புதன், 10 ஜூலை, 2013

ரமதான் மாதமே வருக !

புனிதமிகு இரமதான் மாதத்தை அடைந்துவிட்டோம்.இது இறைவனின் பெரும் கருணையாகும்.இம்மாதத்தின் மாண்பு என்னவென்றால் இஸ்லாமியத்தின் ஐம்பெரும் தூண்களில் ஒன்றான 'ஜக்காத்' எனப்படும் மார்க்க வரியை, அதைப்பெற தகுதியான மக்களிடம் முறையாக தருவதற்கு ஏற்ப்புடைய காலம்.அதற்க்கான மனநிலையைப்பக்குவப்படுத்தும் 'நோன்பு' கடைபிடிப்பதும், பசியின் தாகம் மற்றும் பசி தீர்க்க வல்ல இறைவனின் கிருபைகளுக்கு நன்றி தெரிவிக்க மற்றும் போற்றுதலுக்குரிய இறைவனை அதிகதிகமாக நினைந்துருகவும் ஏற்ற தருணம்.உள்ளத்தூய்மை,மனக்கட்டுப்பாடு ஆகியவற்றை பரிட்சித்துப் பார்க்க ,நிரந்தரமாக நடைமுறைப்படுத்த ஏற்ற மாதம்.