கால் டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2. எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும். பாதியளவு காலிஃப்ளவரை உப்பு போட்டு முக்கால் பதம் வேக வைத்து தனியே வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, மிளகு, பட்டை, லவங்கம் தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, மீதியிருக்கும் காலிஃப்ளவர், பூண்டு போட்டு நன்கு வதக்கி, பருப்புத் தண்ணீர், உப்புச் சேர்க்கவும். மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு வடிகட்டவும். வடிகட்டிய நீரில், வேக வைத்த காலிஃப்ளவர் துண்டுகள், பால், மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாதாம் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காலிஃப்ளவர் துண்டுகள் - ஒரு கப், பாதாம் - 15, வெங்காயம் - 1, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், பிரிஞ்சி இலை - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கொதிக்கும் நீரில் பாதாம் பருப்புகளை 5 நிமிடம் ஊற வைத்து தோலுரிக்கவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயை உருக்கி பிரிஞ்சி இலை, வெங்காயம், பூண்டு, காலிஃப்ளவர் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அத்துடன் பாதாம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். ஆறியதும் வடிகட்டி, பிரிஞ்சி இலையை எடுத்துவிட்டு மீதமுள்ளவற்றை அரைக்கவும். கிடைக்கும் விழுதை வடிகட்டிய தண்ணீரில் போட்டுக் கொதித்ததும், பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மஷ்ரூம் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மஷ்ரூம் - 12, வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா 1, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப். வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: மஷ்ரூமை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். குக்கரில் வெங்காயம், உருளைக்கிழங்கு, 8 மஷ்ரூம், 4 கப் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறவிட்டு, வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். மீதமுள்ள மஷ்ரூமை மெல்லியதாக நறுக்கவும். கடாயில் வெண்ணெய் விட்டு உருக்கி, பூண்டு போட்டு வதக்கி, அதில் மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். அதில் சூப்பை சேர்த்து கூடவே பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;நூடுல்ஸ் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், பீன்ஸ், காலிஃப்ளவர் எல்லாம் சேர்த்து - 2 கப், வேக வைத்த சைனீஸ் நூடுல்ஸ் - அரை கப், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - 1, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, வெங்காயத்தாள் - சிறிதளவு, சர்க்கரை - அரை டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் காய்கறிகள், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், சர்க்கரை, உப்பு, ஆகியவற்றைப் போட்டு, அரைப் பதம் வரை கொதிக்க விடவும். அரை கப் தண்ணீரில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்து அதில் சேர்த்து, ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கிவிடவும். பிறகு, சோயா சாஸ், நூடுல்ஸ், மிளகுத்தூள், கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டாணி சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 1, புதினா - 15 இலைகள், கொத்தமல்லி - கைப்பிடி அளவு, இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 1, காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், வெண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பட்டாணியைக் கைப்பிடியளவு தனியே வைக்கவும். உருளைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கவும். குக்கரில் 2 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு உருக்கி இஞ்சி, பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு மீதமுள்ள பட்டாணி, புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கி, 4 கப் தண்ணீர் சேர்த்து 4 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிய தண்ணீரில் அரைத்த விழுதைப் போட்டு, அதில் உப்பு, பால் சேர்த்துக் கொதிக்க விடவும். கடாயில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் விட்டு உருக்கி தனியே எடுத்து வைத்த பட்டாணியைப் போட்டு வதக்கி (படபடவென இது பொரியும்) சூப்புடன் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சன்னா சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வெள்ளை சன்னா - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 4, பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள், சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;பொடிக்க: சோம்பு, சீரகம், தனியா, மிளகு - தலா அரை டீஸ்பூன். காய்ந்த மிளகாய் - 1 (எல்லாவற்றையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: சன்னாவை 6-8 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். வெந்ததும் கொஞ்சம் தனியே எடுத்து வைக்கவும். அந்தத் தண்ணீரிலேயே, மீதமுள்ள சன்னாவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, நசுக்கிய பூண்டு, இஞ்சி, சோம்பு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து 4-5 விசில் வரை வேக வைக்கவும். வெந்ததும் அரைத்து வடிகட்டினால் சூப் ரெடி. இதில் தயாராக இருக்கும் பொடி, எடுத்து வைத்த சன்னாவை சேர்த்துக் கொதிக்க விட்டு, பட்டையை எண்ணெயில் தாளித்துப் போட்டுப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடலைப்பருப்பு சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, பூண்டு - 3 பல், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பூண்டை நசுக்கவும். வேக வைத்த கடலைப்பருப்பில் பாதியளவு தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு, பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, மீதி கடலைப்பருப்பை சேர்க்கவும். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து வெங்காயம் வேகும்வரை கொதிக்க விட்டு இறக்கி, ஆறியதும் அரைத்து வடிகட்டவும். எடுத்து வைத்துள்ள கடலைப்பருப்பை வடிகட்டிய சூப்பில் சேர்த்து, கொதிக்க விடவும். கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்து அதில் கொட்டி, எலுமிச்சைச் சாறு, கறிவேப்பிலை, கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;முட்டைகோஸ் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பொடியாக நறுக்கிய கோஸ் - 2 கப், வெள்ளை பூசணி (நறுக்கியது) - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - 1, மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மைதா - 2 டீஸ்பூன், பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: முட்டைகோஸ், பூசணி துண்டுகளை சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் கோஸ், பூசணி, வெங்காயம், 4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், வடிகட்டி அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பொடியாக நறுக்கிய பூண்டைப் போட்டு வதக்கி அதில் மைதா சேர்க்கவும். ஒரு நிமிடம் அதை வதக்கி, பாலை சிறிது சிறிதாக விட்டு கட்டித் தட்டாமல் கிளறி, கொதிக்கும்போது வடிகட்டி வைத்திருக்கும் சூப்பை சேர்க்கவும். மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;லெமன் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வேக வைத்த பருப்புத் தண்ணீர் - 3 கப், பச்சை மிளகாய் - 1, தக்காளிச் சாறு - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், பாசுமதி அரிசி சாதம் - கால் கப். பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;தாளிக்க: நெய் - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொடிக்க: துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய் - 1 (வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்).&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பருப்புத் தண்ணீருடன், தக்காளிச் சாறு, பெருங்காயத்தூள், உப்பு, பொடித்த பொடி, கீறிய பச்சை மிளகாய், அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு கடுகு தாளித்து, அதில் பருப்புத் தண்ணீர் கரைசலை சேர்த்துக் கொதிக்க வைக்கவும். நன்கு பொங்கி வரும்போது இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சைச் சாறு, பாசுமதி சாதம், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகற்காய் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பொடியாக நறுக்கிய பாகற்காய் - ஒரு கப், சின்ன வெங்காயம் (நறுக்கியது) - அரை கப், பூண்டு - 6 பல், அரிசி கழுவிய நீர் - 3 கப், தேங்காய்ப்பால் - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கடாயில் எண் ணெய் விட்டு பாகற்காயைப் போட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காயம், பூண்டு, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். அதில் அரிசி கழுவிய நீரை விட்டு, 15 நிமிடம் கொதிக்க வைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தூதுவளை சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: தூதுவளைக் கீரை - ஒரு கப், வெங்காயம் - 1, பூண்டு - 5 பல், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை கப், எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து நசுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பூண்டு, தூதுவளைக் கீரையைப் போட்டு வதக்கி, 3 கப் தண்ணீர் விடவும். அதில் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்கவிட்டு, தூதுவளைக் கீரை வெந்ததும் இறக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், தேங்காய்ப்பால் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பசலைக்கீரை சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பசலைக்கீரை - ஒரு கட்டு, வெங்காயம் - 1, முளைப்பயறு - ஒரு கைப்பிடியளவு, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், பூண்டு (நசுக்கி யது) - 4 பல், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பசலைக்கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கவும். குக்கரில் கீரை, வெங்காயம், பயறைப் போட்டு, 3 கப் தண்ணீர் ஊற்றி, 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும், வடிகட்டி மிக்ஸியில் அரைத்து, அந்த விழுதை வடிகட்டிய சூப்பில் சேர்க்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பூண்டு போட்டு வதக்கி, சூப்புடன் சேர்த்து, உப்பு, மிளகுத்தூள், பால் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;புதினா - வெங்காய சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: புதினா - அரைக் கட்டு, சின்ன வெங்காயம் (நறுக்கி யது) - அரை கப், தக்காளி - 3, பூண்டு - 5 பல், கொத்தமல்லி - ஒரு கைப் பிடியளவு, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - அரை கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொடிக்க: மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்).&lt;br /&gt;&lt;br /&gt;பொரிக்க: பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். (சிவக்கப் பொரித்துக் கொள்ளவும்)&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: புதினா, கொத்தமல்லியை ஆய்ந்து தண்ணீரில் அலசவும். பூண்டை தோலுரிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு நன்கு வதக்கி, புதினா, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி அரைக்கவும். வடிகட்டிய தண்ணீருடன் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்கவிட்டு, பின்பு பாலில் கார்ன்ஃப்ளாரைக் கரைத்துச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். அதில் மிளகு-சீரகப்பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். சிவக்கப் பொரித்த சின்ன வெங்காயத்தை சூப்பின் மேல் தூவி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;கலர்ஃபுல் கார்ன் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: ஸ்வீட்கார்ன் - அரை கப், கேரட், குடமிளகாய், வெங்காயம் - தலா 1, கார்ன்ஃப்ளார் - 2 டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கேரட், வெங்காயம், குடமிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, காய்கறிகளைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர், ஸ்வீட்கார்ன், உப்பு சேர்த்து காயை வேகவிடவும். வெறும் கடாயில் மிளகாயை வறுத்துப் பொடித்துச் சேர்க்கவும். பாலில் கார்ன்ஃப்ளாரை கரைத்து அதனுடன் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் கலந்து இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லாரை சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: வல்லாரைக்கீரை - ஒரு கப், சின்ன வெங்காயம் - 10, பூண்டு - 4 பல், தக்காளி - 3, மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, வடித்த சாதம் - கால் கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: கீரையை சுத்தம் செய்யவும் பூண்டு, வெங்காயத்தை தோலுரிக்கவும். தக்காளியை நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதில் கீரையைப் போடவும். நன்கு வதங்கியதும் 3 கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும். வெந்ததும்... சாதம், உப்பு போட்டு கலந்து இறக்கவும். வடிகட்டி அரைக்கவும். வடிகட்டிய சூப்புடன் அரைத்த விழுதைச் சேர்த்து மீண்டும் வடிகட்டவும். பிறகு, கொத்தமல்லி, எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்க விட்டுப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;தாய்லாந்து சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: காலிஃப்ளவர் துண்டுகள் - 10, மஷ்ரூம் - 6, பச்சை மிளகாய் - 2, லெமன் க்ராஸ் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)- ஒரு துண்டு, நாரத்தை இலை - 2, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி வேர் - ஒரு கைப்பிடி அளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க விடவும். அதில் கழுவி நறுக்கிய காலிஃப்ளவர் துண்டுகள், மஷ்ரூம், சுத்தப்படுத்தி நசுக்கிய கொத்தமல்லி வேர், லெமன் க்ராஸ், பச்சை மிளகாய், இரண் டாகக் கிழித்த நாரத்தை இலை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு உப்பு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;முருங்கைக்காய் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: முருங்கைக்காய் - 2, வெங்காயம் - 1, பூண்டு - 5 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பாசுமதி அரிசி சாதம் - கால் கப், தேங்காய்ப்பால் - அரை கப், தனியா - 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: முருங்கைக்காயை வேக வைத்து உள்ளிருக்கும் சதையை வழித்தெடுத்து. வேக வைத்த தண்ணீரில் சேர்க்கவும். சாதத்தை மிக்ஸியில் அரைத்து அதில் சேர்க்கவும். வெங்காயம், பூண்டை தோலுரித்து பொடியாக நறுக்கவும். தனியா, மிளகு, சீரகத்தை தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டைப் போட்டு, பொரிந்ததும் வெங்காயம் சேர்க்கவும். வதக்கிய வெங்காயத்துடன் தனியா-மிளகு-சீரகம் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும். அதில் 3 கப் தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு போட்டு, கொதிக்கும்போது அரைத்த சாதம், முருங்கை கலவையை தண்ணீருடன் சேர்த்து ஊற்றவும். நன்கு கொதித்ததும் இறக்கி தேங்காய்ப்பால் கலந்து பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெப்பர் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 1, தனியாத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சில்லி சாஸ் - ஒரு டேபிள்ஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 5 பல், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேக வைக்கவும். தக்காளி, வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், வேக வைத்த துவரம்பருப்பு, தனியாத்தூள், கறிவேப்பிலை, உப்பு, 4 கப் தண்ணீர் சேர்த்து மீண்டும் நன்கு வேக விடவும். அதனை இறக்கி வடிகட்டி, அதில் மிளகுத்தூள், சாஸ் சேர்த்து கொதிக்க வைத்து, அரை கப் தண்ணீரில் கரைத்த கார்ன்ஃப்ளாரை கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ராஜ்மா சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: ராஜ்மா பீன்ஸ்- ஒரு கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, பூண்டு - 5, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, பட்டை - ஒரு துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலா - ஒரு சிட்டிகை, வெண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: ராஜ்மாவை 6-8 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில் ராஜ்மாவுடன் உப்புச் சேர்த்து 5-6 விசில் வந்ததும் இறக்கவும். பாதியளவு ராஜ்மாவை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெ யைப் போட்டு உருக்கி, பட்டை சேர்த்து, நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அதில் நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து தக்காளி நன்கு கரையும் வரை வதக்கவும். அதனுடன் பாதியளவு ராஜ்மா மற்றும் அதை வேக வைத்த தண்ணீர் ஆகிய வற்றைச் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். ஆறியவுடன், பட்டையை நீக்கி மீதமுள்ள கலவையை மிக்ஸியில் அரைத்து, தனியாக எடுத்து வைத்த ராஜ்மா, உப்பு சேர்க்கவும். வேக வைத்த தண்ணீர் குறைவாக இருந்தால் 3 கப் தண்ணீர் செர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு, கொத்தமல்லி, கரம் மசாலா, எலுமிச்சைச் சாறு, சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;சீஸ் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, வெங்காயம் - 1, காய்ச்சி ஆற வைத்த பால் - 2 கப், பிரிஞ்சி இலை - ஒரு துண்டு, பூண்டு - 4 பல், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீஸ் துருவல் - கால் கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: வெங்காயத்தை நறுக்கவும், உருளைக்கிழங்கைத் தோல் சீவி துண்டுகளாக்கவும். இரண்டையும் குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு வேக வைத்து இறக்கவும். ஆறியதும், வடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, பிரிஞ்சி இலை, பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் வடிகட்டிய சூப், பால், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொதித்ததும் இறக்கி, சீஸ் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;அகத்திக்கீரை சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: அகத்திக்கீரை - 2 கப், பாசிப்பருப்பு - கால் கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 1, இஞ்சி - ஒரு துண்டு, எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 3 பல், சோம்பு - ஒரு சிட்டிகை, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய்ப்பால் - அரை கப், கறிவேப்பிலை - சிறிதளவு. உப்பு - தேவையான அளவு. நெய் - 2 டீஸ்பூன் (தேவைப்பட்டால் சேர்க்கலாம்).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: அகத்திக்கீரையை சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் நசுக்கவும். குக்கரில் தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாகப் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி 4-5 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டி அரைக்கவும். மீண்டும் வடிகட்டவும். அதை 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு, நெய் சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்ரோனி சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: மக்ரோனி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப், வெங்காயம் - 1, தக்காளி - 3, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், காய்ச்சி ஆற வைத்த பால் - 3 கப், மைதா - 3 டீஸ்பூன், சீஸ் துருவல் - கால் கப். வெண்ணெய் - 3 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: 4 கப் கொதிக்கும் நீரில் மக்ரோனியை சேர்த்து மிதமான தீயில் நன்கு வேக விடவும். வெந்ததும் வடிகட்டி அலசி வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, 3 கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக விட்டு இறக்கி, ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி, மைதா சேர்த்து மிதமான தீயில் வறுத்து, பாலை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கட்டியில்லாமல் கிளறவும். அதில் தக்காளி - வெங்காய கலவையைப் போட்டு, மக்ரோனி, சீஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பேபிகார்ன் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பேபிகார்ன் - 5, மசூர் பருப்பு - அரை கப், வெங்காயம் - 1, தக்காளி - 2, பட்டை - ஒரு துண்டு, லவங்கம் - 2, கொத்தமல்லி - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய் - 3 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பேபிகார்னை மெல்லியதாக நறுக்கவும். பருப்பைக் குழைய வேக வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். கடாயில் நெய் (அ) எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் தாளித்து, வெங்காயம், தக்காளி, பேபிகார்ன் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி, அதில் 3 கப் தண்ணீர் சேர்க்கவும். அதனுடன் வேக வைத்த பருப்பு, கொத்தமல்லி சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க விடவும். உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;பீர்க்கங்காய் சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: பீர்க்கங்காய் - கால் கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய், வெங்காயத்தாள் - தலா 1, சோயா சாஸ் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, நல்லெண்ணெய் - அரை டீஸ்பூன், சர்க்கரை - அரை டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாத்திரத்தில் 4 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய காய்களைப் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். அதனுடன் உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், கொத்தமல்லி, நல்லெண்ணெய் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்.&lt;br /&gt;&lt;br /&gt;புரோக்கோலி சூப்&lt;br /&gt;&lt;br /&gt;தேவையானவை: புரோக்கோலி (காலிஃப்ளவர் போன்றதொரு பூ வகை காய்), உருளைக்கிழங்கு, வெங்காயம் - தலா 1, காய்ச்சி ஆற வைத்த பால் - ஒரு கப், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், சீவிய பாதாம் - ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, வெண்ணெய் - 2 டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்முறை: புரோக்கோலியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக்கவும். குக்கரில் 2 கப் தண்ணீரில் வெங்காயம், உருளைக்கிழங்கைப் போட்டு 2 விசில் வந்ததும் இறக்கவும். ஆறியதும் அதில் புரோக்கோலி சேர்த்து மீண்டும் 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். வெந்ததும் இறக்கி, பாதியளவு புரோக்கோலி துண்டுகளை தனியே வைக்கவும். மீதமுள்ளவற்றை ஆறவிட்டு, நன்கு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, அதில் பால் சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். கடாயில் வெண்ணெயைப் போட்டு உருக்கி பாதாமை சிவக்க வறுத்து, சூப்புடன் பாதாம், எடுத்து வைத்துள்ள புரோக்கோலித் துண்டுகள், உப்பு, மிளகுத்தூள், கொத்தமல்லி கலந்து பரிமாறவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-6092483772323227929?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/6092483772323227929/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/12/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6092483772323227929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6092483772323227929'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/12/blog-post.html' title='முப்பது வகை சூப்/ அவள் விகடன்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2072132058657545132</id><published>2009-08-28T13:16:00.001+03:00</published><updated>2009-08-28T13:17:48.571+03:00</updated><title type='text'></title><content type='html'>அதிக மைலேஜ் வேண்டுமா?&lt;br /&gt;பைக்குகளில் இருக்கும் கார்புரேட்டர்களில் இரு வகைகள் உள்ளன. அதில் 'டைரக்ட் சிலைடு கார்புரேட்டர்' பற்றி ஏற்கெனவே பார்த்து விட்டோம். இன்னொரு வகை: சிவி கார்புரேட்டர் (Constant Vacuum Carburetor). இது 4 ஸ்ட்ரோக் இன்ஜினில் 125 சிசி-க்கு மேற்பட்ட திறன் கொண்ட பைக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. தடங்கல் இல்லாத இன்ஜின் செயல்பாடு, நல்ல மைலேஜ், மாசுக் குறைவு ஆகியவற்றை மனதில் வைத்தே இதைப் பயன்படுத்துகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;டைரக்ட் சிலைடு கார்புரேட்டரில், ஆக்ஸிலரேட்டர் கேபிள் காற்றைக் கட்டுப்படுத்தும்&lt;br /&gt;சிலைடில் நேரடியாக இணைக்கப்பட்டு இருக்கும். இதனால், அதிகமாகவோ வேகமாகவோ திராட்டிலை முறுக்கும்போது, பெட்ரோல் விரயமாவதுடன் புகை மாசும் அதிகமாகும். மைலேஜும் அதிகம் கிடைக்காது. ஆனால், மிக அதிகமாக சக்தியை வெளிப்படுத்தும். சிவி கார்புரேட்டரில், திராட்டில் கேபிள் சிலைடுக்குப் பதில் வட்டமான பட்டர்ஃபிளை வால்வில்தான் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த வால்வுதான் காற்று உள்ளே செல்வதைக் கட்டுப்படுத்தும். அதாவது, நேரடியாக இல்லாமல் மறைமுகமாகக் கட்டுப்படுத்தும்.&lt;br /&gt;சிவி கார்புரேட்டரில், காற்று உள்ளே சென்றவுடன் இன்ஜின் வேக்யூமுக்கு ஏற்ப சிலைடை நகர்த்தி பெட்ரோலை உள்ளே அனுப்பும். திராட்டிலைக் குறைக்கும்போதும் சட்டென குறைந்துவிடாமல், இன்ஜின் வேக்யூமுக்கு ஏற்றாற்போலவே குறையும். இந்த முறைதான் தடங்கல் இல்லாத இன்ஜின் செயல்பாடுக்கும், மைலேஜுக்கும், மாசுக் குறைவுக்கும் காரணங்கள். சரி; இனி இதில் என்னென்ன பிரச்னைகள் வரும், அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது, பராமரிப்பது எப்படி என்பதைப் பார்ப்போம்.&lt;br /&gt;1 கார்புரேட்டரை பைக்கைவிட்டு அகற்றும்போது, சோக் கேபிள், திராட்டில் பொசிஷன் சுவிட்ச், வேக்யூம் சர்க்யூட் ஆகியவற்றை கவனமுடன் அகற்றுங்கள். சில பைக்குகளில் எலெக்ட்ரானிக் சோக் இருக்கும். அது சீராக இயங்குகிறதா, சோக் பொசிஷன் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள்.&lt;br /&gt;2 கார்புரேட்டரின் கீழ்ப் பகுதியின் ஸ்குரூக்களை அகற்றி பவுலைத் திறக்கவும். 'ஓ' ரிங் நல்ல நிலையில் இருக்கிறதா எனப் பார்க்கவும். மேலும், பவுலில் உள்ள பெட்ரோல் சுத்தமாக இருக்க வேண்டும். படத்தில் உள்ளது போல அழுக்காகி இருந்தால், பெட்ரோல் டேங்க் துருப் பிடித்து சுத்தமாக இல்லாமலும், தரமற்ற பெட்ரோலும் காரணங்களாக இருக்கும்.&lt;br /&gt;3 ஃப்ளோட் நீடிலை அகற்றுவதற்கு, கவனமாக ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்த வேண்டும். இதை அகற்றிய பின்புதான் ஃப்ளோட், ஜெட் நீடில் வரும். மெயின் ஜெட்டுடன் இருக்கும் எமல்ஸிஃபயர் மற்றும் ஸ்லோ ஸ்பீட் ஜெட்டை கவனமாக அகற்றவும்.&lt;br /&gt;4 கார்புரேட்டரின் மேல் பகுதியில் உள்ள வேக்யூம் சிலைடை விரல்விட்டு உயர்த்திப் பார்க்கவும். விரலை எடுத்தால், தானாக சிலைட் கீழே இறங்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதைச் சுத்தம் செய்யுங்கள். சிலைடு சரியாக இயங்கவில்லை என்றால், பைக்கின் பர்ஃபாமென்ஸ் பாதிக்கப்படும்.&lt;br /&gt;5 பட்டர்ஃபிளை வால்வ் சரியாக இயங்குகிறதா என பார்க்க வேண்டும். அதாவது, திராட்டில் ரோட்டரைக் கையால் இயக்கும்போது, பட்டர்ஃபிளை சிலைடு ஸ்மூத்தாகத் திறந்து மூட வேண்டும். அப்படி மூடவில்லை என்றால், அந்த சிலைடில் உள்ள சாஃப்ட்டில் கார்பன் படிந்திருக்கும். எனவே, அதை ஸ்ப்ரே பயன்படுத்தி ப்ரெஷ் வைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.&lt;br /&gt;6கார்புரேட்டரின் மேல் பகுதியில் உள்ள ஸ்குரூக்களைத் தளர்த்தி கவனமாகத் திறக்கவும். அதில் ஸ்ப்ரிங் மற்றும் வேக்யூம் சிலைடு டயபராமுடன் இருக்கும். இவற்றை அகற்றும்போது டயபராம் சேதமடையாமல் கவனமாக இருக்க வேண்டும். இதில் சிறு துளை விழுந்தால்கூட புதிதாக மாற்ற வேண்டும்.&lt;br /&gt;7 டயபராம் சிலைடை ஸ்ப்ரே பயன்படுத்தி காட்டன் துணியால் சுத்தம் செய்யவேண்டும். இதில் கீறல் விழாமல் சுத்தம் செய்வது அவசியம்.&lt;br /&gt;8 மெயின் ஜெட், ஸ்லோ ஸ்பீட் ஜெட் மற்றும் கார்புரேட்டர் சர்க்யூட் ஆகியவற்றை ஸ்ப்ரே கொண்டு அனைத்தையும் நன்றாகச் சுத்தம் செய்து பொருத்துங்கள். எப்படி அகற்றினோமோ, அதே ஆர்டரில் மீண்டும் அசெம்பிள் செய்து பைக்கில் பொருத்துங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2072132058657545132?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2072132058657545132/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/08/blog-post_6464.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2072132058657545132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2072132058657545132'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/08/blog-post_6464.html' title=''/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-6669749047607366862</id><published>2009-08-28T12:48:00.000+03:00</published><updated>2009-08-28T13:00:20.244+03:00</updated><title type='text'></title><content type='html'>''என் மகளுக்கு நான்கு வயது ஆகிறது. அவளுடைய கல்விக்கும் திருமணத்துக்கும் முதலீடு செய்ய ஆசைப்படுகிறேன். ஒரே தடவையாக முதலீடு செய்வதாக இருந்தால் எதில் செய்வது?மாதா மாதம் சேமிப்பதாக இருந்தால் என்னென்ன திட்டங்கள் உள்ளன?''&lt;br /&gt;- சிவகுமார், யூ.எஸ்.ஏ.&lt;br /&gt;வி.ஹரிஹரன், 'நெஸ்டோ' ஃபைனான்ஸியல் சர்வீசஸ், சென்னை.&lt;br /&gt;''ஒரே தடவை முதலீடு செய்வதாக இருந்தால் அத்தொகையை இரண்டு அல்லது மூன்று திட்டங்களில் 'லார்ஜ் கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டு’களில் பிரித்து முதலீடு செய்யவும்.&lt;br /&gt;மாதாமாதம் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்வதாக இருந்தால் 'லார்ஜ் கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டி’லும் 'மிட்கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டி’லும் ஸ்டாக் புரோக்கிங் மூலம் 'கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டி’லும் பிரித்து முதலீடு செய்யவேண்டும். பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்கள் மகளுடைய கல்விச் செலவுக்குத் தேவையான யூனிட்டுகளை விற்றுவிட்டு, எஸ்.ஐ.பி-யைத் தொடரவேண்டும். அது திருமணத்துக்குப் பயன்படும்.''&lt;br /&gt;&lt;br /&gt;    &lt;a href="http://www.vikatan.com/vc/savebox/save1.asp"&gt;&lt;/a&gt;&lt;a href="http://www.vikatan.com/vc/savebox/boxdisp.asp"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;கேள்வி-பதில்&lt;br /&gt;பத்திரம் போதாதா, பட்டாவும் வேண்டுமா?&lt;br /&gt;''என் மகளுக்கு நான்கு வயது ஆகிறது. அவளுடைய கல்விக்கும் திருமணத்துக்கும் முதலீடு செய்ய ஆசைப்படுகிறேன். ஒரே தடவையாக முதலீடு செய்வதாக இருந்தால் எதில் செய்வது?மாதா மாதம் சேமிப்பதாக இருந்தால் என்னென்ன திட்டங்கள் உள்ளன?''&lt;br /&gt;- சிவகுமார், யூ.எஸ்.ஏ.&lt;br /&gt;வி.ஹரிஹரன், 'நெஸ்டோ' ஃபைனான்ஸியல் சர்வீசஸ், சென்னை.&lt;br /&gt;''ஒரே தடவை முதலீடு செய்வதாக இருந்தால் அத்தொகையை இரண்டு அல்லது மூன்று திட்டங்களில் 'லார்ஜ் கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டு’களில் பிரித்து முதலீடு செய்யவும்.&lt;br /&gt;மாதாமாதம் எஸ்.ஐ.பி-யில் முதலீடு செய்வதாக இருந்தால் 'லார்ஜ் கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டி’லும் 'மிட்கேப் ஈக்விட்டி டைவர்சிஃபைட் மியூச்சுவல் ஃபண்டி’லும் ஸ்டாக் புரோக்கிங் மூலம் 'கோல்டு எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டி’லும் பிரித்து முதலீடு செய்யவேண்டும். பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்கள் மகளுடைய கல்விச் செலவுக்குத் தேவையான யூனிட்டுகளை விற்றுவிட்டு, எஸ்.ஐ.பி-யைத் தொடரவேண்டும். அது திருமணத்துக்குப் பயன்படும்.''&lt;br /&gt;''நிலப்பட்டாவின் முக்கியத்துவம் என்ன? அதை வாங்குவதற்கு ரொம்பக் கஷ்டப்பட வேண்டியுள்ளது. வருவாய்த்துறை செலவு வேறு! நிலத்துக்கான பத்திரம் பத்திரமாக நம் கையில் இருக்கும்போது நிலப் பட்டாவை வாங்காவிட்டால்தான் என்ன?''&lt;br /&gt;- மு.சுப்பையா, வள்ளியூர்.&lt;br /&gt;எஸ்.சி.ரகுராம், வழக்கறிஞர், சென்னை.&lt;br /&gt;''நீங்கள் ஒரு நிலத்துக்கு உரிமையாளர் என்றால் அதற்கான பட்டா வைத்திருப்பது நல்லது. பட்டா உங்கள் பெயரில் இருந்தால்தான் அரசாங்கப் பதிவேடுகளில் (வருவாய்த் துறை மூலம்) நீங்கள் நிலத்தின் உரிமையாளர் என்ற விவரம் பதியப்படும். உங்கள் நிலத்தில் நீங்கள் சட்டபூர்வ சுவாதீனம் (Lawful Possession) கொண்டவர் என்பதை பட்டாதான் நிரூபிக்கும். பட்டாவின் பின்புறம் உங்கள் நிலத்தின் நீள, அகலம் மற்றும் எல்லைகள் குறிக்கப்பட்டிருக்கும். பிற்காலத்தில் சுவாதீனத்தைப் பொறுத்து ஏதேனும் பிரச்னைகளோ அல்லது வழக்குகளோ ஏற்படுமாயின் உங்கள் பெயரில் பட்டா இருப்பது உங்களுக்குச் சாதகமாக அமையும்.&lt;br /&gt;பத்திரம் என்பது இரண்டு பேர் சம்பந்தப்பட்டது. அதில் உள்ள தகவல்கள் எல்லாம் அப்படியே இருக்கும் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஆனால், பட்டா என்பது வருவாய்துறை அலுவலர்களால் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட சொத்தை சர்வேயரை வைத்து அளந்து, அவர் தரும் தகவல்களின் அடிப்படையில் தருவது. பட்டாவில் தவறுகள் நிகழ வாய்ப்பு இல்லை. பத்திரங்களில் உள்ள தகவல்கள் மாற நிறைய வாய்ப்பு இருக்கிறது. பத்திரம் என்பது தலைமுறை தலைமுறையாக எழுதி வருவது. உதாரணத்துக்கு 1955-ல் இருக்கும் பத்திரத்தில் அந்தக் காலத்தில் எழுதப்பட்டவையாக இருக்கும். ஆனால், காலமாற்றத்தில் அந்த இடத்தில் அரசு ரோடு போடுவதற்குக்கூட கொஞ்சம் இடத்தை எடுத்திருக்கலாம். அது பத்திரத்தில் தெரியாது. ஆனால், பட்டாவில் இது தெளிவாகத் தெரிந்துவிடும்.''&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-6669749047607366862?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/6669749047607366862/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/08/blog-post_28.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6669749047607366862'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6669749047607366862'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/08/blog-post_28.html' title=''/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-3887556856296589730</id><published>2009-08-28T12:35:00.000+03:00</published><updated>2009-08-28T12:37:43.328+03:00</updated><title type='text'>மைக்ரோ வேவ் ஓவன்</title><content type='html'>கச்சிதமாக கையாள... கவனமாக சமைக்க...&lt;br /&gt;இந்த 'ஃபாஸ்ட்ஃபுட்' யுகத்தில் பலருடைய கிச்சன்களில் பாஸ் மார்க் வாங்கி இடம் பிடித்துவிட்டது... 'மைக்ரோவேவ் அவன்'. 'எப்போ பார்த்தாலும் கிச்சன்குள்ளயே நிக்க வேண்டியதா இருக்கு' என்று புலம்பிய பெண்களுக்கு வரம் தந்து, நிமிடங்களில் சமையலை முடித்துக் கொடுத்து சபாஷ் வாங்குகின்றன இந்த 'மைக்ரோவேவ் அவன்'கள்.&lt;br /&gt;''ஆனால், 'மைக்ரோ வேவ் அவனை உபயோகிப்பது எப்படி' என்று முழுமையாகத் தெரிந்துகொண்டு சமையல் செய்வதுதான் 'மைக்ரோ அவன்' மற்றும் உங்களுக்கும் பாதுகாப்பு'' என்று சொல்லும் சென்னை, 'டெக்னிக் ஸ்பாட் எலெக்ட்ரானிக்ஸ்' சர்வீஸ் சென்டரின் பங்குதாரர் சுரேஷ்குமார், 'மைக்ரோவேவ் அவன்' உபயோகம் மற்றும் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகளை உங்களுக்காக அள்ளி வைத்தார். அதையெல்லாம் கீழே அடுக்கி வைக்கிறோம்.&lt;br /&gt;கதிர்வீச்சு... கைகள் கவனம்!&lt;br /&gt;பொதுவாக மைக்ரோவேவ் அவன்ல் காய்கறிகள், முட்டை அவிப்பதிலிருந்து பிரியாணி, பிஸ்கட், கேக், தந்தூரி அயிட்டங்கள் வரை எல்லாம் சமைக்கலாம்.&lt;br /&gt;இதில் 'மைக்ரோவேவ் கதிர்வீச்சு' மூலமாக சமையல் நடப்பதால், சமைத்த பின் உணவில் படரும் ஒரு வகை வாடை சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். எனவே, அவனில் இருந்து எடுத்த உணவை சில நிமிடங்கள் நார்மல் கேஸ் அடுப்பில் வைத்து தாளித்துக் கொட்ட, அந்த வாடை விலகிவிடும். கூடவே, இந்த மைக்ரோவேவ் அவன் கதிர்வீச்சு, உணவில் படிந்திருக்கும் என்பதால், சமைத்த உணவை மூன்று நிமிடங்கள் கழித்து உண்பது நலம்.&lt;br /&gt;அதேபோல, சமைத்தபின் அவன்ஐ திறந்து உள்ளே இருக்கும் பாத்திரங்களை எடுக்கும்போது, அதிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு கைகளைப் பாதிக்கும் என்பதால், கிளவுஸ்கள் அணிந்து கொள்ள வேண்டும்.&lt;br /&gt;'பேஸிக் மாடல்' வகையில் 17 முதல் 3 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட 'அவன்'கள் கிடைக்கின்றன. தேவைக்கேற்ப வீடு, தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்த ரக அவன்ஐ ரீஹீட் (மறுபடி சுடவைக்க) செய்வதற்கும் உபயோகப்படுத்தலாம். ஆனால், இந்த மாடலில் பீட்ஸா, கேக், பிஸ்கட், சிக்கன் தந்தூரி போன்ற அயிட்டங்களை செய்ய முடியாது.&lt;br /&gt;பிளாஸ்டிக் ஜாக்கிரதை!&lt;br /&gt;'மைக்ரோவேவ் அண்ட் கிரில்' மற்றும் 'மைக்ரோவேவ் அண்ட் கன்வென்ஷன்' மாடல்களில், 'கிரில்' வகையில் சமைக்கும்போது எல்லா விதமான மெட்டல் பாத்திரங்களையும் உபயோகிக்கலாம். ஆனால், 'கன்வென்ஷன்' வகையில் சமைக்கும்போது, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை உபயோகித்தால் ஷாக் அடிக்கக்கூடும். பொதுவாகவே அவன் சமையலுக்கு, கண்ணாடி மற்றும் அதற்கென உரிய மைக்ரோவேவ் அவன் பாத்திரங்கள் வாங்கிப் பயன்படுத்துவதுதான் பாதுகாப்பு. பிளாஸ்டிக் பாத்திரங்கள் உபயோகித்தால், அவை அதன் வெப்பத்தில் உருகிவிடக் கூடும். எனவே, அவற்றைத் தவிர்க்க வேண்டும்.&lt;br /&gt;'கிரில்' வகையில், தோசைக்கல் போன்ற அமைப்புடன் உள்ளே வடிவமைக்கப்பட்டிருக்கும் மேடையில் வைத்து எண்ணெய் இல்லாத கட்லெட் முதலிய உணவுகளை சமைக்கலாம். 'கன்வென்ஷன்' வகையில் கேக் பேக்கிங், தந்தூரி முதலிய உணவுகளை சமைக்கலாம். இந்த வகை அவன்ல் சில வகை ராடுகள் இருக்கும். அதில் மாசாலா தடவிய சிக்கனை செருகி வைத்துவிட, கடையில் வாங்கும் தந்தூரி சிக்கன் தோற்றுவிடும். எல்லா வகை மெஷினிலும் இந்த ராடு இருக்காது. ராடு ஆப்ஷன்கள் தேவைப்படும் விதத்தில், அதனைக் கேட்டு வாங்கலாம்.&lt;br /&gt;டர்ன் டேபிளில் தண்ணீர் பட்டால் ஆபத்து!&lt;br /&gt;மைக்ரோவேவ் அவன்ன் உள்ளே பாத்திரங்களை வைப்பதற்கு 'டர்ன் டேபிள்' (Turn table) என்றொரு தட்டு இருக்கும். சீராகச் சமையல் நடைபெற இந்த டேபிள் கிளாக்வைஸ் மற்றும் ஆன்டி கிளாக்வைஸ் முறையில் சுற்றும். இந்த டேபிளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களை பயன்படுத்தும்போது, டேபிளில் தண்ணீர் பட்டுவிட்டால், உடனடியாக ஆஃப் செய்துவிட்டு உலர்ந்த துணியால் நன்கு துடைத்துவிட வேண்டும். இல்லையெனில் கீழே இருக்கும் மோட்டாரில் பட்டு, வெகு சீக்கிரத்தில் துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.&lt;br /&gt;பாலை வாய் அகன்ற மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றி அவன்ல் வைக்க, பொங்கி வழியாது.&lt;br /&gt;அவன்ன் வெளிப்புறத்தில் வெஜிடபிள் 15 கிராம், 3 கிராம், 4 கிராம் என்று அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். காய்களை பாத்திரத்தில் வைத்து கதவை அடைக்க, இந்த அளவுகள் ஸ்க்ரீனில் தெரியும். அதில் நீங்கள் வைத்த காயின் அளவை தேர்வு செய்து, ஸ்டார்ட் பட்டனை தட்ட, சமையல் ஆரம்பித்துவிடும்.&lt;br /&gt;காய்கறிகளை வேக வைக்கும்போது சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும். இல்லையெனில் காய்கறிகள் சுருங்கி போய்விடக்கூடும். பொதுவாக, அரை கிலோ காய்கறிகள் பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் வெந்து விடும். அவன்ல் இருந்து வெளியே எடுக்கும்போது, வேகாதது போல் இருக்கும். ஆனால், சிறிது நேரத்தில் காய்கறிகள் பூப்போல வெந்திருப்பதை கவனிப்பீர்கள். பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வைத்தால் காய்கறிகள் கொழகொழவென்று ஆகிவிடும்.&lt;br /&gt;முட்டை வேக வைக்கும்போதும் பாத்திரத்தில் முட்டை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் வைக்க வேண்டும்.&lt;br /&gt;அசைவ 'அவன்',கேட்டு வாங்கவும்...&lt;br /&gt;அசைவ உணவுகளை சமைக்கும் வசதி எல்லா மாடல்களிலும் இருக்காது. எனவே, தேவைப்படுபவர்கள் அதைக் கேட்டு வாங்கவேண்டும்.&lt;br /&gt;மின்சாரத்தைப் பொறுத்தவரை, பொதுவாக எந்த எலெக்ட்ரானிக் சாதனத்திலும் 1 வேல்ட் உபயோகத்துக்கு 1 யூனிட் கரன்ட் செலவாகும். அவன்க்கும் அதுவே. 'பேஸிக் மாடல்'ல் 6 முதல் 8 வோல்ட் வரை கரன்ட் செலவாகும். 'கிரில்' மாடலில் 2 முதல் 25 வோல்ட்வரை கரன்ட் செலவாகும்&lt;br /&gt;அவன்-ல் 'டிரான்ஸ்ஃபார்மர் டைப்', 'இன்வெர்டர் டைப்' என இரண்டு வகைகள் இருக்கின்றன. இதில் டிரான்ஸ்ஃபார்மர் டைப்தான் நமது நாட்டுக்கு சிறந்தது. இதில் மெஷின் லோ வோல்டேஜ்ல் சமைப்பதற்கு சற்று கூடுதல் நேரம் எடுத்தாலும், தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். ஆனால். இன்வெர்டர் டைப்புக்கு, மின்சாரம் எப்போதும் சீராக கிடைக்க வேண்டும். லோ வோல்டேஜ்ல் பழுதாகி, நமக்கு செலவு வைத்துவிடும்.&lt;br /&gt;சமைக்கும்போது டைம் செட் செய்து விட்டால், நேரம் வந்ததும் அலாரம் அடித்து நினைவுபடுத்தும்.&lt;br /&gt;வாடையைத் துரத்த எலுமிச்சை டெக்னிக்!&lt;br /&gt;சமையல் நடந்து கொண்டிருக்கும்போதே இடையில் கிளறிக் கொடுக்க, கதவைத் திறந்து அதற்கென இருக்கும் கரண்டி மூலம் கிளறி கொடுத்துவிட்டு, பின்பு மூடிவிடலாம். இதனால் 'டைம் செட்டிங்'ல் மாற்றம் ஏற்படாது. கதவை திறக்கும்போது 'பாஸ்' நிலைக்கு வந்து, பின் கதவை மூடியபின் ஆட்டோமேட்டிக்காக 'ஸ்டார்ட்' நிலைக்கு சென்றுவிடும்.&lt;br /&gt;மைக்ரோவேவ் அவன்ல் இப்போது காபி மேக்கர் வந்துவிட்டது. அதில் பாலுடன் டிகாக்ஷன் கலந்து வைத்துவிட்டால், நிமிடத்தில் காபி ரெடி.&lt;br /&gt;அசைவ உணவு சமைத்தபின் அந்த வாடையைப் போக்க, ஒரு சின்ன பவுலில் தண்ணீர் நிரப்பி, அதில் அரைத் துண்டு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்துவிட்டு மெஷினில் வைத்து, ஆன் செய்து விட வேண்டும். நான்கு நிமிடத்தில் அணைத்துவிட்டு உலர்ந்த துணியால் மெஷினை நன்கு துடைக்க, சுத்தமாவதோடு துர்நாற்றமும் போய் விடும். லேட்டஸ்ட் மாடல்களில் ஆட்டோமேட்டிக் கிளீனிங் வசதிகளும் இருக்கின்றன.&lt;br /&gt;மெஷின் வாங்கும்போது சைல்ட் லாக் ஆப்ஷன் இருக்கிறதா என்று கேட்டு வாங்குவது நலம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-3887556856296589730?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/3887556856296589730/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/08/blog-post.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/3887556856296589730'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/3887556856296589730'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/08/blog-post.html' title='மைக்ரோ வேவ் ஓவன்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2429059883685431265</id><published>2009-06-30T13:33:00.000+03:00</published><updated>2009-06-30T13:38:01.103+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமிய நெறிகள்'/><title type='text'>நம் சகோதரர்கள்</title><content type='html'>அவர்கள் உங்கள் சகோதரர்கள்&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#ff0000;"&gt;மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நினைவு தெரிந்த நாள் முதல் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் நிறை வேற்றி வந்த அஹ்மது பாய் அன்று பத்து நிமிடம் தாமதமாகி வந்ததால், ஜமாஅத்தை தவற விட்டுவிட்டார். அந்த ஆதங்கத்தில் தொழுகை நேரம் முடிவதற்குள் ஃபஜ்ர் தொழுகையை தொழுது விட வேண்டுமே என பள்ளியை நோக்கி விரைகிறார்.அங்கு ஒரு சோதனை! உள்ளே யாரும் செல்ல முடியாத அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட 6வயது முதல் 14வயது வரை உள்ள சிறுவர்கள் கூட்டம் வாசலை அடைத்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். "சப்தம் போடாமல் அமைதியா மெதுவா வரிசையா போகனும்" என்று குரல் கொடுத்தபடியே அவர்கள் பின்னே வந்த அப்பாஸ் தாத்தா, அழுத படியே அரைத் தூக்கத்தில் நடந்து வரும் 7வயது சிறுவனை அரவணைத்து, "அழக் கூடாது. பாத்து நட, கீழே விழந்துடுவ, உன்னை அல்லாஹ் பார்த்து கொள்வான். நான் இருக் கேன்ல" என ஆறுதல் கூறிய படி அழைத்து வந்து கொண்டிருந்தார்.அச்சிறுவர்கள் வெளியேறும் வரை கதவோரமாக காத்திருந்த அஹ்மது பாய், "என்ன அண்ணே! தம்பி புதுசா" என்று விசாரித்தார். "ஆம! தம்பி வந்து ரெண்டு நாளாச்சு. நம்மள மாதிரித்தான் பாவம்" என்று அப்பாஸ் தாத்தா சோகமாக சொன்ன போது அஹ்மது பாய் கடந்து போன கசப்பான தனது வாழ்க்கையின் பழைய பக்கங்களை புரட்ட ஆரம்பித்து விட்டார்.ஐம்பது வயதுகளை கடந்து விட்டாலும் அவர் ஐந்து வயதில் பட்ட அனாதைக் காயத்தின் வேதனை உள்ளத்திலிருந்து இன்னும் மறையவில்லை. சோகங்கள், கொடுமைகள், அரவணைப்புகள் என தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் எதையும் அவரால் மறக்கவே முடியவில்லை.&lt;br /&gt;oOo&lt;br /&gt;அன்று ஞாயிற்றுக் கிழமை. வழக்கம் போல் தெருவில் என் வயதொத்த சிறுவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தேன். என் சிறிய தந்தை வருவது கண்டு மகிழ்ச்சி அடைந்த நான், அவரது வருகையில் மறைந்திருக்கும் சோகத்தை அறியாது அவருடன் வீட்டுக்கு புறப்பட்டேன். வீட்டு முன்னே கூட்டம். எல்லோரின் முகத்திலும் ஒரு வித சோகம்; மௌனம். பலர் புலம்பி அழும் காட்சி. ஒரு மணி நேர இடைவெளியில் திடீரென முளைத்த சாமியானா பந்தல். இவற்றைப் பார்த்து ஒன்றும் புரியாமலிருந்த நான், என் தாயாரை தேடி அலைந்த போது, வெள்ளைத் துணியால் போர்த்தப் பட்டு கட்டிலில் கிடத்தப் பட்டிருந்த என் தந்தைக்கு அருகில் அலங்கோலமாக அமர்ந்து உரக்க குரல் எழுப்பி அழுவதைப் பார்த்து, அவர் அருகில் சென்ற போது, "நம்மை அனாதையாக விட்டுட்டு போயிட்டாருப்பா மனுசன்" என என்னைக் கட்டிப் பிடித்து மீண்டும் அழ ஆரம்பித்து விட்ட என் தாயாரோடு சேர்ந்து, "அம்மா! அம்மா!" என தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து விட்டேன். சிறிது நேரத்தில் என் தந்தையை நல்லடக்கம் செய்து விட்டு அனைவரும் திரும்பி விட்டார்கள். அழுகையும் கண்ணீருமாய் எனது குடும்பமே அவதிப்பட்டு கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் எல்லா உறவினர்களும் போய் விட்டார்கள். நான், என் தாயார், அப்பாஸ் என மூவர் மட்டுமே தனியாக விடப் பட்டோம்.ஒரு மாத காலம் ஓடியது. என் தந்தையின் மரணத்திற்குப் பின் என் தாய் சிரித்துப் பேசியதை ஒரு முறை கூட நான் பார்த்ததில்லை. எப்போதும் சோகமும் கவலையும் துக்கமும் தோய்ந்த முகம். திடீரென என்னை கட்டிப் பிடித்துக் கொண்டு "ஓ" என அழுவது. இவையே அவர்களின் அன்றாட பணியாக மாறி விட்டது. சரியான உணவு உட்கொள்வதில்லை. பார்க்க அழகாய் இருந்த என் தாய், ஒரு மாதத்திற்குள் உணவின்றி மெலிந்து நலிந்து அலங்கோலமாக மாறி விட்டார்கள்.ஒரு நாள் மயக்கமுற்று கீழே விழுந்தே விட்டார்கள். மருத்துவர் வருவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே என் தந்தை போன இடத்திற்கு என் தாயாரும் சென்று விட்டார்கள்.&lt;br /&gt;oOo&lt;br /&gt;தாயாரும் மரணம் அடைந்து விட்ட பின் எங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகி விட்டது. அடுத்து எங்கே யாரிடம் போய் தங்குவது என யோசிக்கத் தெரியாத வயதிலும் யோசனை செய்யத் தொடங்கி விட்டேன். சில சம்பிரதாயங்களுக்குப் பின் என் சிறிய தந்தைதான் எங்களை தன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருந்த போது என் தந்தையின் நினைவு தாயின் பரிவு இவற்றை நினைத்து நினைத்து நானும் எனது அண்ணன் அப்பாஸும் அழுது கொண்டிருப்போம். என் சிறிய தந்தை தொழில் செய்ய காலையில் சென்றால் இரவுதான் வீடு திரும்புவார். எங்களை அரவணைத்து ஆறுதல் கூறுவதற்கென்று யாரும் இல்லை. சிறிய தந்தையின் மனைவியோ ஒரு கொடூரமானவள்; பெண் உருவில் தோன்றிய பேய்; அழும் எங்களை நோக்கி ஆறுதலாகப் பேசமாட்டார்; ஏன் ஓயாமல் அழறிங்க என கண்டித்து எரிச்சலாகப் பேசி கையை ஓங்கி அடிக்க வருவார். அன்று மதியம் நேரம். காலை உணவும் சரியாக கிடைக்க வில்லை. கடுமையான பசி. வீட்டில் எல்லோரும் சாப்பிட்டப் பிறகுதான் எங்களுக்கு சாப்பாடு கிடைக்கும். பசி தாங்க முடியாமல் என் சிறிய தந்தையின் மகன் அம்மு குட்டியின் தட்டிலிருந்து சிறிது உணவு எடுத்து சாப்பிட்டு விட்டேன். அவனோ அலற ஆரம்பித்து விட்டான். சப்தம் கேட்டு ஓடி வந்த அவனது தாய் நடந்ததை அறிந்து, ஓங்கி என் கன்னத்தில் அறைந்து, 'முளைக்கள மூணு எல விடல, அதுக்குள்ள திருட்டுத் தனத்தப் பாரு, இப்பவே புள்ள சாப்பாட்ல கை வச்சுட்டான், நாள எதுல கைய வப்பாங்களோ தெரியள" என வினாடியில் பொரிந்து தள்ளி விட்டார். அண்ணன் அப்பாஸுக்கு என்னைப் பார்த்து அழ மட்டுமே முடிந்தது. அவருக்கும் ரெண்டு அடி. திட்டு. "தம்பி பாசம் பொத்து கிட்டு வந்துருச்சு" என்று கூறியபடி, "இவங்கள எங்கயாவது அனாதப் பசங்க உள்ள இடத்திலே சேர்த்து விட்ருங்க! நமக்கு தொல்ல வேண்டாம் என்று ஆயிரம் தடவ சொன்னேன். கேட்டாரா இந்த பாவி மனுசன்" என வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்து விட்டு எங்கள் இருவரையும் வெளியே தள்ளி, கதவை ஓங்கி அறைந்து சாத்தி விட்டு உள்ளே போய்விட்டார் அந்தக் கொடுமைக்காரப் பெண்.&lt;br /&gt;கன்னத்தில் அடித்தது வலிக்க வில்லை. ஆனால், வார்த்தைகளால் உள்ளத்தில் அடித்தது ரணமாக வலியெடுக்க ஆரம்பித்து விட்டது. என் சிறிய தந்தை வரும் வரை வெளியிலேயே குளிரில் நடுங்கியபடியே துக்கத்தோடு அமர்ந்திருந்தோம்.&lt;br /&gt;நினைத்துப் பார்க்கிறேன். என் அன்புத் தாய், எனக்கு பசிக்காத நேரத்திலும் கூட என்னை சாப்பிட வைக்க எடுத்தக் கொண்ட முயற்சிகள் மறக்க முடியாதது. நிலா நிலா ஓடி வா! நில்லாமல் ஓடிவா! என பாட்டு பாடி, விளையாட்டுக் காட்டி, சீக்கிரம் நீ பெரிய ஆம்பளையா வரனும்ள நல்ல பிள்ளையா இந்த ஒரு வா சோறு மட்டும் வாங்கிக்க! என ஆசை வார்த்தை கூறி, அண்ணன பாரு அண்ணனுக்கு கொடுக்கப் போறேன் என்று வேடிக்கை காட்டி சோறு ஊட்டியதை நினைத்து குளிரையும் மறந்து என் சிந்தனை சிறகடித்துப் பறந்தது.&lt;br /&gt;என் சிறிய தந்தை வந்தும் வராதது மாய் பதறிப் போய் ஏன்? என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன்? வெளியிலே குளிரிலே இருக்கிங்க? என்று கேட்டபடியே எங்களை உள்ளே அழைத்துச் சென்று நடந்ததை விசாரித்தறிந்து, தன் மனைவியை கண்டித்து விட்டு, அவர்கள் அனாதைகள், அவர்களை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என்று கூறி,"அனாதைகளை அடக்கு முறை செய்யாதீர்கள்" (93:9)என்ற இறைவசனத்தையும், "நபி (ஸல்) அவர்கள் 'நானும் அனாதைகளின் காப்பாளரும் சுவனத்தில் இப்படி இருப்போம்" என்று கூறிய படி தமது சுட்டு விரலாலும் நடு விரலாலும் (சற்றே இடை வெளி விட்டு) சமிக்கை செய்தார்கள்" என்ற நபி மொழியையும் எடுத்துக் கூறி தன் மனைவிக்கு உபதேசம் செய்தார்.அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே ஒலித்தது. அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. வேறு வழியின்றி, எங்களை அனாதைகள் இல்லத்தில் சேர்ப்பதே பாதுகாப்பானது, மேலும் எதிர் காலத்திற்கும் பயனுள்ளது என முடிவு செய்து, ஒரு குக்கிராமத்தில் ஜமால் ஆலிம் என்பவர் நல்ல முறையில் நடத்தி வரும் அனாதை இல்லத்தில் எங்களிருவரையும் சேர்த்து விட்டு, திண் பண்டங்களை கை நிறைய வாங்கித் தந்து செலவிற்கு கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு என் சிறிய தந்தை போய் விட்டார்.&lt;br /&gt;oOo&lt;br /&gt;புதிய இடம். அங்கே எங்களைப் போன்றே சோகங்களைச் சுமந்த பல சிறுவர்கள். ஆனால் அவர்களது முகங்களில் சோகத்தின் சாயல் அறவே தெரிய வில்லை. மட்டற்ற மகிழ்ச்சி. எப்போதும் சிரித்த முகங்கள். அவர்கள் ஜமால்; ஆலிமுடன் ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். ஓரிரு வாரங்கள் ஓடின! ஜமால் ஆலிம் காட்டும் அன்பில் அரவணைப்பில் திக்கு முக்காடிப் போன நாங்கள், எங்களது உள்ளத்தில் படிந்த அனாதைக் காயத்தை சற்றே மறக்கத் தொடங்கினோம். தாயன்பு, தந்தையின் கண்டிப்பு, தேர்ந்த நேர்த்தி மிக்க ஒர் ஆசிரியரின் வழிகாட்டல் என ஜமால் ஆலிம் பழகிய விதம் பழைய நிகழ்வுகள் அனைத்தையும் முற்றிலுமாக மறக்கச் செய்து விட்டது. மற்ற சிறுவர்களோடு சேர்ந்து நாங்களும் விளையாட ஆரம்பித்து விட்டோம். ஜமால் ஆலிம் என் உள்ளத்தில் ஆழமாக இடம் பிடித்து விட்டார். ஒரு சில நிமிடங்கள் அவரைப் பிரிந்திருப்பது கடும் வேதனை அளித்தது. மாலை நேரத்தில் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டிருந்த ஜமால் ஆலிமுடன் நானும் ஒரு நாள் புறபட்டு விட்டேன். பஸ் பிடித்து டவுனுக்குப் போனோம். வண்டியை விட்டு இறங்கியதும்; எனக்கு சிற்றுண்டி வாங்கித் தந்த அவர், தனக்கு ஏதும் வாங்கிக் கொள்ள வில்லை. சில கடைகளில் ஏறி இறங்கினார். கடை முதலாளிகளிடம் ஏதோ பேசி விட்டு வந்தார். என்ன பேசுகிறார் என்பதை கவனிக்க விரும்பினேன். "என்னங்க பாய்! பிள்ளைங்களுக்கு நாளைக்கு சாப்பாட்டுக்கு எதுவும் இல்ல. உங்களால முடிஞ்சத கொடுங்க! அல்லாஹ் ஒங்க வியாபாரத்தில பரக்கத்து செய்வான்" என்று சொல்வது என் காதில் விழுந்தது.&lt;br /&gt;"இன்னக்கி வியாபாரம் சரியில்ல. நாள வாங்க பாக்கலாம்" என்றே பலரும் பதில் சொன்னார்கள். இருபது கடைகளுக்கும் மேல் ஏறி இறங்கி இருப்பார். சில கடைகளில் "இவருக்கு வேற வேல பொளப்பு இல்லாம அலைறாரு" என எங்கள் காதுபடவே பேசிக் கொள்வதைக் கேட்ட எனக்கு மனம் வலிக்க ஆரம்பித்தது.&lt;br /&gt;எவ்வளவு கஷ்டப்பட்டு நமது உணவிற்கு ஏற்பாடு செய்கிறார் இவர் என்பதை நேரில் பார்த்த போது அவர் மீதுள்ள மரியாதை பன்மடங்காக உயர்ந்தது. ஆனால், அவரோ இச்சிரமங்களில் எதையும் இதுவரை வெளிக்காட்டிக் கொண்டதே இல்லை. இஷாத் தொழுகைக்கு பாங்கு சொல்லப் பட்டு விட்டது. தொழுது முடித்த பின் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. அருகில் அமர்ந்திருந்த எனக்கு அவர் கேட்பது தெளிவாக காதில் விழுகிறது."இறைவா! அகிலத்தின் அதிபதியே! அனாதைகளை ஆதரிப்போனே! இதோ! உனது சன்னிதானத்தில் இரு கரம் ஏந்தி நிற்கிறேன். பெற்றோரை இழந்து என்னிடம் அடைக்கலமாகியுள்ள என் பிள்ளைகளுக்கு நாளை உணவிற்கு எதுவுமே இல்லை. நீயே அனைவருக்கும் உணவளிப்பவன். இதோ இந்த அனாதை களுக்கும் உணவளிப்பாயாக!" என உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தார். அதைக் கேட்ட எனக்கும் அழுகை வந்து விட்டது.&lt;br /&gt;பிரார்த்தனையை முடித்து விட்டு வெளியே வந்த அவர், பள்ளி வாசலை ஒட்டி இருக்கும் மளிகை கடை முதலாளியைப் பார்த்து விவரம் கூறினார். அவரோ அதை எதிர்பார்த்து காத்திருந்தது போல், முகமலர்ந்து ஒரு மாதத்திற்கு தேவைப் படும் அளவு பொருட்களை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறி அவரே ஒரு ஆட்டோவையும் ஏற்பாடு செய்து அரிசி, பருப்பு மற்றும் மளிகை சாமான்களை ஏற்றி அனுப்பி வைத்தார். மகிழ்வோடு என்னை நோக்கிய ஜமால் ஆலிம், பார்த்தாயா மகனே! "அல்லாஹ்விடத்தில் கையேந்திக் கேட்டால் அவன் எதையும் மறுக்க மாட்டான். ஏந்திய கரங்களை வெறும் கையாக திருப்பி அனுப்ப வெட்கப்படுகிறான். எனவே, நீயும் எதைக் கேட்பதாக இருந்தாலும், அல்லாஹ்விடம் மட்டும்தான் கேட்க வேண்டும்" என்று என் உள்ளத்தில் ஆழமாக பதிய வைத்து விட்டார். "இறைவா! ஜமால் ஆலிமுக்கு எச்சிரமமும் இல்லாமல் ஆக்குவாயாக! அவருக்கு எல்லா வகையிலும் துணை புரிவாயாக!" என்று நானும் எனது பங்கிற்கு பிரார்த்தனை செய்து கொண்டேன்.மறுநாள் விளையாடி முடித்து, மஃக்ரிப் தொழுது விட்டு சற்று அமைதியாக அமர்ந்திருந்தோம். அப்போது ஆலிம்சா எழுந்து உபதேசம் செய்ய ஆரம்பித்தார்: "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். உங்களை அமானிதமாக அல்லாஹ் என்னிடம் ஒப்படைத்திருக்கிறான். எனவே, உங்களுக்கு நேர் வழி காட்டுவது எனது கடமை. எங்கிருந்தாலும் இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுங்கள். எந்நேரத்திலும் தொழுகையை தவற விட்டுவிடக் கூடாது. பள்ளிவாசலில் இமாம் ஜமாஅத்தோடு சேர்ந்து தொழுவதால் 27 மடங்கு நன்மைகள் அதிகம் உண்டு. எனவே, ஜமாஅத் தொழுகையை தவறவிட்டு விடக் கூடாது." என்று கூறி, சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார். "நீங்கள் வளர்ந்து வந்த பின் ஏழை எளியோருக்கு தர்மம் செய்ய வேண்டும். குறிப்பாக ஆதரவற்ற அனாதைகளை அரவணைத்து அவர்களை ஆதரிக்க வேண்டும். ஏனெனில் அனாதைகளை நாம் ஆதரிக்க வில்லையெனில் அவர்கள் கவனிப்பாரின்றி சரியான வழி காட்டல் இல்லாமல் திருட்டு, கொலை, கொள்ளை, விபச்சாரம் போதை பொருள் அருந்துதல் போன்ற பெரும் சமுக விரோத செயல்களில் ஈடுபட்டு மபெரும் குற்றவாளிகளாக மாறிவிடுவதோடு, சட்டத்திற்கும் பெரும்சவாலாக திகழ்வார்கள்.மாறாக அவர்களை அரவணைத்து அன்பு செலுத்தி, சரியான-நேரான வழியினை காட்டினால், ஒழுக்கம் நிறைந்த நல்லவர்களாக, சமுதாயத்திற்கும் பயனுள்ளவர்களாக, வளர்ந்து வருவார்கள். இது சமுதாயத்திற்கு நாம் செய்யும் மிகப் பெரிய நன்மையும் ஆகும்! அளப்பரிய இந்த நன்மையை ஒரு அனாதையின் காப்பாளர் செய்கிறார் என்பதால்தான், "அனாதைகளை ஆதரிப்போர் சுவனத்தில் என்னுடன் மிக நெருக்க மாக இருப்பார்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று கூறிவிட்டு சற்றே அமைதியானார் ஜமால் ஆலிம்.&lt;br /&gt;"அனாதைகளை ஆதரிப்போர் சில முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று மீண்டும் உபதேசத்தை தொடர்ந்த அவர், "சில சந்தர்ப்பங்களில் அனாதைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் விட்டு சென்ற சொத்துக்களும் இருக்க வாய்ப்புண்டு. அவர்களை பராமரிப்போர் அவர்களது சொத்துக்களையும் சேர்த்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அதனை கையாடல்-கபளீகரம் செய்ய நினைப்பது, வீண் விரயமாக செலவு செய்வது, அநியாயமாக உண்பது போன்ற எந்தக் குற்றத்தையும் செய்ய நினைக்கக் கூடாது. மாறாக தமது சொத்துக்களை போன்றே அதனையும் பாதுகாத்து, அவர்கள் பருவ வயதை அடைந்து, நிர்வகிக்கும் தகுதியும் வந்த பின் அவர்கள் வசமே அச்சொத்துக்களை ஒப்படைத்து விட வேண்டும்.அனாதைகளின் சொத்துக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என வழிகாட்டும் இறைவன், அச்சொத்துக்களை வீண் விரயம் செய்வோர், அநியாயமாக உண்போர் அடையும் தண்டனைகள் குறித்தும் குர்ஆனில் விவரித்துள்ளான். இதோ அந்த வசனங்கள்!"அனாதையின் சொத்தை அவர் பருவம் அடையும்வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்!..."(6:152) (17:34)&lt;br /&gt;"அனாதைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவர்களுக்காக நல் ஏற்பாடு செய்தல் சிறந்ததாகும். நீங்கள் அவர்களுடன் கலந்து வாழ்ந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்கள். சீர்படுத்துவோனையும், சீரழிப்போனையும் அல்லாஹ் அறிகிறான்" (2:220)"அனாதைகளை சோதித்துப் பாருங்கள்! அவர்கள் திருமணத்திற்குரிய பருவத்தை அடைந்து, அவர்களிடம் தகுதியையும் நீங்கள் கண்டால் அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். வீண் விரயமாகவும், அவர்கள் பெரியவர்களாகி விடுவார்கள் என பயந்தும் அவசரமாக அதைச் சாப்பிட்டு விடாதீர்கள்! செல்வந்தராக இருப்பவர் (அனாதையின் சொத்தைத் தொடாமல்) தன்மானம் காக்கட்டும். ஏழையாக இருப்பவர் நியாயமாக (பராமரிப்பதற்குரிய கூலியாக) சாப்பிடலாம். அவர்களின் சொத்துக்களை அவர்களிடம் வழங்கும் போது சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங் கள்! அல்லாஹ் கண்காணிக்கப் போதுமானவன்" (4:6)"அனாதைகளின் சொத்துக்களை அவர்களிடம் அளித்து விடுங்கள்! (அவர்களின் சொத்துக்களில்) நல்லதை (உங்களிடம் உள்ள) கெட்டதற்குப் பகரமாக மாற்றி விடாதீர்கள்! அவர்களின் சொத்துக்களை உங்கள் சொத்துக்களோடு சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப் பெரிய குற்றமாகும்" (4:2)&lt;br /&gt;"அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்போர், தமது வயிறுகளில் நெருப்பையே உண்ணுகின்றனர். நரகில் அவர்கள் நுழைவார்கள்!" (4:10)அனாதைகளின் சொத்துக்கள் விவகாரத்தில் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். நம்மில் பலர் இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல் தமது உறவுக்கார அனாதைகளின் சொத்துக்களையே அல்லாஹ்வின் அச்சமின்றி அபகரித்துக் கொள்கிறார்கள். இவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்" என்று உருக்கமாக கூறி முடித்தார் ஜமால் ஆலிம்.&lt;br /&gt;oOo&lt;br /&gt;அன்று அல்லாஹ்விடத்தில் ஓர் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். எனக்கும் இறைவன் செல்வத்தை வழங்கினால் அனாதைகளுக்கு அதனை வாரி வாரி வழங்க வேண்டும். ஜமால் ஆலிம் போன்றே அனாதைகளுக்கென்று வரும் எந்தப் பொருளையும் நாம் அனுபவிக்கக் கூடாது. என் போன்ற அனாதைகளுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருக்க வேண்டும் என்பதே அந்த உறுதி மொழி.படித்து வளர்ந்து ஆளாகி, சிறு தொழில் தொடங்கினேன். அண்ணன் அப்பாஸ், பத்து வருட மண வாழ்க்கைக்கு பின் மனைவி மரணம் அடைந்து விட்டதால் மறுமணம் செய்வதில் விருப்பம் இல்லாமல் மீண்டும் அனாதை இல்லத்திற்கே திரும்பி ஊதியமின்றி ஊழியம் செய்து வந்தார்.&lt;br /&gt;நான் விரும்பியது போலவே அல்லாஹ் எனக்கு செல்வத்தை வாரி வழங்கி விட்டான். பெரும் தொழில் அதிபர். சமூகத்தில் பெரிய அந்தஸ்து என எல்லாம் கிடைத்தது. நான் எடுத்துக் கொண்ட உறுதி மொழியை செயல் படுத்தியும் வந்தேன். ஆம்! என் செல்வத்தில் பெரும்பகுதியை அனாதைகளுக்கே வாரி வாரி வழங்குகிறேன். வசூல் செய்வது என்ற எந்த சிரமமும் ஜமால் ஆலிம் அவர்களுக்கு அறவே இல்லாமலாக்கி விட்டேன். வருடங்கள் உருண்டோடின. இன்று இந்த அனாதை இல்லம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து பல அனாதைகளுக்கு அடைக்கலம் தரும் ஒரு பெரிய நிறுவனமாக உருவாகி நல்ல முறையில் செயல்பட்டு வருகிறதே என்ற சிந்தனையில் சஞ்சரித்தபடி பள்ளிவாசல் அருகில் நின்று கொண்டிருந்த அஹ்மது பாய் அவர்களை, "என்னங்க அஹ்மது பாய் அங்கேயே நின்று விட்டீங்க! தொழுகை நேரம் முடியப் போகுது. சீக்கரம் வந்து தொழுகுங்க" என்ற பேஷ் இமாமின் சப்தம்தான் பழைய நினைவிலிருந்து மீள வைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;விரைந்து தொழுகையை நிறைவு செய்து விட்டு, தாமதத்திற்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டு, மன நிறைவோடு வீடு திரும்பினார் அஹ்மது பாய் அவர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2429059883685431265?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2429059883685431265/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_30.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2429059883685431265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2429059883685431265'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_30.html' title='நம் சகோதரர்கள்'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-1976011896368561190</id><published>2009-06-15T13:44:00.000+03:00</published><updated>2009-06-19T03:02:25.240+03:00</updated><title type='text'>பைக் பராமரிப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SjYpRNJJmYI/AAAAAAAAACI/0-_56oQMQvA/s1600-h/p1033.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347506983111596418" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 114px" alt="" src="http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SjYpRNJJmYI/AAAAAAAAACI/0-_56oQMQvA/s400/p1033.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SjYpQy-E27I/AAAAAAAAACA/hm5HjHS2Hlk/s1600-h/p1032.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347506976085826482" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 121px" alt="" src="http://4.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SjYpQy-E27I/AAAAAAAAACA/hm5HjHS2Hlk/s400/p1032.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SjYpQzmMsZI/AAAAAAAAAB4/LFG5cB7B--c/s1600-h/p103b.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5347506976254112146" style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 400px; CURSOR: hand; HEIGHT: 122px" alt="" src="http://4.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SjYpQzmMsZI/AAAAAAAAAB4/LFG5cB7B--c/s400/p103b.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கார்புரேட்டர் நல்ல மைலேஜ் கிடைக்க..&lt;/strong&gt;&lt;br /&gt;பெட்ரோல் வாகனங்களுக்கு, கார்புரேட்டர் என்ற சாதனம் இதயம் போன்றது. இதுதான் காற்றையும் பெட்ரோலையும் சரியான விகிதத்தில் கலந்து இன்ஜினுக்குள் அனுப்புகிறது. இதில், இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, கேபிள் மூலம் நேரடியாக இணைக்கப்பட்டு இயக்கப்படும் (Direct Slide Carburetor) டைரக்ட் சிலைடு கார்புரேட்டர். மற்றொன்று, காற்றழுத்தம் மூலம் இயங்கும் Constant Vacuum Carburetor) சி.வி கார்புரேட்டர். கலப்பட பெட்ரோல், தூசு, அழுக்கு போன்றவற்றால் கார்புரேட்டரின் செயல்பாடு பாதிக்கப்படும். இதை முறைப்படி சர்வீஸ் செய்து வந்தால் மைலேஜ், பர்ஃபாமென்ஸ் ஆகியவை சீராக இருக்கும். மோட்டார் சைக்கிளுக்கான டைரக்ட் சிலைடு வகை கார்புரேட்டரை சர்வீஸ் செய்வது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;1.முதலில் பெட்ரோல் டேங்கிலிருந்து வரும் பெட்ரோலை ஆஃப் செய்து, கார்புரேட்டரில் இருந்து பெட்ரோல் ட்யூப்பை அகற்றிவிடவும். கார்புரேட்டரின் கீழ்ப் பகுதியில் உள்ள டிரெய்ன் ஸ்குருவைத் தளர்த்தி, ஃப்ளோட் சேம்பரில் தேங்கி இருக்கும் பெட்ரோலையும் அகற்றுங்கள்.&lt;br /&gt;2.அட்ஜஸ்டபிள் ரென்ச்-ஐ வைத்து கார்புரேட்டரின் டாப் நட்டைத் தளர்த்தவும். ஏர் ஃபில்டர் மற்றும் இன்டேக் மேனிஃபோல்டில் இணைக்கப்பட்டு இருக்கும் கார்புரேட்டரின் கிளாம்புகளைத் தளர்த்தி, கார்புரேட்டரைத் தனியாக எடுக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;3.டாப் நட்டில் இருக்கும் ஸ்பிரிங், சிலைடு மற்றும் அத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஜெட் நீடில் ஆகியவற்றை ஆக்ஸிலரேட்டர் கேபிளுடன் கார்புரேட்டர் பாடியில் இருந்து அகற்றுங்கள்.&lt;br /&gt;4.கார்புரேட்டரின் கீழ்ப் பகுதியில் உள்ள ஃப்ளோட் சேம்பரின் நான்கு ஸ்க்ரூக்களையும் அகற்றி, ஃப்ளோட் சேம்பரின் மூடியை அகற்றவும். இதில் தேங்கியுள்ள கழிவுகளைச் சுத்தம் செய்யுங்கள்.&lt;br /&gt;5.உள்ளே இருக்கும் ஃப்ளோட், சிறிய பின் மூலம் பாடியில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பின்னை அகற்றி, ஃப்ளோட்டை கவனமாக தனியே எடுக்கவும். இதன் மேல் அமைந்திருக்கும் நீடில் வால்வை அது பொருந்திய இடத்தில் இருந்து அகற்றுங்கள்.&lt;br /&gt;6.நீடில் மற்றும் வால்வ் சீட்டை கார்புரேட்டர் ஸ்ப்ரே அல்லது பெட்ரோல் வைத்து நன்றாகச் சுத்தம் செய்யவும். நீடில் வால்வ் மற்றும் வால்வ் சீட்டின் இடையே ஏதாவது அழுக்குகள் இருந்தால், வால்வு சரியாக மூடாமல் பெட்ரோல் ஓவர் ஃப்ளோ ஆகிவிடும். எனவே, இதை நன்கு சுத்தம் செய்து சரியாகப் பொருந்துகிறதா என்று பார்ப்பது அவசியம்.&lt;br /&gt;7.மெயின் ஜெட் மற்றும் பைலட் ஜெட்களில் அடைப்பு இல்லாதவாறு கார்புரேட்டர் கிளீனிங் ஸ்ப்ரேவை உபயோகித்து சுத்தம் செய்யவும்.&lt;br /&gt;8.அதேபோல், கார்புரேட்டர் வெஞ்சூரியிலும் ஸ்ப்ரே செய்து சுத்தம் செய்யவும்.&lt;br /&gt;9.அகற்றிய கார்புரேட்டர் பாகங்களை, மீண்டும் அசெம்பிள் செய்து வாகனத்தில் பொருத்திய பிறகு, ஏர் ஸ்க்ரூ மற்றும் இன்ஜின் ஐட்லிங் ஸ்பீடு ஆகியவற்றை தேவைக்கேற்ப அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.&lt;br /&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;span style="color:#ff6666;"&gt;&lt;strong&gt;பாதுகாப்பு:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கார்புரேட்டரை அகற்றுவதற்குமுன்பு, இன்ஜின் நன்கு குளிர்ந்தநிலையில் இருக்க வேண்டும்.ஏனெனில், பெட்ரோல் கசிந்துசூடான இன்ஜின்மீது பட்டால்... தீவிபத்து ஏற்பட்டுவிடக்கூடும்.கார்புரேட்டரில் உள்ள சிறு சிறு பாகங்களைக் கவனமாக அகற்றி பத்திரமாக வைக்க வேண்டும்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-1976011896368561190?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/1976011896368561190/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_15.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/1976011896368561190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/1976011896368561190'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_15.html' title='பைக் பராமரிப்பு'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SjYpRNJJmYI/AAAAAAAAACI/0-_56oQMQvA/s72-c/p1033.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-4097167455282995039</id><published>2009-06-10T12:47:00.000+03:00</published><updated>2009-06-10T12:49:48.632+03:00</updated><title type='text'>இடமாறு தோற்றப்பிழை...!</title><content type='html'>&lt;a name="8010710192592514700" rel="nofollow"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நம் ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொன்றும் எப்படி இருப்பது நல்லது, சிறந்தது என்று வரையறை வைத்திருக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் எப்படி இருந்தால் சிறப்பு, நல்லது என்று ஒரு கற்பனை வடிவம் வைத்திருக்கிறோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு கணமும் அந்த வரையறையுடன் ஒப்பிடப்பட்டே தீர்மானிக்கப்படுகிறது. சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்தக் கற்பனை வடிவத்துடன் ஒப்பிடப்பட்டே நம்மால் நிர்ணயிக்கப் படுகிறான். இந்தக் கற்பனை வடிவத்திற்கு முழுமையாகப் பொருந்துகிற கணமும், மனிதனும் கிடையாது என்பதால் இந்த ஒப்பீடு துன்பத்திற்கு ஆணி வேராக இருக்கிறது. இதற்கு மேலும் கூடப் போகிறோம். முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியையும், தற்போது நடக்கும் ஒரு நிகழ்வையும் ஒப்பிட ஆரம்பிக்கிறோம். ஒரு மனிதனை இன்னொரு மனிதனுடன் ஒப்பிடுகிறோம். இந்த ஒப்பிடும் பழக்கம் நம் இரத்தத்தில் ஊறிப் போய் விடுகிறது. அதனால் என்ன தவறு என்று கூட சிலர் கேட்கலாம். இந்த ஒப்பிடும் பழக்கத்தால் நம்மால் நடப்பதை ரசிக்க முடியாமல் போகிறது, மனிதர்களைத் தனித்தன்மையை சிலாகித்து ஏற்றுக் கொள்ள முடியாமல் போகிறது என்பதே கசப்பான உண்மை.இதோ ஒரு காட்சி: ஒரு பௌர்ணமி இரவில் ஒரு அழகான குளம் நிலவொளியில் மின்னிக் கொண்டு இருக்கிறது. சில்லென லேசான காற்று அடிக்க, தொலைவில் இருந்து ஒரு புல்லாங்குழல் இசை இனிமையாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறது. அந்த ரம்மியமான சூழ்நிலையை ஒருவன் குளத்தின் கரையில் இருந்து ரசித்துக் கொண்டு இருக்கிறான். அந்த நேரம் பார்த்து ஒரு அழகான வெண்ணிறப் பறவை ஆகாயத்தில் பறந்து செல்ல அதன் பிரதிபிம்பம் குளத்தின் நீரில் விழ அந்த கணம் பூரண அழகு நிறைந்த ஒரு கச்சிதமான கணமாக அமைந்து விட்டது. குளக்கரையில் இருந்தவன் மெய்மறந்து அந்தக் கணத்துடன் ஐக்கியமாகி விட்டான். அதற்குப் பிறகு தினமும் இரவு அவன் அந்தக் குளக்கரைக்குப் போக ஆரம்பித்தான். பல நாட்களில் புல்லாங்குழல் இசை கேட்கவில்லை. சில நாட்களில் நிலவொளி இல்லை. சில நாட்களில் சில்லென்ற காற்று இல்லை. அந்த அழகான வெண்ணிறப் பறவையோ பின் எந்த நாளும் குளத்தின் மீது பறக்கவே இல்லை. அவன் அந்தக் கச்சிதமான கணத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்தக் குறைபாடுகள் பிரதானமாகத் தெரிய அவனால் பின் வந்த நாட்களின் இரவுகளை ரசிக்க முடியவில்லை. ஒரு நாள் அந்தக் குளத்தில் சில சிறுவர்கள் நீந்தி விளையாடிக் கொண்டு இருந்தார்கள். இன்னொரு நாள் சில அழகான மலர்கள் நீர்பரப்பில் மிதந்து கொண்டு இருந்தன. இன்னொரு நாள் ஒரு சிறு சத்தம் கூட இல்லாமல் அபூர்வமான மௌனத்தில் அந்தப் பகுதியே இருந்தது. இப்படி எத்தனையோ வித்தியாசமான, கூடுதல் அம்சங்கள் ரசிக்க இருந்தாலும் அவனால் ரசிக்க முடியவில்லை. காரணம் அவனை மெய்மறக்க வைத்த அந்த ஒரு இரவுடன் அவன் ஒவ்வொரு இரவையும் ஒப்பிட ஆரம்பித்தது தான்.எந்த ஒரு கணமும் அப்படியே திரும்ப நிகழப்போவதில்லை. அது இயற்கையின் நியதி. அப்படி நிகழும் என்று எதிர்பார்க்கும் போது, ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பிக்கும் போது மற்ற கணங்களின் தனியழகை, தனிப் பயன்பாட்டைக் காண முடியாமல் போகிறது. ஒவ்வொரு கணத்தையும் ரசியுங்கள். ஆனால் அதே போல திரும்ப வரமுடியாது என்பதை மறந்து விடாதீர்கள். அப்படி வந்து கொண்டிருக்குமானால் அதுவே நமக்கு சலித்து விடாதா? அதே போலத் தான் மனிதர்களும். ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்கள். உலகம் இயங்க அனைத்து வித மனிதர்களும் அவசியமானவர்கள். அதனால் ஒருவரைப் போல இன்னொருவர் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள். ஒவ்வொருவரையும் அவர்கள் இயல்பின் படியே ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரிடத்திலும் ஏதோ ஒன்று கற்றுக் கொள்ள இருக்கிறது. அதற்கு மதிப்பு கொடுத்து அவர்களைஅங்கீகரியுங்கள். ஒரே மாதிரி மனிதர்கள் மட்டுமே இருந்தால் உலகம் ஸ்தம்பித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற நாவலில் கதாநாயகி கல்யாணி தன் கணவனிடம் மிக அழகாகச் சொல்வாள். "நம்ம வீட்டில பூக்கற ரோஜாப்பூ இருக்கு பாருங்க... இதை நான் ரொம்ப ரசிக்கிறேன்... நீங்களும் ரசிப்பீங்க. ஆனா யாரும் ஒரு ரோஜாப்பூவை விமரிசனம் பண்றது இல்லை. இல்லைங்களா. ஒரு ரோஜாப்பூவிலே இன்னும் ஒரு இதழ் கூட இருந்தா தேவலாம்னோ, இந்த வாசனையோட கொஞ்சம் மல்லிகை வாசமும் கலக்காம இருக்கிறது ஒரு குறைன்னோ நாம்ப நினைக்காம இருக்கறதுக்குக் காரணமே நாம்ப ரோஜாவை ரோஜாவா எடுத்துக்கறது தான். அதைப் பத்திக் கற்பனைகளோ எதிர்பார்க்கிற காரியமோ இல்லை. நாம்ப ரோஜா கிட்டே எதிர்பார்க்கிறது ஒரு ரோஜா தான். அந்த மாதிரி மனுஷாள் கிட்டயும் இருந்திட்டா... அவங்க இருக்கற மாதிரியே அவங்களை ஒப்புத்துக்கறதுன்னு இருந்தா இந்த மாதிரி பிரச்னையே இருக்காது"நம் மனதில் உள்ள வரையறைகள் கற்பனையானவை. அதற்கு ஏற்ப நிஜத்தில் எதிர்பார்க்கும் போது நாம் ஏமாற்றத்தையே சந்திக்க நேர்கிறது. அதே போல ஒரு கணத்தைப் போல இன்னொரு கணமோ, ஒருவரைப் போல இன்னொருவரோ இருக்க முடியாது என்பதையும் நாம் நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். நமது மனம் வழக்கம் போல ஒப்பிட்டுப் பார்க்குமானால் அது முட்டாள்தனம் என்பதை அக்கணமே உணர்ந்து தெளிய வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே நாம் வாழ்க்கையை ரசிக்க முடியும். சந்திக்கும் மனிதர்கள் மூலம் பலனடைய முடியும். மன அமைதி பெற முடியும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-4097167455282995039?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/4097167455282995039/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_62.html#comment-form' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/4097167455282995039'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/4097167455282995039'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_62.html' title='இடமாறு தோற்றப்பிழை...!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2929778771113170640</id><published>2009-06-10T12:41:00.000+03:00</published><updated>2009-06-10T12:42:53.556+03:00</updated><title type='text'>தண்ணீர் தேசம்...!</title><content type='html'>&lt;a href="http://muruganthiru.blogspot.com/2009/03/blog-post_1623.html" rel="nofollow" target="_blank"&gt;கொள்ளை போகும் தண்ணீர்&lt;/a&gt;&lt;br /&gt; நமது பாரம்பரியச் செல்வங்களான இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியது சட்ட ரீதியாக அரசின் கடமையாகிறது. இந்த வளங்கள் அனைத்தும் பொதுச் சொத்து. எனவே, அவை மக்களின் பயன்பாட்டுக்கு உரியவையே ஒழிய இவற்றை தனியார் உரிமையாக மாற்றக் கூடாது. இந்த அம்சம் உலகின் பல நாடுகளில் பின்பற்றப்படும் நடைமுறை. ஆனால் நம் நாட்டில் நிலைமை தலைகீழாக இருக்கிறது.தமிழகத்தில் தண்ணீரை தனியார் மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பாக நம்மிடையே இரண்டு முக்கிய உதாரணங்கள் இருக்கின்றன. முதலாவது கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவில் உள்ளூர் நிர்வாகம், மக்களால் துரத்தியடிக்கப்பட்டு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நிலைகொண்ட கோக கோலா நிறுவனத் தொழிற்சாலை. இந்த ஆலை ஒரு லிட்டர் தண்ணீரை ஒரு ரூபாய்க்கும் குறைவான விலையில் தாமிரபரணியில் இருந்து உறிஞ்சி, ஒரு லிட்டர் தண்ணீரை 13 ரூபாய்க்கு திரும்ப நம்மிடம் விற்கிறது. வாயை மூடிக் கொண்டிருந்தால் எப்படியெல்லாம் கொள்ளை அடிக்க முடியும் என்பதற்கு இது உதாரணம்.அடுத்ததாக சென்னை மாநகர மக்களின் (மேல்தட்டு, தொழிற்சாலைகள், மத்தியதர வர்க்கம் என்று வாசிக்கவும்) பகாசுர தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள வயல்களின் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. இதை சட்டப்படியாக்கினால் கோக கோலா ஆலையைப் போலவே தனியார் நிறுவனங்களும், லஞ்சமாக அரசியல்வாதிகளும் சம்பாதிக்கலாம் என்ற என்ற திட்டம் தீட்டப்பட்டு வருகிறது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களின் மொத்த ஏஜென்டான உலக வங்கி திட்டம் தீட்டி மாநில அரசுக்கு அனுப்பியிருப்பதாகக் கேள்வி. இவை இரண்டும் தண்ணீரை கூறு போட்டு விற்பதற்கு நடந்த, நடக்கப் போகிற உதாரணங்கள். இத்துடன் ஒரு கேலிக்கூத்தையும் மாநில அரசு தற்போது அரங்கேற்றி வருகிறது. கடல் நீரை குடிநீராக்குகிறேன், ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்கள் என்று மத்திய அரசிடம் முதல் தவணை வாங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தையும் தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனமாக அல்லாமல், தண்ணீர் விற்பனை நிறுவனமாக பிற்காலத்தில் மாற்றிவிட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் வரிப்பணம் ஆயிரம் கோடி ரூபாயில் இந்த நாடகம் அரங்கேறுவதுதான் அவலம்.நாட்டிலுள்ள நீர்நிலைகளில் உள்ள குடிப்பதற்கு உகந்த தண்ணீர்தான் கடலில் சென்று கலக்கிறது. இதை சேகரித்து பயன்படுத்துவதை விட்டுவிட்டு, அதை மாசுபடுத்தி கடலுக்குள் கலக்கவிட்டு, பின்னர் அதையே சுத்திகரித்து நமக்குத் தருகிறார்களாம். இந்த நிறுவனத்தால் நமக்கு எந்தப் பயனும் இல்லை. கட்டாயம் காண்ட்ராக்ட் எடுத்தவர்களுக்கும் அரசியல்வாதிக்கும் கொள்ளை லாபம் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.பொதுச் சொத்தான தண்ணீரை எப்படி அரசும் தனியாரும் கூட்டாக நம்மிடம் "விற்கிறார்கள்" என்பதற்கு இவை எல்லாம் தெளிவான உதாரணங்கள்.தண்ணீர் விநியோகம்இது மட்டுமில்லை. மாபெரும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிப்பதற்கு தீட்டப்படும் திட்டங்கள் எல்லாமே அதிகாரம் மிக்கவர்கள், வசதிமிக்கவர்களுக்காகத்தான் உருவாக்கப்படுகின்றன. ஆனால் ஏழைகள் தாகத்தில் தவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தத் திட்டங்கள் எல்லாமே வரிப்பணத்தில் மேற்கொள்ளப்பட்டு தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள், பெரும் விவசாயிகளுக்கு பலனளிக்கின்றன.இவ்வளவு காலம் வளங்குன்றும் வகையிலான பல்வேறு மறைமுகத் திட்டங்கள் அல்லது உள்ளூர் அரசுகளை ஊக்குவித்ததன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையையும், தண்ணீர் மாசுபாட்டையும் உலக வங்கி வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறது. இன்றைக்கு தண்ணீர் பற்றாக்குறையை பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பாக மாற்றும் வேலையில் உலக வங்கி ஈடுபட்டு வருகிறது. உலக தண்ணீர் சந்தையின் மதிப்பு ரூ. 40,000,00 கோடி என்று உலக வங்கி மதிப்பிட்டிருக்கிறது.இதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று யோசிப்பவர்கள், கொஞ்சம் உட்கார்ந்து சிந்தித்தால் எல்லாம் புரிந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் பாட்டில் அல்லது கேன் குடிநீர் வாங்கிக் குடிப்பதைப் பற்றி யாராவது யோசித்திருப்போமா? போவோர் வருவோருக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்த, தண்ணீர் பந்தல் வைத்த பாரம்பரியத்தைச் சேர்ந்த நாம், இன்று காசு கொடுத்து தண்ணீர் வாங்கிக் குடிக்கிறோம். அந்த வகையிலேயே அரசு அடிப்படை உரிமைகளை மறுத்திருக்கிறது. குடிதண்ணீருக்காக ஒவ்வொருவரும் வரி செலுத்தும்போதும்கூட, குடிதண்ணீரை காசு கொடுத்தே வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு வாக்கில் உலகில் 250 கோடி பேர் பாதுகாப்பான குடிநீர் இன்றித் தவிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.. இதில் 30 சதவீதம் பேர் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் அரசு விநியோகிக்கும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும். அப்பொழுது உருவாகும் பற்றாக்குறையை பயன்படுத்தி லாபம் சேர்க்க தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.இப்படியாக தண்ணீர் மீதான உரிமையை தனியார் மயமாக்கி, அதை ஒரு விற்பனைப் பொருள் ஆக்குவது வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கும் அச்சுறுத்தல்களில் ஒன்று. ஏனென்றால் தண்ணீர் சுழற்சி என்பது வளங்குன்றாத வகையில் இருக்க வேண்டும் என்ற கடப்பாடுகளை மீறி, சந்தைத் தேவைக்கேற்ப சுரண்டப்படுவதால் தண்ணீருக்கான நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். பண்டைக் காலங்களில் இருந்தது போல தண்ணீரை பயன்படுத்துவதற்கும், சமஉரிமைப் படி பகிர்ந்து கொள்வதற்குமான உரிமை உள்ளூர் சமூகத்திடமே இருக்க வேண்டும்.தமிழகத்தில் தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்குவதன் தொடக்கமாக திருப்பூர் மாநகராட்சியில் தண்ணீர் விநியோகம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் குப்பை அப்புறப்படுத்தும் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது போல, இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 2002 ஆம் ஆண்டு நியூ திருப்பூர் டெவலப்மென்ட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ. 1273 கோடி ரூபாய் ஒப்பந்தம் 30 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை மகிந்த்ரா-மகிந்த்ரா, யுனைடெட் இன்டர்நேஷனல், வெஸ்ட் வாட்டர், பெக்டெல் ஆகிய நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த நிறுவனங்களில் மகிந்த்ராவைத் தவிர மற்ற மூன்றும் பன்னாட்டு நிறுவனங்கள். காட் விதிமுறைப்படி, இந்த நிறுவனத்தின் செயல்பாட்டில் திருப்தியில்லாவிட்டாலும்கூட, ஒப்பந்தத்தை மாநகராட்சி திரும்பப் பெற முடியாது.திருப்பூர் குடிநீர் விநியோகம் தனியார் மயமாகி உள்ளது முதல் கட்டம். ஓனிக்ஸ்-நீல் மெட்டல் பனால்கா போன்ற குப்பையள்ளும் வியாபாரத்தைப் போலவே, இந்த குடிநீர் விநியோக வியாபாரமும் மற்ற மாவட்டங்களுக்கும் தொற்றுவியாதி போல் விரைவில் பரவக்கூடும்.தொழிற்சாலைகள் சுரண்டல்இதுதவிர காலங்காலமாக மக்கள், விவசாயத்தைவிட தனியார் தொழிற்சாலைகளே தண்ணீரை சுரண்டிக் கொழுத்து வருகின்றன. தண்ணீர் பொதுச் சொத்து என்ற பெயரில், பெரும்பாலான நிறுவனங்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் தண்ணீரை பெற்று வருகின்றன. (ஆனால் பொதுமக்கள் கொட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்) நீர்வள ஆதார அமைச்சகத்தின் கணக்கீட்டின்படி, தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு இருபது ஆண்டுகளாக மாறவேயில்லை. ஆனால் மத்திய நீர்வள ஆதார அமைச்சகம் வசதியாக ஒரு விஷயத்தை மறைத்திருக்கிறது.. தொழிற்சாலைகள் பயன்படுத்தும் தண்ணீர் என்றால், அவை உறிஞ்சும் தண்ணீரை மட்டும் கணக்கிடுவது முறையற்றது. தொழிற்சாலைகள் அனைத்தும் தண்ணீரை மாசுபடுத்துகின்றன. அந்தத் தண்ணீரை ஆறு, குளம், வாய்க்கால், ஏரி, குட்டை, கடல் என்று பார்க்கும் இடமெல்லாம் திறந்துவிட்டு "பொதுச் சேவை" செய்து கொண்டிருக்கின்றன. சராசரியாக வெளியேற்றப்படும் ஒவ்வொரு லிட்டர் மாசுபட்ட தண்ணீருக்கு பதிலாகவும் 5-8 லிட்டர் மாசுபடாத தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. இதன்படி நாட்டில் பயன்படுத்தப்படும் மொத்த தண்ணீரின் அளவில் 35-40 சதவீதம் தொழிற்சாலைகள் பயன்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் இதை மறைத்துவிட்டு மக்கள் பயன்படுத்துவது அதிகம், விவசாயம் பயன்படுத்துவது அதைவிட அதிகம் என்று பலரும் பட்டியல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.தொழிற்சாலைகளுக்கும் சரி, தனிநபர்களுக்கும் சரி தண்ணீரை உரிய முறையில் சரியாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய அரசு விதிமுறைகள் கடுமையாக இருக்க வேண்டும். முதலாவதாக, தண்ணீர் பயன்பாட்டுக் கொள்கை என்பது பொது சுகாதாரம், தண்ணீர் கிடைக்கும்தன்மை சார்ந்தது. இரண்டாவதாக, திறன்மிக்க வகையில் தண்ணீரை பயன்படுத்தும் தொழிற்சாலை, மக்களை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டும். தொழிற்சாலைகள் பெறும் தண்ணீரின் அளவுக்கு ஏற்பவும், லாபத்தில் ஒரு பங்கையும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அப்படியில்லாமல், மக்களின் வரிப்பணத்தை வாரி தனியார் முதலாளிகளுக்குத் தருவதை எந்தச் சமூகமும் எதிர்த்தே நிற்கும்.தண்ணீர் உரிமைகளுக்காக போராடுவதுடன், தனிநபராக தண்ணீரை சேகரிப்பதில் நாம் நிறைய பங்காற்ற முடியும்.- ஒவ்வொரு மாதத்துக்கான தண்ணீர் கட்டணத்தை பரிசோதனை செய்யுங்கள். குடிநீர் மீட்டர் சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதியுங்கள்..- நீங்கள் நல்ல தண்ணீரை வாட்டர் டேங்கில் ஏற்றுபவராக இருந்தால் எத்தனை முறை மோட்டார் போட்டீர்கள் என்றும், லாரி மூலம் தண்ணீர் வரவழைப்பவர் என்றால் எத்தனை டேங்க் என்றும் கணக்கெடுங்கள்.- குடிநீரையும் காசு கொடுத்து வாங்குகிறீர்களா? அதற்கு ஆகும் கட்டணத்தை கணக்கிடுங்கள்.இவற்றை எல்லாம் செய்த பிறகு, எப்படி தண்ணீரை குறைவாகப் பயன்படுத்த முடியும் என்று திட்டமிட்டு செயலாற்றுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2929778771113170640?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2929778771113170640/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_10.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2929778771113170640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2929778771113170640'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_10.html' title='தண்ணீர் தேசம்...!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2091623350403561188</id><published>2009-06-04T21:02:00.000+03:00</published><updated>2009-06-04T21:30:54.989+03:00</updated><title type='text'>படிக்க...சிந்திக்க...!</title><content type='html'>&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;நன்றி : திரு.ஹரிதரன் சோமசுந்தரம்.(முன்னாள்  ஸ்பிக்  ஊழியர்  இணையக்குழுமம்)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="http://bp1.blogger.com/_m6hoB9oA8RE/RubCLvFXyhI/AAAAAAAAAB0/uOw81f4rrT4/s1600-h/tamilkodi2006_ee.jpg" rel="nofollow" target="_blank"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://jamalantamil.blogspot..com/2007/09/blog-post_11.html" rel="nofollow" target="_blank"&gt;பணம் தேடிச் செல்லும் பாய்மரங்கள் -வளைகுடா வாழ் தமிழர்கள் பற்றிய குறிப்புகள்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இரத்தம் தண்ணீரைவிடக் கனமானது, ஆனால் எண்ணையோ இவை இரண்டையும் விட கனமானது' என்றார் வளைகுடா பற்றி மார்க்சிய அறிஞரான பெர்ரி ஆண்டர்ஸன். பணம் இவை எல்லாவற்றையும்விட கணமானது என்ற நிதர்சனத்தை கூறுவதே இங்கு வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்களின் நிலை என்றால் மிகையாகாது. திரைக்கடல் ஓடி திரவியம் தேட சொன்னவனுக்கு இப்பணத்தின் கனம் தெரிந்திருக்கிது. இக்கனத்தை சுமக்க வளைகுடாவிற்கு ஏகிய தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் பற்றியதான இக்குறிப்புகளினூடாக அவர்களது வாழ்நிலை மற்றும் அது இந்திய மற்றும் தமிழ்ச் சமூகத்தின்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சிலவற்றை அவதானிக்க முயலலாம்.வளைகுடா என்பது சவுதி அரேபியா, குவைத், பஃஹ்ரைன், ஐக்கிய அரபுக் குடியரசு, கத்தர் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு புவி பரப்பாகும்। இந் நாடுகளுக்கிடையே உள்ள பாரசீக வளைகுடாவைக்கொண்டு இப்பெயர் வழங்கப்படுகிறது. 1960-ற்கு பின் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட எண்ணை வளம் இந் நாடுகளின் முகத்தையே மாற்;றி அமைத்தது. பொதுவாக பெட்ரோல் வளமிக்க நாடுகளாக இருப்பதுவே இந்நாடுகளின் பலமும் பலவீனமாகும். இந்நாடுகளை நோக்கி பிற நாட்டினர் தொழில்-ரீதியாகவும், வேலை வாய்ப்பிற்காக-வும் ஈர்க்கப்படுவதற்கும், அமேரிக்கா இந்நாடுகளை தொடர்ந்து போர்ப் பதற்றத்திற்குள் வைத்திருப்பதற்கும் இதுவே காரணம். உலகப் பொருளாதாரத்தை தீர்மாணிக்கும் நாடுகளாக இவை இருப்பதற்கு காரணமான இப்பொருளியல் வளமே, இந்நாடுகளின் அரசியலையும், அதிகார அமைப்பையும் தீர்மாணிப்பதாக உள்ளது. பாரம்பரிய அரசாட்சிமுறைகளே பெரும்பாலான வளைகுடா நாடுகளின் ஆட்சிமுறையாக இருக்கிறது। விலக்காக குவைத், கத்தார் போன்ற நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் ஆட்சி அமைப்பில் இருந்தபோதிலும், மன்னராட்சி என்பது பிரதானமானதாக உள்ளது. சென்ற ஆண்டு முதல் சவுதி அரேபியாவும் கூட வட்டார அதிகார குழக்களை உருவாக்க தேர்தல் முiறையை கடைப்பிடிக்கத் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தல் முறையில் பெண்களுக்கு ஓட்டுரிமை இல்லை என்பதால் சவுதியின் முக்கிய நகரங்களில் ஆண்களும், பெண்களும் முதன்முறையாக அரசுக்கு எதிராக ஊர்வலம் போனார்கள். சவதியில் ஊர்வலம் போவதும் அரசுக்கு எதிரான கருத்துக்களை ஜனநாயகரீதியாக எடுத்துச் செல்லவும் முடியாத ஒரு அரசதிகார முறையே உள்ளது. இந்நாடுகளின் இத்தகைய ஆட்சிமுறையை மேற்கத்திய நாடுகள் பழமைவாதம் என்று விமர்சித்த போதிலும், இம் முறையை கட்டிக் காப்பதில் அவை தீவிரமாக இருக்கின்றன. உலகின் ஜனநாயக ஏற்றுமதியின் மொத்த வியபாரியாக தன்னை பாவித்துக் கொள்ளும் அமேரிக்கா இந்நாடுகளின் அரசாட்சியைக் கட்டிக்காப்பதற்காக தனது பாதகாப்புச்செலவில் கணிசமான தொகையை ஒதுக்குகிறது. காரணம் இந்நாடுகளின் எண்ணை வளத்தை சுரண்டுவதற்கு இத்தகைய அமைப்பே அவைகளுக்கு அவசியப்படுகின்றன. சவுதி அரேபியாவில் மட்டும் உலக எண்ணை வளத்தின் 25 சதவீதமும், ஓமனில் 10 சதவீதமும் உள்ளது. எண்ணை வளமற்ற துபாய் போன்ற நாடுகள் கட்டற்ற சர்வதேச சந்தையாக தன்னை மாற்றிக் கொண்டு தனது பொருளாதார வளத்தை ஈடுகட்டிக் கொள்கின்றன. சர்வதேச நிருவனங்களின் வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் நிர்வாக அலுவலகங்கள் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான கடல் தளமாகவும் துபாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.. துபாயின் இந்த வளர்ச்சியின் விளைவாக, வீடுகள், மணைகள் வாங்குவதற்கு அவ்வரசு வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கி உள்ளது. வளைகுடா நாடுகளில் வெளிநாட்டினர் சொந்தமாக எந்த வியபாரமும் செய்யமுடியாது, துபாய் தவிர இதர நாடுகளில் சொத்தும் வாங்க முடியாது. இந்தியர்கள் உள்நாட்டினரின் பெயரிலேயே எந்த ஒரு தொழிலையும் செய்யமுடியும் என்பதால் இந்தியர்களின் முதலீடு என்பது ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி பாதுகாப்பற்ற நிலையிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் பெரும் அளவில் தொழில் தொடங்க முடியாத நிலை இருப்பதால் நட்சத்திர ஓட்டல்கள், தொழில் துறைகள், வியபார சந்தைகள் ஆகியவற்றில் பங்கீட்டாளர்களாக இருந்து கொண்டு வரும் வருமானத்தை இந்தியாவில் முதலீடு செய்வதற்கும், அதிகமான அந்நிய செலாவணியை இந்நாடுகளில் இருந்து இந்தியா பெறுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.இந்நாடுகளின் போக்குவரத்து, தகவல் தொடர்பு வலைப்பின்னல், பொதுத்துறைக் கட்டிடங்கள் போன்ற அடிப்படைக்கட்டுமானத்தை உருவாக்கியது இந்திய குறிப்பாக தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திராவைச்சேர்ந்த தொழிலாளர்களே. இந்நாடுகளின் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் இவ்வடிப்படைக் கட்டுமானங்களுக்கு வெளிநாட்டினரையே நம்பி உள்ளன. இந்திய தொழிலாளிகள் குறைந்த கூலிக்கு கிடைப்பதால், பெருமளவில் இந்திய தொழிலாளர்கள் இங்கு பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்நாடுகளின் உருவாக்கத்தி;;ல் இந்தியர்களின் பங்கு பிரதானமானது.வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய நாடான சவுதி அரேபியாவின் மக்கள்தொகை 2005-ன் கணக்கின்படி 26 மில்லியன், அதாவது 2 கோடியே 60 லட்சம், தமிழகத்தின் மக்கள் தொகை 6-கோடி 2 லட்சத்துடன் (2001-ன் கணக்கின்படி) ஒப்பிட்டால் இது எவ்வளவு குறைவு என்பது புரியும்। சவுதி அரேபியாவின் பரப்பளவான 22 லட்சத்து 40 ஆயிரம் சதுர கிலோமீட்டருடன் தமிழக நிலப்பரப்பான 13 ஆயிரத்து 58 சதுர கிலோமீட்டரை ஒப்பிட்டால், சவுதியின் பரந்த மக்கள் நெருக்கடியற்ற நிலையை புரிந்து கொள்ள முடியும். இதர வளைகுடாநாடுகளின் மொத்த மக்கள் தொகை 1 கோடிக்கும் குறைவானதே. இம்மனிதவளக் குறைவே வெளிநாட்டினரை பிரதானமாகக் கொண்டு இயங்கும் நாடுகளாக இந்நாடுகளை உருவாக்கியுள்ளது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்றவர்களின் பற்றாக்குறையால், இந்நாடுகளில் பணிபுரியும் துறைசார்ந்த இந்திய வல்லுனர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு இருந்தாலும், மொத்த இந்தியர்களின் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் 70 சதவீதமும், அலுவலகப் பணியாளர்கள் 20 சதவீதம், தொழில்துறை சார்ந்த வல்லுனர்கள் 10 சதவீதமும் உள்ளனர். வளைகுடாவில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை மட்டும் இந்திய அயல் உறவுத்துறை கணக்கின்படி தோராயமாக 4 மில்லியன் (அதாவது 40 லட்சம்) ஆகும். அமேரிக்காவிற்கு பிறகு இந்தியாவுடன் மிகப்பெரிய தொழில் உறவு கொண்ட நாடுகள் இவை. இந்தியப் பொருள்களை இறக்கமதி செய்யும் இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக இந்நாடுகள் உள்ளன. இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் எண்ணை மற்றும் எரிவாயுவை ஏற்றுமதி செய்யும் நாடுகளும் இவையே. 2002-03-ல் இந்தியாவிற்கு வந்த அந்நிய செலவாணி இந்நாடுகளில் இருந்து மட்டும் 14.8 பில்லியன் டாலர் (தோராயமாக 74,000 கோடி இந்திய ரூபாய்களில்). இவற்றில் பெரும்பாலானவை தொழிலாளர்கள் மற்றும் அரைத்தொழிலாளர்களால் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது. காரணம் தனியர்களாக உள்ள இவர்கள் வரும் வருமானம் அனைத்தையும் தாய்நாட்டில் உள்ள தனது குடும்பத்திற்கு அனுப்பிவிடுகிறார்கள் என்றபோதிலும், இத்தொழிலாளர்களின் நிலமை இந்நாடுகளில் மட்டுமின்றி தாய்நாட்டிலும் மோசமான நிலையிலேயே இருப்பது கண்கூடு.இங்கு பணி புரிபவர்களிடமிருந்து இந்திய அரசு பெறும் வருட அந்நிய செலவாணி 5 பில்லியன் டாலர்கள் (தோராயமாக 35,000 கோடி ரூபாய்கள்- றறற।வாநிநniளெரடயஙயவயச.உழஅ). இது மற்;ற ஐரொப்பிய, அமேரிக்க நாடுகளில் பண்புரிபவர்களின் வருமானத்தைவிட மிக அதிகமானதாக இருந்தபோதிலும் ஏனோ இந்திய அரசு வளைகுடாவில் பணிபுரியம் இந்தியர்களை பிறநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களைப்போல நடத்துவதில்லை என்று அக்டோபர் 10, 2003-ல் இந்திய பிரதமர் வாஜ்பேய்க்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார் Global Organization of People Indian Origin (GOPIO), INC டாக்டர் தாமஸ் அப்ரகாம். நிலமையும் அதுதான். பொதுவாக வளைகுடாவில் பணிபுரிபவர்கள் பற்றிய சமூக மதிப்பீடு என்பது ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிபவர்கள் மதிப்பீட்டைவிட குறைவாக இருப்பதையே காண்கிறோம். உண்மையில் இந்திய அரசுத்தரப்பிலும், வளைகுடா நாடுகளின் அரசுத்தரப்பிலும் பாதுகாப்பற்ற ஒரு வாழ்க்கையே வளைகுடாவில் வாழும் இந்தியர்களின் நித்hசனம். சர்வதேச விதிமுறைகளை எதுவும் பின்பற்றாத, மனித உரிமை மீறல்களையும் கொண்ட ஒரு பணியிடத்தையே இந்நாடுகளில் நாம் எதிர்கொள்கிறோம். வளைகுடா வாழ்க்கை என்பது உடல் உழைப்பாளர்களாக இருக்கும் தொழிலாளிகளுக்கு ஓர் மலர்படுக்கை அல்ல. ஒரு அறைக்குள் குறைந்தது 4 பேர்கள் தங்கும் சுகாதாரமற்ற இறுக்கமான வாழிடங்கள். 10-மணிநேர கடின உழைப்பு போன்ற பிரச்சனைகள் பொதுவாக இருப்பதை மிகச்சரியாக சுட்டிக்காட்டுகிறது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட குழுவினரின் அறிக்கையும்.வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்கள் பற்றிய இந்தியர்களின் பார்வையும்கூட மேற்கத்திய நாடுகள் அரேபிய சமூகங்கள்பற்றி கட்டமைத்துள்ள ஒரு பார்வையே நிலவுகிறது. அதாவது நாகரீகமற்ற, படிப்பறிவற்ற, முன்கோபம் கொண்ட முரட்டுத்தனமான கீழைத்தேயர்கள். இப்பார்வை மேற்கத்திய நாடு;களில் பணிபுரிபவர்-களுக்கு கீழ்நிலையான ஒரு மதிப்பீட்டை வளைகுடாவில் பணிபுரிபவர்களுக்கு வழங்குவதாகிறது.. இது 'மேற்கத்தியம்' தன்னை உருவாக்கிக்கொள்ள கடந்த சில நூற்றாண்டுகளாக உருவாக்கிய ஒரு அரசியல் பார்வையாகும். இப்பார்வைக்கு இந்தியர்களான நாமும் பலியாகியிருப்பதையே இது காட்டுகிறது. மேற்கத்திய நாடுகளிலிருந்து வளைகுடா நாடுகள் ஒரு பண்புரீதியான மாற்றத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அது, இங்கு நிற வேறுபாடு பார்க்கப்படுவதில்லை. வெளிநாட்டினர் உள்ளுர்காரர் என்கிற முரண்பாடு முக்கியமானதாக பார்க்கப்படுவதில்லை. மேற்கத்திய மற்றும் அமேரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் வெள்ளைநிற வெறியால் ஒரு பதற்றத்திற்குள் வைக்கப்பட்டிருப்பதை ஒப்புநொக்கினால், வளைகுடா நாடுகளில் வசிப்பவர்கள் நிலை அத்தனை மோசமில்லை என்று உணரலாம்.பிரதானமாக இஸ்லாமிய மதத்தைக்கொண்டதாக இருந்தாலும் இந்நாடுகளில் பிற மதங்கள் மீது ஒரு நிருவனரீதியான வன்முறை என்பது இல்லை। பிற மதத்துவேஷம் தனிப்பட்ட மனிதர்களின் நிலைப்பாடாக சில இடங்களில் வெளிப்பட்ட போதிலும் அது ஒரு பிரதானபோக்காக இல்லை। உண்மையில் இந்நாடுகள் இஸ்லாம் மதத்தை ஒரு ஆதிக்க கருத்தியலாக பின்பற்றகின்றனவே தவிர இந்தியர்கள் நினைப்பதைப்போல இஸ்லாமையோ அம்மதத்தினரையோ பாதுகாப்பது இவற்றின் நோக்கம் அல்ல. பாலஸ்தீனம், ஈராக் மற்றும் ஆப்கான் பிரச்சனைகளில் இந்நாடுகள் குறைந்தபட்ச மனிதநேய நிலைப்பாட்டையோ அல்லது அந்நாடுகளில் கொல்லப்படுவது இஸ்லாமியர்கள் என்பதற்காகவேனும் குறைந்தபட்சம் மதரீதியான நிலைப்பாட்டையோ எடுக்கவில்லை என்பதும் இவற்றின் மத அபிமானத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இந்நாடுகள் தன்னை பாதுகாத்துக்கொள்ளக்கூட அமேரிக்காவின் உதவியை நாடும் சுயச்சார்பற்ற நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன என்பது மற்றொமொரு அரசியல் உண்மை. இந்நாடுகள் தங்களிடம் உள்ள பொருளாதார வளத்திற்கு சுயச்சார்புள்ள பாதுகாப்பிற்கான தொழிற்கூடங்களைக்கூட உருவாக்கிகொள்ளவில்லை என்பதே யதார்த்தம். ஆனால், இந்தியாவிலிருந்து வரும் இந்து மதத்தை சேர்ந்தவர்களிடையே ஆதாரமற்ற பதற்றமும், ஒரு அச்சமும் நிலவுகிறது। இவ்வச்சம் அடிப்படையற்றது என்றாலும் இது வாய்வழிக் கதைகள் மூலம் கட்டமைக்கப்பட்டதாகவே உள்ளது. இக்கதைகள் புழங்காத பொது இடங்களோ அறைகளோ குறைவு எனலாம். அதுபோன்றே இந்தியாவிலிருந்து வரும் இஸ்லாமியர்கிளிடையே ஒரு ஆதாரமற்ற பெருமிதமும் நிலவுவதை பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் பெரும்பாண்மை மற்றும் சிறுபாண்மை அரசியல் கணக்கீடுகள் இந்நாட்டில் எதிர்மறையாக அமைந்திருப்பது மட்டுமின்றி இஸ்லாமியர்களுக்கான நாடு என்கிற கருத்தாக்கம் தரும் பாதுகாப்பு எனலாம். இந்த மனமுரண் உருவாக்கும் இறுக்கம் அல்லது எதிர்-உணர்வானது இவர்களை மத அடிப்படைவாதிகாளாக மாற்ற முனைகிறது. வளைகுடாவிலிருந்து குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்து வரும் இந்தியர்களிடையே இந்த மனநிலையின் தாக்கத்தை உணரமுடியும். இது இந்திய இந்து மற்றும் இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகளை வளர்த்துவிட ஏதுவாகிறது. வளைகுடாவில் வாழும் தமிழர்கள் பற்றியும் அவர்களால் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பாக அதாவது வளைகுடா தமிழர்கள் பற்றிய ஒரு தனிச்சிறப்பான சித்திரத்தை காட்டும் முகமான நிகழ்வுகளை தொகுக்க முடியாததற்கு இரண்டு காரணங்களைச் சுட்ட முடியும்। 1. அத்தகைய நிகழ்வுகள் பெருவாரியாக நடைபெறுவதில்லை. 2. அப்படி நடக்கக்கூடிய நிகழ்வுகளை தொகுப்பதறக்கான தரவுகள் மற்றும் தொடர்புகளும் அரிதாகவே காணப்படுகிறது. இங்கு இணையத் தரவுகள்வழிப் பெற்ற சில குறிப்புகள் இந்நாடுகளை அருகில் சென்று அறிந்து கொள்ள உதவும். இந்நாடுகளில் மிகப்பெரிய பரப்பையும், வளத்தையும் கொண்டது சவூதி அரேபியா। இங்கு மட்டும் பணிப்புரியும் இந்தியர்கள் எண்ணிக்கை 2001-ன் கணக்கின்படி 15 லட்சம். இது சவுதி மக்கள் தொகையில் 7 சதவீதம் ஆகும். தற்போது இது பெரும் அளவில் அதிகரித்திருக்கிறது. வளைகுடா நாடுகளிலேயே மிக அதிகமான இந்தியர்களைக் கொண்ட நாடு இது. இந்தியாவிற்கு மட்டும் இந்நாட்டிலிருந்து வரும் வருட அந்நிய செலாவனி 4 பில்லியன் அமேரிக்கன் டாலர் (சுமார் 2,000 கோடி ரூபாய்). இது ஒரு தனிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் தொகைகளிலேயே அதிகபட்ச தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்பாட்டு நிகழ்வுகள், ஒருங்குகூடல், பண்டிகை கொண்டாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகள் பிற வளைகுடா நாடுகள் போல சவுதி அரேபியாவில் இல்லை என்பதும் மற்றொரு காரணம், சம்பாரிக்கும் பணத்தை அப்படியே இந்தியாவிற்கு அனுப்புவதற்கு. இஸ்லாம் தவிர்த்த எல்லா பொது நிகழ்வுகளும் தூதரக வளாகத்தில் நடைபெறு-வதைத்தவிர பிற பொது இடங்களில் நடைபெறுவதில்லை. இலக்கியமன்றங்களும், நிகழ்வுகளும் சாத்தியமற்ற நிலையில் இலக்கியம் சார்ந்த நபர்களை கண்டடைவதும் சாத்தியமற்ற நிலையே உள்ளது. தமிழர்களுக்கு என்று இலக்கிய சங்கங்கள் இருந்தபோதிலும் அதன் நிகழ்வுகள் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவின் 50-வது பொன்விழா ஆண்டை, மற்ற மொழிச்சங்கங்கள் ஒரு விழாவாக கொண்டாடியபோது, தமிழர்கள் மட்டும் இரண்டு சங்கங்களாக இரண்டு விழாக்காளாக கொண்டாடிய தமிழின தேசிய ஓருமைப்பாட்டை என்னவென்று சொல்வது. சவுதி அரேபியா அரசதிகார அமைப்பும் மத அதிகார அமைப்பும் 3-விஷயங்களில் தனது கண்காணிப்பை குவிமையப்படுத்தியுள்ளது। 1. கம்யூணிஸம் 2. செக்ஸ்வாலிட்டி 3. பிறமத வழிபாடுகள். இவைகள் வெளிப்படையாக மறுக்கப்பட்டிருப்பதால் செக்ஸ்வாலிட்டி மற்றும் பிற மத வழிபாடுகள் மறைமுகமாக தனது இயக்கங்களை நிகழ்த்தி வருகின்றன எனலாம். இவ்வாறு 'வெளிப்படையான காமவெளி' மறுக்கப்பட்டிருப்பதால், ஒடுக்கப்பட்ட தனிமனிதனின் பாலியல் வேட்கைகைள் பதிலீடாகஇ நீலப்படங்கள் மற்றும் இந்திய சினிமாக்கள் பார்த்தல், பாலியல் குறித்த பேச்சுக்கள் என வெளிப்பாடு கொள்ள முனைகிறது. நீலப்படங்களின் சுற்றுவட்டம் ஒரு பெரும் வலைப் பின்னலைப் போல இயக்கம் கொள்கிறது. பாலியல் ஆற்றல்களை பல பாலியில் புனைவுகளை உருவாக்கி கதைப்பதன் மூலம் தணிக்க முயல்வதால், தனியர்களின் அறைகள் புனைவுகளால் திணறுவதைக் காணலாம். அரபிகள் பற்றியும், அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்களை தவறாக பயன்படுத்துவது முதல் அரபி பிள்ளைகள் உறவுகளுக்குள்ளேக்கூட உறவு வைத்துக் கொள்வது வரையில் இக்கதைகள் புனையப்பட்டு உலாவருவதுடன், தங்களது நாட்டில் நிகழ்ந்தாக தன்னை உள்ளடக்கிய புனைவுகளையும் திரித்து பேசி மகிழ்வது என்பது இவ்வகை காம நோய்க்கு நன்மருந்தாக இருக்கிறது எனலாம்.சவுதி அரேபியாவின் தண்டனை முறை குறித்தும் நிலவும் தப்பெண்ணங்களில் ஒன்று அதன் தலைவெட்டும் தண்டணை. இது கொலை, போதைப்பொருள் விற்பனை மற்றும் வன்பாலுறவு (கற்பழிப்பு) போன்றவற்றிற்கே அளிக்கப்படுகிறது. அதுவும் மிகக்குறிப்பான ஆய்வுகளுக்கு பின்பே. குற்றவாளி மனப்பூர்வமாக ஒப்புக்கொள்தல் அல்லது சரியான நேர்சாட்சிகள் மூலம் மட்டுமே தீக்மானிக்கப்படுகிறது. இறுதி தீர்ப்பு பாதிக்கப்பட்டவரின் முடிவிற்கு விடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது கொலையுண்டவனின் மணைவியோ அல்லது அவனது குடும்பத்தினரோ மன்னிப்பதன் மூலம் கொலையாளி விடுதலை செய்யப்பட்டு விடுகிறான். இது வெறும் மன்னிப்புடன் முடிந்துவிடாது, 'பிளட்-மணி' (ब्लड money) எனப்படும் அரசு நிர்ணயிக்கும் தொகையோ அல்லது கொலையுண்டவனின் மணைவி அல்லது குடும்பத்தினர் கேட்கும் தொகையோ கொலை செய்தவன் ஈடாக அளிக்க வேண்டும். அத்தொகை கொலையுண்டவனின் குடு;ம்பத்திற்கு அளிக்கப்பட்டுவிடுகிறது.மரணதண்டனை என்பது மனிதவிரோத செயல், அதற்கான உரிமை யாருக்கும் இல்லை என்பது ஓருபுறமிருக்க, அத்தண்டணையேக்கூட பிற ஜனநாயக நாடுகளில் நடைபெறுவதைப்போலத்தான் இங்கும் நடைபெறுகிறது। சிறைக்குள் நடத்தப்படும் தூக்குதண்டனை என்பதற்கு பதிலாக இஸ்லாமிய ஷரியத்தை பின்பற்றி தலைவெட்டுதல் என்பது ஒரு சடங்குச்செயல் போல் பொது இடங்களில் நடத்தப்படுகிறது. சுpறைச்சாலை என்கிற சமூக கண்காணிப்பு எந்திரத்தின் ஒரு திறந்தவெளிச் செயலே இது. பிற நாடுகளில் இது சிறைக்குள் நிகழ்த்தப்படுகிறது. ஒருமுறை சவுதி தலைநகரான ரியாத்தில் ஒரு தலை வெட்டு நிகழ்வை காண நேர்ந்தது। அதற்கு முன்புவரை, எனது கற்பனையில் தலைவெட்டு நிகழ்வுபற்றி பலரிடமும் கேட்டிருந்த கதைகளே இருந்தது. அதாவது ஒரு நபரை மனிதர்கள் கூடும் ஒரு இடத்தில் வைத்து தலையை ரத்தம் சொட்ட, சொட்ட வெட்டி தொங்க விடுவார்கள். அதனை பள்ளி செல்லும் குழந்தைகளை அழைத்து வந்து காட்டுவார்கள் என்பதாக. ஆணால், நான் பார்த்தது வேறு. ஒரு மைதானம், அது இரவுகளில் குழந்தைகளும் பல குடும்பங்களும் கூடும் ஒரு பூங்காவைப்போன்ற ஒன்று. பலமுறை அதே இடத்தில் நண்பர்களுடன் அமர்ந்து இரவுகளில் பேசிக்கொண்டும் இருந்திருக்கிறேன் நான். அதன் அருகே ஒரு செயற்கை நீரூற்றும் உண்டு. இரவுகளில் வண்ண விளக்குகளுடன் அந்நீரூற்று நீரைத்தூவிக்கொண்டிருக்கும். அந்த இடம்தான் தலைவெட்டும் இடம் என்பது அன்றுதான் எனக்குத் தெரியும். மைதானத்தில் பார்வையாளர்களான நாங்கள் நின்ற இடத்திற்கும் தலைவெட்டும் அம் மையத்திற்கும் இடையில் 100 அல்லது 150 மீட்டர் இடைவெளியிருக்கும். எங்களுக்கு முன்பாக ராணுவத்தினரின் ஒரு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது. அதனால் அங்கு நிகழ்பவை துல்லியமாக தெரியவில்லை. முகஅடையாளம் காணமுடியாத ஒரு இடைவெளி அது. அம்மைதானத்தின் மையத்தில் நீரூற்றுக்கு அருகே, ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது। மைதானத்திற்குள் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. அதிலிருந்து ஒரு நபரை இறக்கினார்கள். அந்நபர் அரை மயக்கத்தில் இருந்தார். தள்ளாடிய அவரை இரு காவலர்கள் கைத்தாங்கலாக அழைத்துவந்து அந்நாற்காலியில் அமர்த்தினர். அவரது முகம் கருப்புத் துணியால் மூடப்பட்டது. அவரது இரண்டு கைகளையும் தனித்தனியாக ஒரு கயிற்றால் கட்டி அக்கயிரை இரண்டு மருத்துவ உதவியாளர்கள் இழுத்துப்பிடித்துக் கொண்டனர். அவரது கால்களையும் அதேபோல் இரு கயிறகளால் கட்டி இருவர் பிடித்துக் கொண்டனர். அவரைச்சுற்றிலும் காவல் உயர் அதிகாரிகள் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் நீதித்துறை அலுவலர்கள் என ஒரு 10 அல்லது 15 நபர்கள் நின்ற கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் ஒலிபெருக்கியில், தலைவெட்டப்படுபவரது குற்றம் மற்றும் அதற்கான தண்டனை ஆணை வாசிக்கப்பட்டது. பிறகு ஒருவர் கத்தியை அமர்ந்திருக்கும் அவரது கழுத்தின் மீது வைப்பதை பார்த்தோம். அடுத்த சில விணாடிகளில் அருகில் உள்ள ஆம்புலன்ஸ் அவரது உடலை தூக்கி வைத்துக் கொண்டு பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றது. மருத்தவ உதவியாளர்கள் அவ்விடத்தை சுத்தம் செய்யத்துவங்கினர். அடுத்த அரை மணிநேரத்தில் அங்கு சிறுவர்கள் சைக்கிள் விட்டுக் கொண்டும், கால்பந்து விளையாடிக் கொண்டும் இருந்தனர். நானும் அவ்வழியைக்கடந்து எனது வேலைக்காக அருகில் உள்ள 'பத்தா'- எனும் கடைவீதிக்குச் சென்றேன். 2001-ன் கணக்கின்படி 6-லட்சம் மக்கள்தொகையைக்கொண்ட பஃஹ்ரைனில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 1,30,000 ஆகும்। இது அந்நாட்டு மக்கள் தொகையில் 20 சதவீதம் ஆகும். எண்ணை வளம் மட்டுமின்றி வளைகுடா நாடுகளின் மையப் பகுதியல் அமைந்திருப்-பதால் தகவல்தொடர்பிற்-கான அடிப்படைக் கட்டு-மானங்களின் மூலம் வருமானம் ஈட்டுகிறது. சில இந்தியர்கள் குடியுரிமைப் பெற்று நிரந்தரமாக இந் நாட்டில் தங்கி உள்ளனர். தேன்னிந்தியர்கள் முக்கி-யமான வியபாரங்களில் ஈடுபட்டுள்ளனர். 43- இந்திய சமூகப்பண்பாட்டு அமைப்புகள் இயங்கு-கின்றன. 5-இந்தியப் பள்ளிகள் உள்ளன. இந்திய அமைப்புகளுக்-கான கூட்டமைப்புக் குழு-என்கிற அமைப்பின் கீழ் இவ்வமைப்புகள் இயங்குகின்றன. இஸ்லாம் அல்லாதவர்களின் மத வழிப்பாட்டுத் தலங்களை அனுமதித்து இருப்பதால் இந்தியர்களால் 5-கிறித்துவ ஆலயங்களும், ஒரு இந்துக் கோவிலும், 3-குருத்துவாராக்களும் கட்டப்பட்டுள்ளன. 22 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில் 2,94,000 இந்தியர்கள் இருக்கிறார்கள். இது குவைத்தின் மக்கள் தொகையில் 13-சதவீதம் ஆகும். குவைத்துதான் மதன்முதலாக இந்தியர்களை வரவழைத்து பணிபுரிவதற்கான முன்மாதிரியை அமைத்துக் கொடுத்த நாடு. இங்கு 100-க்கும் மேற்பட்ட இந்திய பண்பாட்டுக் அமைப்பகள் உள்ளன. மொழி, வட்டாரம், தொழில் மற்றம் நிகழ்வுகள் அடிப்படையில் இக்கழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவிலிருந்து பிரபலமானவர்களை வரவழைத்தும் அல்லது குவைத் வாழும் இந்தியர்களினைக் கொண்டும் பல பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களை நடத்தவென இந்தியக் கலை வட்டம் என்கிற அமைப்பினா 1,200 பேர் அமர்ந்துக் காணக்கூடிய ஒரு அரங்கை நிர்மாணித்துள்ளனர்;. 9-இந்தியப்பள்ளிகள் இந்திய அரசு அனுமதியுடன் இந்திய தூதரகத்தின் மேற்பார்வையில் நடத்தப்படுகின்றது.எட்டுத்தலைமுறைகளுக்கு மேலாக சில இந்தியக் குடும்பங்களைக் கொண்ட ஒமானின் மக்கள்தொகை 23 லட்சமாகும்। இங்கு உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 3,11,000. இது இந்நாட்டு மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது 14-சதவீதம் ஆகும். 7-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியர்-களுடன் இந் நாட்டிற்கு தொடர்பு இருப்பதை வரலாறு சுட்டிக் காட்டுகிறது.. அரபுநாடுகளில் வெளிநாட்டி-னருக்கு குடியுரிமை வழுங்கும் ஒரே நாடு இதுதான். ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியுரிமைப்பெற்ற இந்தியர்கள் இங்கு வசிக்-கிறார்கள். தினசரி பூஜை நடத்தக்கூடிய இரண்டு இந்துக் கோவில்கள் தலைநகர் மஸ்கட்டில் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு கோவில் நூறு ஆண்டுகள் பழமைக் கொண்டது. 2 குருத்வாராக்கள் 7 கிறித்துவ ஆலயங்கள் உள்ளன. 2,000-த்திற்கும் மேற்பட்ட இந்திய மருத்துவர்கள் இந்நாட்டில் பணிபுரிகிறார்கள். 14-இந்தியப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 25-தனித்தனியான இந்தியப் பண்பாட்டு அமைப்புகள் இயங்கி வருகின்றன. இக்குழுக்கள் எல்லாம் ஓமனின் சட்டப்படி 'இந்தியன் சோஷியல் கிளப்' என்கிற ஒரு அமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 5,25,000 மக்கள்தொகை-யைக் கொண்ட கத்தரில் இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 1,30,000 ஆகும். இது அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 24 சதவீதம் ஆகும். 1,200 கோடி ரூபாய் வருடாந்திர அந்நிய செலாவனியைத் தரும் இந்நாடு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை இந்திய மருத்துவர்கள், பொறியியலாளர்கள் போன்ற தொழில்துறை வல்லநர்களை கொன்டுள்-ளது. 5-இந்தியப்பள்ளிகள் உள்ளன. இந்திய தூத-ரகத்தால் அனுமதிக்கப்பட்ட 50-இந்திய சமூக-பண்பாட்டு அமைப்புகள் உள்ளன. இவை இந்திய பண்பாட்டு விழாக்களை முன்நின்று நடத்துகின்ற அமைப்புகளாகும்.அமீரகம் என்று தமிழில் அழைக்கப்படும் 1971-ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய அரபுக் குடியரசு நாடுகளான துபாய், அபுதாபி, ஸார்ஜா உள்ளிட்ட நாடுகள் 19-ஆம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன் இருவழி உறவு கொண்ட ஒரு நாடாகும்। மோத்த மக்கள் தொகை 29 லட்சம் ஆகும். 9 லட்சம் இந்தியர்கள் இந்நாட்டில் உள்ளனர். இது அந்நாட்டு மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது 30-சதவீதம் ஆகும். இதுவே வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களில் மிகப்பெரும் சதவீதம் ஆகும். சுற்றலாவிற்கான மையமாக இந்நாடு குவிமையப்படத்தப்படுவதால் எண்ணற்ற கண்ணைக்கவரும் கட்டிடங்களையும் பொழுதுபோக்கு பூங்காக்களையும் கொண்டுள்ளது. அழுகுபடத்தப்பட்ட கடற்கரையும், கடல்நடுவில் கட்டப்பட்ட நட்சத்திர ஓட்டல்களும் உலக மக்களைக் கவரும் ஒரு முக்கியமான மையமாக உள்ளது. 30 இந்தியப்பள்ளிகள் உள்ளன. கோவில்கள், குருத்வாராக்கள், கிறித்துவ ஆலயங்கள் உள்ளன. பல பண்பாட்டு அமைப்புகள் செயல்பட்டு வருவதுடன் அவை நிறைய பொழுதுபோக்கு நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.துபாய், ஓமன், கத்;தர், குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளின் தமிழ் சங்கங்களின் வருடாந்திர ஒன்று கூடல் மற்றும் நிகழ்வுகளை பிரபலப்படுத்தி தொடர்ந்து செய்து வருகின்றன। தமிழகத்திலிருந்து நடிகர்கள், பிரபலமானவர்களைக் கொண்டு இவை நடத்தப்படகின்றன. ஆணால், சவுதியின் நிலமை வேறு. அந்நாடுகளைப்போல பிரபலமாக எதுவம் இங்கு நடத்தப்படுவதில்லை.. பொழுதுபோக்கு நிகழ்வுகளை ஒப்பிட்டால் பிற நாடுகளைவிட சவுதியில் ஒன்றுமே இல்லை என்பதுதான் நிதர்சனம். சவுதி தமிழர்களின் வாழ்வை பங்கிட்டுக் கொண்டிருப்பது தொலைக்காட்சிப் பெட்டிகளும், திருட்டு வி.சி.டி-களும், செயற்கைக்கோள் ஆண்டனாக்களும், செல் போன்களும்தான். இந்தியப்பள்ளிகள் வழியாக சில பண்பாட்டு நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. 2006-ல் சவுதியில் இந்தியர்கள் ஆரம்பித்திருக்கும் மற்றொரு லாபகரமான வியபாரம் இந்தியாவைப்போல தனியார் பள்ளிகள். எண்ணற்ற தனியார் பள்ளிகள் இந்திய குழுந்தைகளக்காக நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகள் சில ஒன்றுகூடல்கள் மற்றும் கலை நிகழ்வுகளை நடத்திவருகின்றன.இதைத்தவிர நிறைய அமைப்புகள் மொழிரீதியாக, வட்டாரரீதியாக, தொழில்ரீதியாக பொதுவானவர்களைக்கொண்டு அமைந்துள்ளன। இவைகள் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஈடுபடுவதாகவோ அல்லது தங்களது அமைப்பின் எல்லைக்குள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்வதற்கானதாகவும் உள்ளன. சில நேரங்களில் இந்தியாவில் நடைபெறும் நிகழ்வகளின் எதிர்விளைவாக சில அமைப்புகள் உருவாக்கப் படுவதுண்டு. உதாரணமாக சுணாமியன்போது சிலநபர்கள் ஒன்றகூடி அமைப்பாக செயல்பட்டு தமிழ் மக்களுக்கு உதவிகளை வசூலித்து அனுப்பியதைக் கூறலாம். இன்றைய வளைகுடா நாடுகள் ஒரு பான்-அரேபிய பண்பாட்டை கொண்டதாக அமைந்துள்ளன. இந்நாடுகள் இஸ்லாமிய மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. இதுவே இந்நாடுகளின் வாழ்தளத்தை தீர்மாணிக்கும் காரணியாக அமைகிறது. வேறுபட்ட பண்பாடுகளையும், வரலாற்றுச் சூழலையும், அரசியல் அமைப்பையும் கொண்ட இந்நாடுகள் பெட்ரோல் மற்றும் இஸ்லாமால் ஒருபடித்தான பண்பாட்டு அமைப்பு போன்ற தோற்றத்தை தருவதாக உள்ளது. 7-ஆம்-நூற்றாண்டில் அரேபியாவில் உருவான இஸ்லாமிய பேரரசு இன்றைய வளைகுடா நாடுகளை உள்ளடக்கி வளர்ந்தது. கிழக்கில் சீனா மற்றும் இந்திய எல்லைகள் முதல் வடக்கில் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கில் ஸ்பெயின் வரை நீண்டுகிடந்த ஒரு பேரரசு. இது அரேபிய பண்பாட்டையும் பிற நாடுகளின் பண்பாட்டையும் கலந்த ஒரு கலப்பு பண்பாட்டை உருவாக்கியது. இக் காலத்தில் அரேபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க மற்றும் லத்தின் தத்துவ, விஞ்ஞானம் பற்றிய பல பிரதிகள் ஸ்பெயின் நாடு வழியாக ஐரொப்பியாவிற்கு சென்றது. இப்பிரதிகள் கிரேக்க லத்தின் தத்துவம் பற்றிய அறிமுகங்களை உலகிற்கு வழங்கின. ஒருவகையில், இன்றைய ஐரொப்பிய பண்பாடும் அதன் அடிப்படை சிந்தனைகளான கிரேக்க மற்றும் லத்தின் தத்துவார்த்த உலகப்பார்வைகளும் அரேபிய சமூகங்களின் வழியாகவே சென்றடைந்தன எனலாம். ஸ்பெயின் ஐரொப்பிய அரேபிய பண்பாட்டு கலப்பிற்கான மையமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக வளைகுடா நாடுகளின் வாழ்தளம் மற்றும் வாழ்க்கைச் சூழல் என்பது ஒருபடித்தானது அல்ல। இது பாரிய வேறுபாட்டை இந்நாடுகளில் பணியாற்றும் வெளிநாட்டினரின் குறிப்பாக இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் வாழ்க்கசை;சூழலில் ஏற்படுத்துவதுடன் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை அவர்களது தாய்நாடுகளின் வாழிடத்திலும், அவர்களது மன அமைப்புகளிலும் உருவாக்குகிறது. இன்னும் குறிப்பாக அவர்களது மன அமைப்பை வார்ப்பதில் இது பெரும் பங்கைச் செலுத்துகிறது.ஐரொப்பிய நாடுகளைப்போல இந்நாடுகளில் வாழும் வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்கப்படுவதில்லை। ஓமனில் குடியுரிமை அனுமதித்த போதிலும், அந்நாட்டில் 20-ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும் மற்றும் அந்நாட்டைச் செர்ந்த பெண்ணை மணந்திருக்க வேண்டும். குறிப்பாக மற்ற அரபுநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கே அது சாத்தியம் என்பதால் இந்தியர்கள் இந்நாடுகளை ஒரு பணம் சம்பாதிக்கும் தற்காலிக குடியிருப்புகளாகத்தான் பயன்படுத்துகிறார்கள். அதனால் தங்களது; உழைப்பை விற்று ஊதியத்தை முற்றிலுமாக தனது தாய்நாட்டில் சேமிக்கும் ஒரு மனோநிலையே இவர்களிடம் அமைந்துள்ளது. இச்சேமிப்பு மனோபாவம், வாழ்வை ஓரு குறிப்பிட்ட தி;ட்ட அமைப்பிற்குள் வாழ நிர்பந்திக்கிறது. அல்லது தனது இச்சைகளை, ஆசைகளை, வேட்கைகைளை கட்டுப்படுத்தவும், அதனை தள்ளிப்போட்டு அந்த இச்சைகளை தனது தாய்நாட்டில் வாழ்ந்து கொள்ளலாம் என்பதாக வாழ்க்கைக் காலத்தை சம்பாரித்து சேமிப்பதற்க்கானதாகவும், செலவழித்து அனுபவிப்பதற்கானதாகவும் ஆன இரண்டு காலங்களாக பிரித்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறது. இந்நிர்பந்தம் மனதை ஓரு பிளவுபட்ட நிலையில் கட்டமைக்கிறது. இப்பிளவு இருவெறுபட்ட சமூக அடையாளங்களுக்குள் இயங்குவதாக அமைகிறது. ஒரு சமூகம் வேட்கைகளை நிறைவு செய்வதற்கானதாகவும், பிறிதொரு சமூகம் வேட்கைகளை ஒடுக்குவதாகவும் அல்லது தள்ளிப்போடுவதாகவும் உள்ளது. பிற நாடுகளில் ஓரளவு இறுக்கமற்ற சூழல் நிலவினாலும், குறிப்பாக சவுதி அரேபியாவில் வாழும் இந்திய மற்றும் தமிழருக்கு இது பொறுந்தும். இவர்கள் தாய்நாட்டைப்பொறுத்தவரை ஒரு எதிர்புரட்சிகர பிற்போக்கு சக்திகளாக மாறுவதற்கு இம்மனநிலையே ஒரு காரணமாக அமைகிறது.மதஅடையாளத்தை அடிப்படையாகக்கொண்டு இயங்கும் இச்சமூகங்களில், இயங்கும் இந்திய உடல்களும் மத அடையாளங்களை உவந்து பெற்றுக்கொள்ளும் ஒரு இயங்கியலை புரிந்துகொள்வது அவசியம்। இங்கு பெறும் மத அடையாளம் இந்திய அரசியலில் ஓரு குறிப்பிடத்தக்க பாதிப்பை உருவாக்குவதாக உள்ளது. குறிப்பாக இந்திய மத அடிப்படைவாத அமைப்புகளுக்கு பொருளாதாரரீதியாக உதவக் கூடியவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். தங்களது பண்பாட்டு, மொழி, தேச அடையாளத்தை நிரூபித்துக் கொள்ள இந்திய அரசியலின் பிற்போக்கு சக்திகளை வளர்க்கும் பணியைச் செய்பவர்களாக இருக்கிறார்கள். இங்கிருப்பவர்கள் தங்களது அடையாள நெருக்கடியை தீர்த்துக்கொள்ள தனது தாய்நாட்டின்மீது அதீத பற்றைக் கொண்டவர்களாகவும், தாய்நாட்டின் மீது ஒரு விமர்சனமற்ற பார்வையும், அதன் எல்லா பிற்போக்குத்தனங்களையும் ஆதரிக்கும் நிலைக்குத்தள்ளப்படுகிறார்கள். இவ்வாறாக, தாய்நாட்டு ஏக்கம் தேசப்பற்றாக பரிணமிக்கிறது. இதன் மற்றொரு விளைவாக இவர்களது மதப்பற்றும் அதிகரிக்கிறது. ஊரில் கோவிலுக்கோ அல்லது பள்ளிவாசலுக்கோ செல்லாதவர்கள்கூட இங்கே தனது இறைவழிப்பாட்டை தீவிரப்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். இந்தியர்கள் எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சனை வளைகுடா நாடுகள் சொந்த நாட்டு மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை பயிற்றுவித்து வெளிநாட்டினரின் எண்ணிக்கையை குறைக்கமுயல்வதாகும்। சில நாடுகள் அரசுசார் நிறுவனங்களில் சொந்த நாட்டினரை 100 சதவீதம் பணிக்கு அமர்த்தியிருப்பதுடன், எல்லா தனியார் நிறுவனங்களும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் சொந்த நாட்டினரை பணிக்கு வைப்பதை கட்டாயமாக்கி உள்ளன. உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்துவராத நிலையில் பணியடங்களை உள்நாட்டினரைக்கொண்டு நிரப்புவதும், ஓரு தனிப்பட்ட நாட்டினரை அதிகமாக நிரப்பாமல் பல்வேறு நாட்டினரைக்கொண்டு நிரப்புவதும், குறிப்பிட்ட நாட்டினரின் எண்ணிக்கையைக் குறைப்பதிலும் ஈடுபட்டுள்ளன. இது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாகும். இந்தியர் என்ற கண்ணோட்டத்தில் இது நம்மை பாதிக்கும் என்றாலும், இதன்மூலமே அந்நாடுகளும் சுயமாக தன்னை தக்கவைத்துக் கொள்ளும் என்பதுதான் முக்கியம். இதன் தொடர்ச்சியாக இந்நாடுகள் தங்களை ஒர் அரேபிய தேசியமாக வளர்த்துக் கொண்டு, நாடுகளாக உள்ள இவை தேசங்களாக மாறும்போது, அது உலக அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தையும் தாக்கத்தையும் செலுத்துவதாக இருக்கும். அமீரகமயமாக்குதல், சவுதிமயமாதல் என்கிற செயல்பாட்டிற்கான துவக்கம் 2015-ற்குள் முற்றுப்பெருவதற்கான முயற்சிகளில் அமீரகம் மற்றும் சவுதி அரேபியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலை ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு காண்பது போல 2020-ல் இந்திய வல்லரசு நாடாக மாறுவதற்கு முன்பு ஒட்டுமொத்தமாக வளைகுடாவிலிருந்து திரும்பும் இந்தியார்களால், நெருக்கடியைச் சந்திக்குமா? அல்லது வேறு வழிகளில் அதனை சமாளிக்குமா? என்பதுதான் சிந்திக்க வேண்டிய ஒன்று.-ஜமாலன்01-01-௨00௭&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#009900;"&gt;குறிப்பு: இககட்டுரை தமிழ்கொடி என்கிற மலருக்காக எழுதப்பட்டது. உலகின் தமிழர்கள் வாழும் நாடுகளினைப்பற்றிய ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்ட மலர் அது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2091623350403561188?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2091623350403561188/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_04.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2091623350403561188'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2091623350403561188'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post_04.html' title='படிக்க...சிந்திக்க...!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-7452197081886051163</id><published>2009-06-04T20:49:00.000+03:00</published><updated>2009-06-04T20:56:35.627+03:00</updated><title type='text'>படித்ததில் பிடித்தது...!</title><content type='html'>&lt;span style="color:#660000;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;புறம் பேசுவது, தனது சகோதரனின் உடலின் ஒருபகுதியை உண்பது போல அருவருப்பானது.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#660000;"&gt;-இஸ்லாமிய நெறி&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://enganeshan.blogspot.com/2009/05/blog-post_11.html" rel="nofollow" target="_blank"&gt;இது நல்லதல்ல. நியாயமுமல்ல!&lt;/a&gt;&lt;br /&gt;சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை....""நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?""அதில்லை...""இதைத் தெரிந்து கொள்ளா விட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?""இல்லை""இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?""அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது."ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?""ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா? இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்து விடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-7452197081886051163?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/7452197081886051163/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/7452197081886051163'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/7452197081886051163'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/06/blog-post.html' title='படித்ததில் பிடித்தது...!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-3202631690167366611</id><published>2009-05-19T18:57:00.000+03:00</published><updated>2009-05-19T19:31:17.148+03:00</updated><title type='text'>கவிதையாக ஒரு குறள்.</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt; &lt;span style="font-size:85%;"&gt;குழலினிது யாழினிது என்பதம் மக்கள் &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;span style="color:#000099;"&gt;             மழலைச்சொல் கேளா தவர்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="font-size:85%;"&gt;                                                       -'தெய்வப்புலவர்' திருவள்ளுவர்&lt;/span&gt;.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span&gt; &lt;span style="color:#000000;"&gt;உறங்குகிற குழந்தையை இரசித்தல் பாவம் என்றொரு நம்பிக்கை பரவலாக இருக்கிறது.மன அழுத்தம் என்கிற பிரச்சினை வேலை,தொழில் போன்ற வெளி வாழ்க்கையில் சகலமாக எல்லோரும் எதிர்கொள்கிற ஒரு விசயம்.நமக்குப்பழக்கமான அல்லது நாம் பெற்ற குழந்தைகளை தொட்டுக்கொஞ்சுவது,யாரோ பெற்ற குழந்தை அறிமுகமில்லாமல் இல்லாமலேயே நமது கையசைப்புக்கு பதிலாக கையசைத்து புன்னகைக்கும்போது மனம் இலேசாக உணர்கிறோமே!.அந்த மழலை மொழிகளையும்,புன்முறுவல்களையும் வாழ்க்கை என்னும் வழிச்செலவுக்கு சேமித்து வைத்திருப்போம்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;   &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-3202631690167366611?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/3202631690167366611/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/05/blog-post_19.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/3202631690167366611'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/3202631690167366611'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/05/blog-post_19.html' title='கவிதையாக ஒரு குறள்.'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-6443283349544181681</id><published>2009-05-13T21:42:00.000+03:00</published><updated>2009-05-17T12:15:34.848+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிராமத்து மின்னல்'/><title type='text'>சம்பு தோட்டத்துக்கு விசிட்...!</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SgsVQBk03_I/AAAAAAAAABY/N4jttBtTybY/s1600-h/pasu.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 400px; FLOAT: right; HEIGHT: 300px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5335381548595470322" border="0" alt="" src="http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SgsVQBk03_I/AAAAAAAAABY/N4jttBtTybY/s400/pasu.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;இந்த பசுவும் கன்றும் எங்களுக்கு பல ஆண்டுகள் பால் வார்த்த பசுக்களின் சந்ததிகள்.விடிந்தும் விடியாத காலைப்பொழுதில் நான் பால் வாங்கிவர செல்வேன்.நான் சென்றவுடன் பால்கறந்து நுரை ததும்ப இளஞ்சூடாக,பரிசுத்தமாக இருக்கும்.இப்போதைய வேக வாழ்க்கையில் இயற்கையை விட்டு தூர விலகிப்போனது நினைத்துப்பார்க்க இலேசு.கொடுத்து வைத்த, மீண்டும் கிடைக்க ஏங்கும் நாட்கள்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-6443283349544181681?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/6443283349544181681/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/05/blog-post_8192.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6443283349544181681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/6443283349544181681'/><link rel='alternate' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/05/blog-post_8192.html' title='சம்பு தோட்டத்துக்கு விசிட்...!'/><author><name>தா.ஜபருல்லாஹ்</name><uri>http://www.blogger.com/profile/13625643407969783913</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SfMZG-rd6wI/AAAAAAAAAAM/wy3GkKCYkss/S220/Forest+Flowers.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/SgsVQBk03_I/AAAAAAAAABY/N4jttBtTybY/s72-c/pasu.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6667976281746407781.post-2555350110522559167</id><published>2009-05-13T13:22:00.000+03:00</published><updated>2009-05-17T12:17:27.452+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பள்ளி நினைவுகள்'/><title type='text'>என் வகுப்பறை!</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/Sgqfh0rJRVI/AAAAAAAAABQ/0qV9h5pUzQc/s1600-h/ghss,olm.jpg"&gt;&lt;img style="MARGIN: 0px 0px 10px 10px; WIDTH: 320px; FLOAT: right; HEIGHT: 240px; CURSOR: hand" id="BLOGGER_PHOTO_ID_5335252111997879634" border="0" alt="" src="http://1.bp.blogspot.com/_fXdeCwsQZ7c/Sgqfh0rJRVI/AAAAAAAAABQ/0qV9h5pUzQc/s320/ghss,olm.jpg" /&gt;&lt;/a&gt; சென்ற டிசம்பர் 2008விடுப்பில் ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளி சென்றோம்.அது மாலைபொழுது.தலைமை ஆசிரியர் மற்றும் ஓய்வு பெறப்போகும் தமிழாசிரியை திருமதி.சண்முகவடிவு அவர்களையும் சந்தித்தோம்.படத்திலிருப்பது நான் எட்டாம் வகுப்பு படித்த வளாகம்.அந்த கட்டிடமே சிதிலமடைந்து காணப்பட்டது.&lt;br /&gt;பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் பட்டியலில் எங்கள் கிராமத்து மாணவனின் பெயரைக்கண்டபோது பெருமையாக இருந்தது.ஆக்கபூர்வமாக பள்ளிக்கு நற்செயல் புரிய தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.இறைவன் நாடினால்!&lt;br /&gt;பள்ளியில் படித்து நல்லநிலையில் இருக்கும் பலரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.எங்களையெல்லாம் மேலேற்றிவிட்ட,தற்போது ஒய்வுபெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கவேண்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6667976281746407781-2555350110522559167?l=erode-jafarulla.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://erode-jafarulla.blogspot.com/feeds/2555350110522559167/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://erode-jafarulla.blogspot.com/2009/05/blog-post_13.html#comment-form' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6667976281746407781/posts/default/2555350110522559167'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogg
