புதன், 13 மே, 2009

என் வகுப்பறை!

சென்ற டிசம்பர் 2008விடுப்பில் ஒலகடம் அரசு மேல்நிலைப்பள்ளி சென்றோம்.அது மாலைபொழுது.தலைமை ஆசிரியர் மற்றும் ஓய்வு பெறப்போகும் தமிழாசிரியை திருமதி.சண்முகவடிவு அவர்களையும் சந்தித்தோம்.படத்திலிருப்பது நான் எட்டாம் வகுப்பு படித்த வளாகம்.அந்த கட்டிடமே சிதிலமடைந்து காணப்பட்டது.
பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் பட்டியலில் எங்கள் கிராமத்து மாணவனின் பெயரைக்கண்டபோது பெருமையாக இருந்தது.ஆக்கபூர்வமாக பள்ளிக்கு நற்செயல் புரிய தலைமை ஆசிரியர் கேட்டுக்கொண்டார்.இறைவன் நாடினால்!
பள்ளியில் படித்து நல்லநிலையில் இருக்கும் பலரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.எங்களையெல்லாம் மேலேற்றிவிட்ட,தற்போது ஒய்வுபெற்ற ஆசிரியர்களை கௌரவிக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக