வெள்ளி, 29 ஜனவரி, 2010

கறிமீன் பொலிச்சது...!

கறிமீன் பொலிச்சதுசெய்முறை:சின்ன வெங்காயம், வெந்தயம், கடுகு, காஷ்மீர் சில்லி பௌடர், கறிவேப்பிலை, புளி, உப்பு இவற்றை தேவைக்கு ஏற்ப அரைத்து மசாலாவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு காய்ந்த தேங்காய் எண்ணெயில் சிறிது கடுகு, கறிவேப்பிலையைப் போட்டு வறுத்தவுடன் அரைத்த கலவையைக் கொட்டி தண்ணீர் கொஞ்சம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.பின்பு,கழுவிய மீனை நன்றாக சமையல் எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொண்டு வேக வைத்த மசாலாவில் போட்டு நன்றாக மீனைத் திருப்ப வேண்டும். இப்படித் திருப்பும் போது மசாலா வாணலியில் அதிக சூட்டில் அடுப்பிலேயே இருக்க வேண்டும்.இது முடிந்த பின்,வறுத்த மீனை எடுத்து வாழை இலையில் மடித்து எண்ணெய் இடாமல் வாணலியை சூடுபடுத்தி அதில் இந்த வாழைஇலை மீனை வைத்து நன்றாக சூடுபடுத்த வேண்டும். இலை வதங்கியவுடன் அப்படியே எடுத்துப் பரிமாறினால் கறிமீன் பொலிச்சது தயார்.ஸ்பெஷல் ஐட்டங்கள் ப்ளஸ் ரேட்:1. கறி மீன் பொலிச்சது சுமார் 200 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை மீனின் நீளத்திற்கு ஏற்ப கிடைக்கும்.2. மத்தி ஃப்ரை ரூபாய் 1203. ஐலா மீன் பொலிச்சது ரூபாய் 1254. நண்டு ரோஸ்ட் ரூபாய் 1556. கொஞ்சு ஃப்ரை (எறால்) ரூபாய் 1657. கனவா மீன் ரூபாய் 160கடற்கரய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக